search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai Karthigai Deepam"

    • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
    • கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு மலையுச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று பெயர் சூட்டி சிவனாக வணங்கி வருகின்றனர். பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்நிலையில், இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு மலையுச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படும்.
    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 19-ந் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

    அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் காட்சி அளிக்கும். இதற்காக கோவிலில் இருந்து தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட திரி மற்றும் நெய் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது.

    தீபத்திருவிழாவின் போது ஏற்றப்படும் மகா தீபத்தை அன்று நேரில் வந்து பார்க்க இயலாத பக்தர்கள் மகா தீபம் காட்சி அளிக்கும் மற்ற நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மகா தீபத்தை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று 10-வது நாளாக மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டபோது சாலையில் நின்ற பக்தர்கள் மகா தீபத்தை தரிசனம் செய்து வணங்கினர். தொடர்ந்து மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் 11-வது நாளான இன்று (திங்கட்கிழமை) இரவுடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். பின்னர் கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு தீப மை வைக்கப்படும்.

    பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் தீப மை வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் ெதரிவித்தனர்.
    நேற்று இரவு அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் உலா நடைபெற்றது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் விழா நாட்களில் மாடவீதியில் நடைபெறும் தேரோட்டம், சாமி வீதி உலா ஆகியவை ரத்து செய்யப்பட்டு, கோவிலின் 5-ம் பிரகாரத்திலேயே நடைபெற்றது.

    கடந்த 19-ந்தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கடந்த 20-ந்தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 21-ந்தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நேற்று முன்தினம் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடந்தது.

    நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று இரவு கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று இரவு சுப்பிரமணியர் உற்சவமும், நாளை சண்டீகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 19-ந்தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் இன்று 4-வது நாளாக பக்தர்களுக்கு காட்சி தருகிறது.

    திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் கோவில் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தனர். அப்போது அருணாசலேஸ்வரர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து இரவில் பிரம்ம தீர்த்த குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

    இன்று இரவு சுப்பிரமணியர் உற்சவமும், நாளை சண்டீகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா நாளையுடன் முடிவடைகிறது. நேற்று ராஜ அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் பிரகார உலா வந்தார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 19-ந்தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து நேற்று முன்தினம் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

    வழக்கமாக மகாதீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்ட பிறகு 2-வது நாள் காலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட அண்ணாமலையார் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோர் கிரிவலம் வருவார்கள்.

    கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சாமி கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக நேற்று காலையில் அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவ உலா கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது.

    அப்போது அருணாசலேஸ்வரருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழா நாட்களில் சாமி உலா செல்லும் நிகழ்ச்சி வாகனத்தில் நடைபெற்றது.

    நேற்று அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் உலா செல்லும் நிகழ்ச்சி திருவூடல் நிகழ்ச்சியை போன்று சாமி தூக்கும் பக்தர்கள் சாமியை சுமந்தபடி சென்றனர்.

    தொடர்ந்து நேற்று இரவில் பிரம்ம தீர்த்த குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவ உலாவுடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.
    கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலைக்கு வர முடியாதவர்கள் இந்த 11 நாட்களில் வந்து மகாதீபத்தை தரிசனம் செய்து கொள்ளலாம்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. மகாதீபம் ஏற்றுவதற்கு தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரை பயன்படுத்தப்பட்டது. தீப கொப்பரை, தீபத்திற்கு தேவையான நெய், திரி ஆகியவை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மகா தீபம் ஏற்றுவதற்காக 3 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தீப நெய் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாகும். இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளிக்கும். கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலைக்கு வர முடியாதவர்கள் இந்த 11 நாட்களில் வந்து மகாதீபத்தை தரிசனம் செய்து கொள்ளலாம்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தர்கள் எழுப்பிய முழக்கம் விண்ணை பிளந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமி மாடவீதி உலா தடை செய்யப்பட்டதால் ஆகம விதிகளின்படி சாமி உற்சவ உலா நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றன.

    கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அருணாசலேஸ்வரருக்கு தீபாராதனை செய்யப்பட்டதும், வேதமந்திரங்கள் முழங்க அதிகாலை 3.30 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அதிலிருந்து பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி பரணி தீபம் கொண்டு வரப்பட்டு வைகுந்த வாயில் வழியாக மகா தீபம் ஏற்றப்படும் மலைக்கு காட்சி கொடுக்கப்பட்டது. அதன்பின் உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. அம்மன் சன்னதி, சாமி சன்னதிகளுக்கு வெளியே தரிசனத்திற்காக பரணிதீபம் கொண்டு வரப்பட்டு காலபைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது.

    இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலையில் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஆடியபடி தனித்தனியாக வெளியே வந்து சாமி சன்னதி முன்பு உள்ள தீப மண்டபத்தில் இருந்த தங்க விமானத்தில் எழுந்தருளினர்.

    அதைத்தொடர்ந்து சுமார் 6 மணியளவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் அருகே வந்து காட்சி அளித்தார். பின்னர் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கிரிவலம் சென்ற பக்தர்கள், நகரின் வீதிகள் மற்றும் வீடுகளின் மாடிகளில் நின்றிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கம் எழுப்பி பரவசத்துடன் மகாதீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர்.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 17-ந் தேதியில் இருந்து நேற்று வரை கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து அலங்கார தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது. இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதே நேரத்தில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 2668 அடி உயர மலை உச்சியில்  இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.. அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது.. மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் மனதை கவர்ந்தது.

    கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் மனதை கவர்ந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து அலங்கார தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது. இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இன்று மாலை 6 மணி அளவில் தீப மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும்.மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    பரணி தீபத்தை முன்னிட்டு கோவிலில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பரணி தீபத்தை எடுத்து செல்லும் போதும் மழை பெய்து கொண்டிருந்ததால் பக்தர்கள் மழையில் நனைந்தபடி தரிசனம் செய்தனர்.

    பரணி தீபம்

    கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் மனதை கவர்ந்தது. விழாவை முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு இன்று தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    கொரோனா பரவலையொட்டி கடந்த 1 ஆண்டாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மகா தீப விழாவையொட்டி உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேர், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேர் என மொத்தம் 20 ஆயிரம் பேர் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது. இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் பரவலாக மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தப்படி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீபத்திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலையில் கொட்டும் மழையில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் 9-ம் நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது.

    3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து மேளதாளங்களுடன் வந்து 5-ம் பிரகாரத்தில் தயார் நிலையில் இருந்த வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு தீபாராதனை நடந்தது. முன்னதாக திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையில் சாமி உற்சவ உலா கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் மதியம் முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் சாமி உலா பக்தர்களின்றி நடைபெற்றது.

    மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் சாமி உலா நடந்தது. இரவு 9 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தை சுற்றி உலா வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீப தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் 4-ம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி சிலை முன்பு வைத்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

    பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபத்தையொட்டி நேற்று கோவிலில் கொடிமரம், தீப தரிசன மண்டபம், பலி பீடம், சாமி சன்னதி, அம்மன் சன்னதி உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பெங்களூருவை சேர்ந்த ஆதித்யாராம் பவுண்டேசன் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் பல்வேறு வகையான ரோஜா பூக்கள், அந்தூரியம் பூக்கள், அர்சிட், கார்னேசன், ஜிப்சோபிலா உள்ளிட்ட வண்ண மலர்களாலும், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாமரை பூக்கள் மற்றும் சோளம் போன்றவற்றினாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தினால் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் முதல் திருவண்ணாமலை நகரில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதி மற்றும் திருவண்ணாமலை நகர பகுதியில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டும் மகா தீபத்தை பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.

    மலைக்கு பக்தர்கள் செல்வதை கண்காணிக்க சிறப்பு கமாண்டோ படையினர் 120 பேர் மலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    வெளி மாநில மற்றும் மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. வெளி மாவட்டம் மற்றும் மாநில பக்தர்கள் வருவதை கண்காணிக்க மாவட்ட எல்லைகள், முக்கிய சந்திப்பு பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை நகரில் பல்வேறு இடங்களில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று பகலில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வெளி மாவட்ட, மாநில எண் கொண்ட வாகனங்கள் வந்தால் அவற்றை திருவண்ணாமலை நகருக்குள் அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர். நேற்று முதல் திருவண்ணாமலையை சுற்றி 11 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
    திருவண்ணாமலை மகா தீபத்தை நாளை காண பக்தர்கள் அனைவரும் ஆவலில் உள்ளனர். தீப விழாவையொட்டி திருவண்ணாமலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உச்ச நிகழ்வாக நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை கோவில் வளாகத்தில் பரணி தீபமும், சரியாக மாலை 6 மணிக்கு 2,668 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு வழிபாடுகள், பிரகாரத்தில் சுவாமி-அம்மன் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று பிச்சாண்டவர் உற்சவம் மேலும் தீபத்துக்கான காடா துணிகள் கொண்டு வரப்பட்டன. கொரோனா கட்டுப்பாடுகளின காரணமாக திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

    இந்த நிலையில் மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று 9-ஆம் திருவிழாவை முன்னிட்டு தீபக்கொப்பரைக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து 2,668 அடி உயரத்தில் உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகா தீப கொப்பரை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த ஆண்டு புதிய கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. புதிய மகாதீப கொப்பரையை பக்தர்கள் அண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்ல புறப்பட்டபோது “அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா “என்ற பக்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    திருவண்ணாமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப் பகுதிகள் சேறும் சகதியுமாக காணப்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் அண்ணாமலையாரை மனதில் தியானித்தபடி மகா தீப கொப்பரையை தூக்கிக் கொண்டு மலை ஏறிச் சென்றனர்.

    திருவண்ணாமலை மகா தீபத்தை நாளை காண பக்தர்கள் அனைவரும் ஆவலில் உள்ளனர். தீப விழாவையொட்டி திருவண்ணாமலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருவண்ணாமலைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் 9 சாலைகளிலும் போலீசார் தடுப்புகள் வைத்து பக்தர்கள் வருவதை தடுக்க கண்காணித்து வருகின்றனர்.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விழா நாட்களில் மாட வீதியில் நடைபெறும் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நாளை (வெள்ளிக்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விழா நாட்களில் மாட வீதியில் நடைபெறும் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

    விழாவின் அனைத்து நிகழ்வுகளும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்று வருகின்றது. மேலும் கோவிலில் அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று மதியத்தில் இருந்து பவுர்ணமி தொடங்க உள்ளதாலும், நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ளதாலும் நேற்று மதியம் 1 மணியில் இருந்து கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. இதனால் கோவில் வளாகம் மதியத்திற்கு மேல் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் 20-ந்தேதி (சனிக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வர தொடங்கினர். இதில், வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதனால் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக நேற்றில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவில் முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கோவில் வளாகம் மற்றும் கோவிலை சுற்றி மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கிரிவலப்பாதையில் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ×