search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tips"

    • ரசத்தை நெய்யில் தாளித்தால் அதிக மணமாக இருக்கும்.
    • அரிசி களைந்த தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.

    * பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை நறுக்கி சேர்க்கலாம்.

    * சாம்பார், கூட்டு செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது கசகசாவை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

    * மோர்க்குழம்பு செய்யும்போது மிளகாயை நன்றாக வதக்கி அரைத்து சேர்த்தால் குழம்பு நல்ல நிறமாக காட்சி அளிக்கும். ருசியாகவும் இருக்கும்.

    * பாகற்காய் குழம்பில் கேரட் ஒன்றை துண்டுகளாக நறுக்கிப்போட்டால், கசப்புத்தன்மை அதிகம் இருக்காது.

    * அரிசி களைந்த தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.

    * ரசம் கொதிக்கும்போது அதில் புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்தால் ரசம் மணமாக இருக்கும்.

    * துவரம் பருப்பை வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால், பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

    * ரசத்தை நெய்யில் தாளித்தால் அதிக மணமாக இருக்கும்.

    * சர்க்கரை இருக்கும் டப்பாவில் இரண்டு, மூன்று லவங்கத்தை போட்டு வைத்தால் எறும்புகள் வராது.

    * எலுமிச்சை சாதம் தயார் செய்யும்போது சாதம் சூடாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கசப்புத்தன்மை கூடும்.

    * பாலை நன்கு கொதிக்க காய்ச்சி பயன்படுத்த வேண்டும். அதாவது சுண்டக் காய்ச்ச வேண்டும். அதுதான் சரியானது.

    * தேங்காய்க்கு பதிலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கொரகொரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்து சமைத்தால் சுவை புதுமையாக இருக்கும்.

    * கீரை சமைக்கும்போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து சமைத்தால் கீரை பச்சை நிறம் மாறாமல் ருசியாகவும் இருக்கும்.

    * தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது.

    * முட்டை கெட்டுப் போகாமல் இருக்க முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.

    * மெதுவடை மொறு மொறு என்று இருக்க, உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மெதுவடை மொறுமொறுப்பாக இருக்கும்.

    • ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை பொறியாளர்தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் நடைபெறும் வேலைகளை பார்வையிட்டார்.
    • பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க ஒப்பந்த தாரரிடம் அறிவுறுத்தினார்

    கள்ளக்குறிச்சி,:

    தியாகதுருகத்தில் ரூ.3 கோடியே 55 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை பொறியாளர் குட்டாலிங்கம் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு செய்தார். அப்போது தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் நடைபெறும் வேலைகளை பார்வையிட்டார்.

    கட்டிடத்தில் காற்றோட்ட வசதிக்காக கூடுதல் ஜன்னல் அமைக்க வேண்டும். சிமெண்ட், ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். சிமெண்ட் கான்கிரீட் மற்றும் பூச்சு வேலைகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க ஒப்பந்த தாரரிடம் அறிவுறுத்தினார். இதில் ஒன்றிய குழு தலைவர் தாமோதரன், துணைத் தலைவர் நெடுஞ்செழியன், ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட செயற்பொறியாளர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் ஜெயபிரகாஷ், விஜயன், இளந்தென்றல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு உள்பட அலுவலர்கள் அருகில் உள்ளனர்.

    கிறிஸ்டியானா ரொனால்டோ கீரிஸ் நாட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருந்த போது ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ் வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். #CristianoRonaldo
    லண்டன்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி 2-வது சுற்றுடன் வெளியேறியதும் அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் கிரீஸ் நாட்டில் கோஸ்டா நவரினோ என்ற சொகுசு விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்தார். அங்கு தங்கி இருந்த போது ஓட்டல் ஊழியர்களின் உபசரிப்பும், சேவையும் அவருக்கு மிகவும் பிடித்து போனது. இதனால் ஓட்டலை விட்டு கிளம்பும் போது ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் வெகுமதியாக (டிப்ஸ்) வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். காசோலையாக வழங்கிய அவர் அதை ஊழியர்களுக்கு பிரித்து கொடுக்கும்படி ஓட்டல் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார். #CristianoRonaldo
    ×