என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ticket
நீங்கள் தேடியது "ticket"
உத்தர பிரதேசத்தில் உள்ள தாஜ் மஹாலில் கல்லறை பகுதிக்கு செல்ல கூடுதலாக ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். #TajMahal
ஆக்ரா:
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தாஜ் மஹால் நினைவு சின்னம் அமைந்துள்ளது. முகலாயர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ள இங்கு பொதுமக்கள் சென்று பார்வையிட ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த கட்டண அறிவிப்பின்படி, உள்ளூர் பார்வையாளர்கள் ரூ.250 மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் ரூ.1,300 செலுத்த வேண்டும். இதேபோன்று சார்க் நாடுகளில் இருந்து வருவோர் ரூ.540க்கு பதிலாக ரூ.740 கட்டணம் செலுத்திட வேண்டும்.
ரூ.50க்கான டிக்கெட் வைத்திருப்போர் கல்லறை பகுதிக்குள் நுழைய முடியாது. ஆனால் அவர்கள் தாஜ் மஹாலை சுற்றி வந்து பின்பகுதியை காண முடியும். பின்புறம் உள்ள யமுனை நதியின் கரையையும் அவர்கள் காண முடியும்.
கடந்த 1983ம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலம் என தாஜ் மஹால் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் முஸ்லிம் கலைக்கான அணிகலன் மற்றும் உலக பாரம்பரிய தலத்தில் உலகளவில் ஈர்த்த சிறந்த படைப்புகளில் ஒன்றாக உள்ளது என சான்று வழங்கப்பட்டு உள்ளது. #TajMahal
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தாஜ் மஹால் நினைவு சின்னம் அமைந்துள்ளது. முகலாயர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ள இங்கு பொதுமக்கள் சென்று பார்வையிட ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தாஜ் மஹாலின் முக்கிய பகுதியான கல்லறை பகுதிக்கு செல்வதற்கு கூடுதலாக ரூ.200 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டண வசூல் முறையால் முக்கிய பகுதியில் மக்கள் கூட்டம் சேருவது குறையும்.
இந்த கட்டண அறிவிப்பின்படி, உள்ளூர் பார்வையாளர்கள் ரூ.250 மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் ரூ.1,300 செலுத்த வேண்டும். இதேபோன்று சார்க் நாடுகளில் இருந்து வருவோர் ரூ.540க்கு பதிலாக ரூ.740 கட்டணம் செலுத்திட வேண்டும்.
ரூ.50க்கான டிக்கெட் வைத்திருப்போர் கல்லறை பகுதிக்குள் நுழைய முடியாது. ஆனால் அவர்கள் தாஜ் மஹாலை சுற்றி வந்து பின்பகுதியை காண முடியும். பின்புறம் உள்ள யமுனை நதியின் கரையையும் அவர்கள் காண முடியும்.
கடந்த 1983ம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலம் என தாஜ் மஹால் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் முஸ்லிம் கலைக்கான அணிகலன் மற்றும் உலக பாரம்பரிய தலத்தில் உலகளவில் ஈர்த்த சிறந்த படைப்புகளில் ஒன்றாக உள்ளது என சான்று வழங்கப்பட்டு உள்ளது. #TajMahal
கர்நாடகா அரசு போக்குவரத்து பஸ்சில் கோழிக்கு அரை கட்டணம் வசூலித்த கண்டக்டரிடம் விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பெங்களூர்:
பஸ்களில் பயணிகளுடன் கோழிகள், ஆடுகள், நாய்கள் போன்றவை பயணம் செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால் கர்நாடக மாநில அரசு பஸ்களில் அவை பயணம் செய்ய அனுமதிப்பதுடன் அவற்றுக்கு டிக்கெட் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் சிகாபலாபுரா மாவட்டத்தில் உள்ள பெட்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். விவசாயி ஆன இவர் கவுரிபிதானூரில் இருந்து பெட்டனஹள்ளிக்கு காலை 7.10 மணியளவில் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.
அப்போது தன்னுடன் 2 கோழிகளை எடுத்து சென்றார். அவற்றை தலா 150 ரூபாய்க்கு வாங்கி இருந்தார். பஸ்சில் அவரிடம் கண்டக்டர் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார்.
அவர் தன்னிடம் இருந்த 50 ரூபாயை கொடுத்தார். கவுரிபிதானூரில் இருந்து பெட்டனஹள்ளிக்கு செல்ல ரூ.26 டிக்கெட் கட்டணம். எனவே கண்டக்டர் மீதம் ரூ.24 தருவார் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் 2 ரூபாய் மட்டுமே வழங்கினார்.
இதனால் ஒன்றும் புரியாத அவர் இது குறித்து கண்டக்டரிடம் கேட்டார். அதற்கு அவர் தலா அரை டிக்கெட் வீதம் ரூ.24 வசூலித்து இருப்பதாக கூறினார். அவரது பதில் புரியாத விவசாயி ஸ்ரீனிவாஸ் நான் மட்டும்தானே பயணம் செய்கிறேன்.
என்னுடன் குழந்தைகள் யாரும் பயணம் செய்யவில்லையே என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கண்டக்டர், கோழிகளுக்கு தலா அரை டிக்கெட் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீனிவாஸ் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ்சில் 6 முதல் 12 வயது வரை பயணம் செய்யும் குழந்தைகளுக்கு அரை டிக் கெட்கட்டணம் வசூலிக்கப்படும்.
அவர்கள் 23 முதல் 30 கிலோ எடை இருப்பார்கள். ஆனால் கோழி தலா 2½ கிலோ எடை மட்டுமே உள்ளது. அவற்றை நான் இருக்கையில் அமர வைக்கவில்லை. அப்படியிருக்க 30 நிமிட நேர பயண தூரத்துக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? என ஆதங்கப்பட்டார்.
ஆனால் கர்நாடக அரசு பஸ் நிர்வாகம் கோழி, நாய், ஆடு போன்ற வீட்டு வளர்ப்பு பறவைகள் மற்றும் பிராணிகளுக்கு அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இத்தகவல் கர்நாடக அரசு பஸ் இணைய தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் முயல்கள், நாய்கள், பூனைகள், பறவைகள் மற்றும் கூண்டுகளில் அடைத்து பஸ்களில் எடுத்து வரும் வளர்ப்பு பிராணிகளுக்கு தலா அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அது குறித்து கவுரி பிதானூர் அரசு பஸ் டெப்போ மேலாளர் ஏ.யூ. ஷரிப்பீடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் போக்குவரத்து கழக சட்டப்படிதான் விவசாயி ஸ்ரீனிவாசிடம் கோழிகளுக்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
பஸ்களில் பயணிகளுடன் கோழிகள், ஆடுகள், நாய்கள் போன்றவை பயணம் செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால் கர்நாடக மாநில அரசு பஸ்களில் அவை பயணம் செய்ய அனுமதிப்பதுடன் அவற்றுக்கு டிக்கெட் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் சிகாபலாபுரா மாவட்டத்தில் உள்ள பெட்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். விவசாயி ஆன இவர் கவுரிபிதானூரில் இருந்து பெட்டனஹள்ளிக்கு காலை 7.10 மணியளவில் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.
அப்போது தன்னுடன் 2 கோழிகளை எடுத்து சென்றார். அவற்றை தலா 150 ரூபாய்க்கு வாங்கி இருந்தார். பஸ்சில் அவரிடம் கண்டக்டர் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார்.
அவர் தன்னிடம் இருந்த 50 ரூபாயை கொடுத்தார். கவுரிபிதானூரில் இருந்து பெட்டனஹள்ளிக்கு செல்ல ரூ.26 டிக்கெட் கட்டணம். எனவே கண்டக்டர் மீதம் ரூ.24 தருவார் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் 2 ரூபாய் மட்டுமே வழங்கினார்.
இதனால் ஒன்றும் புரியாத அவர் இது குறித்து கண்டக்டரிடம் கேட்டார். அதற்கு அவர் தலா அரை டிக்கெட் வீதம் ரூ.24 வசூலித்து இருப்பதாக கூறினார். அவரது பதில் புரியாத விவசாயி ஸ்ரீனிவாஸ் நான் மட்டும்தானே பயணம் செய்கிறேன்.
என்னுடன் குழந்தைகள் யாரும் பயணம் செய்யவில்லையே என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கண்டக்டர், கோழிகளுக்கு தலா அரை டிக்கெட் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீனிவாஸ் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ்சில் 6 முதல் 12 வயது வரை பயணம் செய்யும் குழந்தைகளுக்கு அரை டிக் கெட்கட்டணம் வசூலிக்கப்படும்.
அவர்கள் 23 முதல் 30 கிலோ எடை இருப்பார்கள். ஆனால் கோழி தலா 2½ கிலோ எடை மட்டுமே உள்ளது. அவற்றை நான் இருக்கையில் அமர வைக்கவில்லை. அப்படியிருக்க 30 நிமிட நேர பயண தூரத்துக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? என ஆதங்கப்பட்டார்.
ஆனால் கர்நாடக அரசு பஸ் நிர்வாகம் கோழி, நாய், ஆடு போன்ற வீட்டு வளர்ப்பு பறவைகள் மற்றும் பிராணிகளுக்கு அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இத்தகவல் கர்நாடக அரசு பஸ் இணைய தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் முயல்கள், நாய்கள், பூனைகள், பறவைகள் மற்றும் கூண்டுகளில் அடைத்து பஸ்களில் எடுத்து வரும் வளர்ப்பு பிராணிகளுக்கு தலா அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அது குறித்து கவுரி பிதானூர் அரசு பஸ் டெப்போ மேலாளர் ஏ.யூ. ஷரிப்பீடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் போக்குவரத்து கழக சட்டப்படிதான் விவசாயி ஸ்ரீனிவாசிடம் கோழிகளுக்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X