search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thottiyam sand robbery"

    தொட்டியம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள காவிரிக்கரையோரங்களில் மணல் கடத்தப்படுவதாக தொட்டியம் வருவாய் துறைக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து தொட்டியம் வருவாய் அதிகாரி காத்தான் மற்றும் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தொட்டியம் மொடக்கு சாலை அருகே வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய அனுமதி இல்லாமல் மணல் கடத்தி வருவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து தொட்டியம் போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் தொட்டியம் கோட்டை மேட்டை சேர்ந்த பொன்னர் மற்றும் அய்யப்பன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தொட்டியம் பகுதியில் மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். #Sandrobbery

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள காவிரிக்கரையோரங்களில் இருந்து மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து தொட்டியம் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தொட்டியம் புனித மரியன்னை பள்ளி அருகே வந்த ஒரு டாரஸ் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய அனுமதி இல்லாமல் காவிரியாற்றில் மணல் திருடி வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த தொட்டியம் போலீசார் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் சேலம் பகுதியை சேர்ந்த டிரைவர் பார்த்த சாரதி (வயது 32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×