search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொட்டியம் பகுதியில் மணல் கடத்திய லாரி பறிமுதல் - வாலிபர் கைது
    X

    தொட்டியம் பகுதியில் மணல் கடத்திய லாரி பறிமுதல் - வாலிபர் கைது

    தொட்டியம் பகுதியில் மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். #Sandrobbery

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள காவிரிக்கரையோரங்களில் இருந்து மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து தொட்டியம் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தொட்டியம் புனித மரியன்னை பள்ளி அருகே வந்த ஒரு டாரஸ் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய அனுமதி இல்லாமல் காவிரியாற்றில் மணல் திருடி வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த தொட்டியம் போலீசார் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் சேலம் பகுதியை சேர்ந்த டிரைவர் பார்த்த சாரதி (வயது 32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×