search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvanaikaval temple"

    • லிங்கம் உள்ள இடத்தில் இன்றும் நீர் இருக்கக் காணலாம்.
    • இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

    ஆனைக்கா என்னும் அரும்பதி, பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து லிங்கத்தை அப்பு லிங்கம் என்பர்.

    அப்பு என்றால் தண்ணீர்.

    மக்களுக்கு அமுதம் போன்ற தண்ணீரைத் திரட்டி உமாதேவியார் இங்கு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராண வரலாறு கூறுகின்றது.

    தண்ணீரினால் திரட்டி அமைக்கப்பட்டதால் அமுதம் போன்ற தண்ணீரால் அமைக்கப்பட்டதால் இந்த லிங்கத்தை அமுதலிங்கம் என்றும் தலத்தை அமுதீசுவரம் என்றும் அழைத்தனர்.

    லிங்கம் உள்ள இடத்தில் இன்றும் நீர் இருக்கக் காணலாம்.

    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

    பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் (அப்பு) தலம். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

    சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60 வது தேவாரத்தலம் ஆகும்.

    அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும்.

    • ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டிவிட்டார்.
    • எனவே இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.

    பஞ்சபூதத் தலங்களில் அப்பு (நீர்) தலமாக விளங்குவது திருவானைக்காவல்.

    மூலவர் ஜலகண்டேசுவரராகவும், அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியாகவும் வீற்று இருக்கின்றனர்.

    வராகி அம்சமான அகிலாண்டேசுவரி ஆரம்ப காலத்தில் உக்கிர மூர்த்தியாகவே இருந்தாள்.

    எனவே பூஜை செய்பவர்களும், பக்தர்களும் கோவிலின் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்தே வழிபாடுகளை நடத்தி வந்தார்கள்.

    இதை அறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தினார்.

    உடனே இரண்டு ஸ்ரீசக்கரங்கள் செய்து அதில் அம்மனின் கோபம் இறங்க வேண்டும் என்று வேண்ட, அதன்படியே அம்பாளின் கோபம் ஸ்ரீ சக்கரத்தில் இறங்கியது.

    அம்பாள் சாந்த சொரூபியானாள்.

    ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டிவிட்டார்.

    எனவே இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.

    ஒன்று சிவச்சக்கரம். மற்றொன்று ஸ்ரீசக்கரம்.

    இந்த சக்கரங்கள் மற்ற அம்பாளின் சந்நிதியில் இல்லாத சிறப்பம்சம் பெற்றவை ஆகும்.

    மேலும் அம்பாளுக்கு எப்போதும் கோபம் ஏற்படாதவாறு பிரசன்ன விநாயகரை அம்பாளுக்கு முன்னேயும், முருகனைப் பின்னேயும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து விட்டார்.

    ×