என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "The teenager was arrested"
- பெற்றோர் புகாரின் பேரில் நடவடிக்கை
- காதலிப்பதாக கூறி ஏமாற்றினார்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் பகுதியைச் சேர்ந்த திலீப் (வயது 23), ஷூ கம்பெனி தொழிலாளி. இவர் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது மைனர் பெண்ணை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திலீப், மைனர் பெண்ணை கர்ப்பமாக்கி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து அவரது பெற்றோர், சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், இளம்பெண் 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது பெற்றோர் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திலீப்பை கைது செய்தனர்.
- போலீசார் விசாரணை
- பைக் பறிமுதல் செய்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் யுவராஜ் (25).இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்துள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.
இது தொடர்பாக யுவராஜ் ராணிப்பேட்டை போலீசில் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று போலீசார் ராஜேஸ்வரி தியேட்டர் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த வினோத் (19) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ஒட்டி வந்த பைக் திருட்டு போன யுவராஜின் பைக் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் வினோத்தை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.
- கண்காணிப்பாளர் புகார்
- போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்தனர்
வேலூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள 1,083 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த சனிக்கிழமை நடந்தது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில், டி என் பி எஸ் சி தேர்வு எழுதிய விருதம்பட்டை சேர்ந்த அப்துல் பயாஸ்(27), தனது வலது காதில் பேண்டேஜ் அணிந்து வந்திருந்தார். அவர்
தேர்வு எழுதிக்கொண்டி ருந்த போது, அப்துல் பயாஸ் தனியாக யாருடனோ பேசுவதை உணர்ந்த தேர்வு கண்காணிப்பாளர் சரளா, அவர் காதில் ஒட்டி இருந்த பேண்டேஜ் அகற்றுமாறு கூறியுள்ளார்.
அப்போது அவர் காதில் புளூடூத் பொருத்தி, அதன் வழியாக வெளியே இருக்கும் வேறு ஒருவரிடம் கேள்விக்கான விடை கேட்டு எழுதியது தெரியவந்தது.
இதுகுறித்து தேர்வு கண்காணிப்பாளர் சரளா காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக இருந்த அப்துல் பயாசை கைது செய்து, போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.
- போலீஸ் ரோந்தில் சிக்கினார்
- சிறையில் அடைத்தனர்
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது ஆசனாம்பட்டு ரோடு பேபி காலனி பகுதியை சேர்ந்த நீதி மகன் தினேஷ் குமார் வயது (23) என்பவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- 4 கிலோ பறிமுதல்
- திரிபுரா மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு கடத்தினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவில் வாலாஜா ரோடு ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது ரெயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர் .
விசாரணையில் அந்த வாலிபர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ரூசன் அலி (27)என்பதும், இவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவரிடம் சோதனை செய்தபோது 4 கிலோ கஞ்சா பொட்ட லங்களை திரிபுரா மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்துள்ளது.
இதையடுத்து கலால் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூஷன்அலியை கைது செய்து கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்தனர்.
- வேலூர் ஆஸ்பத்திரியில் போலீசார் சுற்றிவளைப்பு
- உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
வேலூர்:
பேரணாம்பட்டு அடுத்த நரியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், விபத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
அவரை பார்ப்பதற்காக சகோதரர் ரமேஷ் (32) என்பவர் நேற்று காலை சென்றுள்ளார். அந்த நேரத்தில் மர்ம கும்பல் 2 பேர் ரமேஷை திடீரென சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதைப் பார்த்த ரமேஷின் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் அவர்களின் பிடியில் இருந்து ரமேஷை விடுவிக்க முயன்றனர்.
இதனால், அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் திரண்டதுடன் பதற்ற மான சூழல் நிலவியது. அப்போது, ரமேஷை சுற்றி வளைத்த மர்ம கும்பல் தங்களை கர்நாடக மாநில காவல் துறையினர் என கூறினர்.
அப்போதும், அவர்களின் பிடியில் இருந்து ரமேஷை விடுவிக்க உறவினர்கள் முயன்றனர்.
இந்த தகவலறிந்த தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும், ரமேஷை சுற்றி வளைத்தவர்கள் கர்நாடக மாநிலம் மடிவாளா போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் ஜனார்த்தனன், நாராயணன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ரமேஷின் உறவினர்களை எச்சரித்த போலீசார் அங்கிருந்து அவர்களை அனுப்பினர்.
பின்னர், பாகாயம் போலீஸ் நிலையத்தில் வைத்து கர்நாடக மாநில ேபாலீசார் நடத்திய விசாரணையில் ரமேஷ் மீது மடிவாளா போலீஸ் நிலையத்தில் மட்டும் 18 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பிற போலீஸ் நிலையங்களிலும் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.
இந்த வழக்குகளில் தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற பிடியாணையை காண்பித்தனர். அதன் உண்மைத் தன்மை குறித்து உறுதி செய்த பிறகு மடிவாளா போலீசாருடன் ரமேசை அனுப்பி வைத்தனர்.
- வேட்டைக்கு கொண்டு சென்ற பொருட்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் வனசரகர் சங்கரய்யா தலைமையிலான வனதுறையினர் இன்று காலை ஆம்பூர் காப்பு காட்டில் நாயக்கனேரி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது பனங்காட்டேரி அடுத்த மூணுகல் மலை அருகே சென்றபோது ஒரு நபர் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதை பார்த்தனர்.
உடனே அந்த நபரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த நாட்டுதுப்பாக்கி, பேட்டரி உள்ளிட்ட வேட்டைக்கு கொண்டு வந்தபொருட்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரியை சேர்ந்த திருப்பதி (வயது23) என்பவரது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த நபரை வனதுறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
புதுச்சேரியை சேர்ந்தவர் அனந்தபாஸ்கர் (வயது 22). இவரது நண்பர் ஒருவர் ஜமுனாமரத்தூரில் உள்ளார்.
இந்த நிலையில் ஜமுனாமரத்தூருக்கு வந்த அனந்த பாஸ்கர், நண்பருடன் இணைந்து கஞ்சா வாங்கிக்கொண்டு பைக்கில் புதுச்சேரி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஜமுனாமரத்தூர் கோவிலூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் இருவ ரையும் போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் அனந்த பாஸ்கர் போலீசில் சிக்கினார். அவருடன் வந்த அவரது நண்பர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அனந்த பாஸ்கரை கைது செய்து அவரிடம் இருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப் பட்டது. தொடர்ந்து இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடிக்க முயற்சித்தனர்.
- அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு ராயபுரம் பகுதியை சேர்ந்த சேல்ஸ்மேன் கார்த்திகேயன் மற்றும் ஒரு ஊழியர் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அரிவாளுடன் கடைக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளை காட்டி மிரட்டி மது பாட்டில்கள் கொடுக்கும்படி மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடிக்க முயற்சித்தனர். அப்போது ஊழியர்களை பார்த்து அவர் அரிவாளால் வெட்ட பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாரில் பணியாற்றிய ஊழியர்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த முத்தீஸ்வரன் என்பதும் குடிக்க பணம் இல்லாததால் அரிவாளை காட்டி மிரட்டி மது கேட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 8 பவுன் தங்க நகை, 240 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் குற்ற பிரிவு போலீசார் நேற்று ஆம்பூர் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகளில் திருட்டு வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்த பூபாலன் (வயது 19) என்பது தெரியவந்தது. எஸ்பி தனிப்படை குற்ற பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
கடந்த மாதம் 30-ந்தேதி ஆம்பூர் அய்யனூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வங்கி ஊழியர் சவுந்தரராஜன் என்பவரின் வீட்டில் நகை பணம் திருடி சென்றவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆம்பூர் தாலுகா போலீசில் அவரை ஒப்படை த்தனர்.
வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிட மிருந்து 8 பவுன் தங்க நகைகளும் 240 கிராம் வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்ய ப்பட்டது.
- ஆன்மிக சுற்றுலா வந்த பெண்களை கேலி, கிண்டல் செய்ததால் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் மட்டுமின்றி பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. இதனை காண வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வெளிநாட்டினர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமங்கள் மற்றும் விடுதிகளில் தங்கி மன அமைதிக்கான தியானங்கள் மற்றும் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மும்பையை சேர்ந்த மித்தேஷ் தக்கர் என்பவரின் மனைவி ரேபக்கா தக்கர் (வயது 40) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெளிநாட்டை (சுவிட்சர்லாந்து) சேர்ந்த 2 இளம்பெண்களுடன் ஆன்மிக சுற்றுலாவிற்காக திருவண்ணாமலைக்கு வந்தார்.
பின்னர் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள தனியார் அறக்கட்டளை விடுதியில் தங்கினர். இதையடுத்து அவர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் பல்வேறு ஆசிரமங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி திருவண்ணாமலை செங்கம் சாலையில் சேஷாத்திரி ஆசிரமத்தின் அருகில் அவர்கள் செல்லும் போது அந்த பகுதியில் பல்வேறு வெளி மாநில பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வந்த ஜம்மு காஷ்மீர் பட்கம் பகுதியை சேர்ந்த அப்துல்ரஷித் என்பவரின் மகன் முபாஷிர் ரஷீத் (22) என்பவர் அவர்களை கேலி, கிண்டல் செய்து உள்ளார்.
இது குறித்து ரேபக்கா தக்கர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாஷிர் ரஷீத்தை கைது செய்தனர்.
- போலீசாரின் சோதனையில் சிக்கினார்
- ஜெயிலில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை பகுதியில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு குறித்து ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அந்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது மண்டலவாடி அடுத்த ஆட்டுக்கார பொன்னுசாமி வட்டம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்