search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் கஞ்சா கடத்தல்
    X

    பைக்கில் கஞ்சா கடத்தல்

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    புதுச்சேரியை சேர்ந்தவர் அனந்தபாஸ்கர் (வயது 22). இவரது நண்பர் ஒருவர் ஜமுனாமரத்தூரில் உள்ளார்.

    இந்த நிலையில் ஜமுனாமரத்தூருக்கு வந்த அனந்த பாஸ்கர், நண்பருடன் இணைந்து கஞ்சா வாங்கிக்கொண்டு பைக்கில் புதுச்சேரி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஜமுனாமரத்தூர் கோவிலூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் இருவ ரையும் போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் அனந்த பாஸ்கர் போலீசில் சிக்கினார். அவருடன் வந்த அவரது நண்பர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அனந்த பாஸ்கரை கைது செய்து அவரிடம் இருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப் பட்டது. தொடர்ந்து இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×