என் மலர்
உள்ளூர் செய்திகள்

மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
- பெற்றோர் புகாரின் பேரில் நடவடிக்கை
- காதலிப்பதாக கூறி ஏமாற்றினார்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் பகுதியைச் சேர்ந்த திலீப் (வயது 23), ஷூ கம்பெனி தொழிலாளி. இவர் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது மைனர் பெண்ணை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திலீப், மைனர் பெண்ணை கர்ப்பமாக்கி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து அவரது பெற்றோர், சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், இளம்பெண் 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது பெற்றோர் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திலீப்பை கைது செய்தனர்.
Next Story






