search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taapsee"

    தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சி, அடுத்ததாக வயதான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். #Taapsee #TaapseePannu
    டாப்சி வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து விலகி மாறுபட்ட வேடங்கள் ஏற்று நடித்து வருகிறார். குறிப்பாக அமிதாப்பச்சனுடன் ‘பிங்க்’ இந்தி படத்தில் மாறுபட்ட வேடம் ஏற்றிருந்தார். இப்படம் தற்போது தமிழில் நேர்கொண்ட பார்வை பெயரில் ரீமேக் ஆகிறது. அஜித் ஹீரோவாக நடிக்கிறார்.

    இந்நிலையில் 60 வயது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் டாப்சி. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் சந்த்ரோ டோமர், பிரகாஷி டோமர். இருவருக்குமே 80 வயதுக்கு மேல் ஆகிறது. இருவரும் ரிவால்வர் துப்பாக்கியால் எந்த இலக்கையும் குறிதவறாமல் சுடுவதில் கில்லாடிகள். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘சாந்த் கி ஆங்க்’ பெயரில் திரைப்படம் உருவாகிறது.



    இதில் பிரகாஷி டோமர் கதாபாத்திரத்தில் பூமி பெடுன்கர் நடிக்கிறார். சந்த்ரோ டோமர் கதாபாத்திரத்தில் டாப்சி நடிக்கிறார். நடிகைகள் இருவருக்குமே 30 வயதுதான் ஆகிறது. ஆனால் 60 வயது கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதுபற்றி டாப்சி கூறும்போது,’60 வயது பெண்ணாக சந்த்ரோ டோமர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நான் இதுவரை நடித்த வேடங்களிலேயே இது மிகவும் சவாலானது.

    கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தகுந்த பயிற்சி தேவைப்பட்டதால் சந்த்ரோ டோரை நேரில் சந்தித்து பயிற்சி பெற்றேன் என்றார். 
    பிங்க் படத்தை தொடர்ந்து அமிதாப்பச்சன் - டாப்சி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பட்லா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Trisha
    அமிதாப்பச்சன் - டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படம் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித்குமார், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர். எச்.வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

    இந்த படத்தில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வருகிறார். இந்த நிலையில் இந்தியில் வெற்றி பெற்ற இன்னொரு படமான ‘பட்லா’வும் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்திலும் அமிதாப்பச்சன், டாப்சி இணைந்து நடித்துள்ளனர். ரூ.10 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.90 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.



    இந்த படத்தின் தமிழ் பதிப்பில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் டாப்சி வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷா நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த 96 படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. மேலும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். இப்போது கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபத விளையாட்டு ஆகிய 4 படங்கள் திரிஷா கைவசம் உள்ளன. #AmitabhBachchan #Taapsee #Trisha

    தெலுங்கு, இந்தி பட உலகில் மிக பிரபலமாகி வரும் டாப்சி, அடுத்ததாக பிரபல இயக்குனருடன் மீண்டும் இணைய இருக்கிறார். #Taapsee
    அனுராக் கஷ்யப் இயக்கத்தில் டாப்சி நடித்த மன்மர்ஜியான் படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், மீண்டும் இருவரும் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளனர். திரில்லர் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. 

    இதுகுறித்து டாப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மன்மர்ஜியான் படத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தைத் தொடர்ந்து மீண்டும் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் நான் பணிபுரிவேன் எனக்கு ஏற்கெனவே தெரியும். ஆனால் அது இவ்வளவு விரைவாக நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. மேலும் பல படங்களில் இணைந்து பணிபுரிவது குறித்து நானும் சுனிரும் அண்மைக்காலமாக ஆலோசித்து வந்தோம். இந்தப் படத்துக்காக நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 



    இந்தப் படத்தை அஜுர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சுனிர் கெதெர்பால் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் தலைப்பிடப் படவில்லை. இந்த ஆண்டின் கடைசி மாதங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தப் படத்துக்கு லொக்கே‌ஷன் தேடும் பணிகளில் அனுராக் கஷ்யப் பிஸியாக இருக்கிறார்.
    பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை டாப்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச அழைக்காததால், அவர் விரக்தியடைந்து பேட்டியளித்திருக்கிறார். #Taapsee #Pink
    அமிதாப்பச்சன், டாப்சி நடித்த படம் பிங்க். இந்த படம்தான் தற்போது தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அமிதாப் வேடத்தில் அஜித் நடிக்கிறார். வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா நடிக்கின்றனர். ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

    பிங்க் இந்தி படத்தில் நடித்தவர்களை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அழைத்து உரையாடினார்கள். ஆனால் முக்கிய வேடத்தில் நடித்த டாப்சியை அவர்கள் அழைக்கவில்லை. பேட்டியை கண்ட ரசிகர்கள் டாப்சியிடம் இதுபற்றி விசாரிக்க தொடங்கினார்கள். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நீங்கள் பேட்டியில் பங்கேற்காதது ஏன்? என்று கேட்டதும் டாப்சி வருத்தமானார்.



    ஆனாலும் சிரித்தபடி சமாளித்தவர், ‘நல்ல கேள்வி... எனக்கு அந்த பேட்டியில் பங்கேற்கும் தகுதி இன்னும் வரவில்லை. அதற்கான தகுதிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று விரக்தியாக பதில் அளித்தார். இந்த பதிலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, ‘எல்லாவற்றிலும் நீங்கள் புத்திசாலி. எல்லா தகுதியும் உங்களுக்கு உண்டு’ என ஆறுதல் கூறத் தொடங்கின. உடனே டாப்சி ‘உங்களிடமிருந்து நான் ஜாலியான பதிலைத்தான் எதிர்பார்த்தேன். மற்றபடி எனக்கு எந்த வருத்தமும், விரக்தியும் இல்லை’ என்றார்.
    பாலிவுட் சினிமாவில் பிசியாகி இருக்கும் நடிகை டாப்சி, இந்தியில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார். #Taapsee #GameOver
    தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த டாப்சி, தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் அவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது தமிழில் `கேம் ஓவர்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் டாப்சி அளித்த பேட்டியில் கூறியதாவது,

    “நான் கதாநாயகியாக அறிமுகமானது தென்னிந்திய மொழி படத்தில் தான். பெரிய ஹிட் படங்கள் அமையாமல் போனாலும் முதலில் கதாநாயகியாக அறிமுகம் கிடைத்தது இங்குதான். தென்னிந்தியாவில் என்னை அவர்கள் வீட்டு பெண் மாதிரி ஏற்றுக்கொண்டனர். இந்தியில் வாய்ப்புகள் வந்தன. அங்கு நல்ல படங்களில் நடித்தேன். பெயரும் புகழும் கிடைத்தது.



    எவ்வளவு இந்தி படங்களில் நடித்தாலும் தமிழ், தெலுங்கு படங்களை மட்டும் விட மாட்டேன். எனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து வைத்ததே தென்னிந்திய திரையுலகம் தான். இந்தியில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

    எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தேதி ஒதுக்கி கொடுத்து நடிக்க தயாராக இருக்கிறேன். இந்த புத்தாண்டில் இருந்து தென்னிந்திய மொழிகளில் வருடத்துக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்து இருக்கிறேன்.”
     
    இவ்வாறு டாப்சி கூறினார். #Taapsee #GameOver

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சியை பிரபல செல்போன் நிறுவனம் கோபப்படுத்தி இருக்கிறது. #Taapsee
    ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர். இந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கு முன்னணி கதாநாயகியாக விளங்குகிறார். டாப்சி சரியாக சிக்னல்கள் கிடைப்பதில்லை என்றும் அதிக விலை வைத்து ஏமாற்றுவதாகவும் முன்னணி செல்போன் நிறுவனத்தை கடுமையாக டுவிட்டரில் சாடியுள்ளார்.

    அவர் அந்த நிறுவனத்தை குறிப்பிட்டு அவர்கள் தங்கள் சேவையை நிறுத்திவிட்டுக் கிளம்பும் நேரம் வந்துவிட்டது அல்லது அவர்கள் அதிக விலை வைப்பதை நிறுத்தவேண்டும். சிக்னல்கள் எங்கும் கிடைக்காத நிலையை மாற்ற வேண்டும். நாம் இப்போது போன்களை அதிக அளவு சார்ந்து இருப்பதால் எப்படியெல்லாம் வாடிக்கையாளராகிய நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.” என்று டுவிட்டரில் பதிவிட்டார்.



    இது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் விரைவில் தங்கள் குழு தொடர்புகொண்டு பிரச்சனையை தீர்க்கும் என்றும் அந்த நிறுவனம் பதிலளித்தது. இந்த டுவிட்டுக்கு கீழே மக்கள் பலரும் தாங்களும் இதைப் போன்று பாதிக்கப்பட்டதாக தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தனர். பலர் மற்ற நிறுவனங்களையும் டேக் செய்து பிரச்சினைகளை பதிவிட்டு வருகின்றனர்.
    தமிழில் ஆடுகளம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை டாப்சி, தற்போது இந்தி படத்தில் இருந்து விலகி இருக்கிறார். #Taapsee #Bollywood
    டாப்சி இந்தி சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார். அனுராக் பாசு இயக்கும் புதிய படத்தில் இணைந்து இருந்த அவர் தற்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார்.

    டாப்சி பன்னு, ராஜ்குமார் ராவ், பாத்திமா சனா சாகித், ஆதித்யா ராய் கபூர், அபிஷேக் பச்சன் எனப் பெரிய நட்சத்திர கூட்டணியை உருவாக்கி அனுராக் பாசு புதிய படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

    இப்படத்தில் நடிக்க டாப்சி எந்தத் தேதிகளில் தனது கால்ஷீட் வேண்டும் எனப் படக்குழுவிடம் கேட்டதற்கு முறையான தகவல்கள் கிடைக்காததால் படத்திலிருந்து விலகியுள்ளார். டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மன்மஸ்ரியான், முல்க் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாகின.



    இந்த ஆண்டு இவர் நடிப்பில் அடுத்தடுத்து சில படங்கள் வெளியாக உள்ளன. அவர் நடித்துள்ள தாட்கா, பாடியா ஆகிய இந்திப்படங்களின் படப்பிடிப்பு நிறைவுற்று இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கில் நடித்த கேம் ஓவர் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்தது.

    இது தவிர துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் புதிய படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக டாப்சி நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.
    தமிழில் ஆடுகளம் படம் மூலம் மிகவும் பிரபலமான டாப்சி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். #Taapsee #GameOver
    தமிழ் சினிமாவில் சரியான இடம் கிடைக்காமல் தவித்த டாப்சி தெலுங்கு, இந்திக்கு சென்றார். இந்தியில் அவருக்கு நல்ல இடம் கிடைத்தது. அங்கு முன்னணி நடிகையாகி விட்ட டாப்சி தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் தமிழில் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடிக்க உள்ளார். நயன்தாரா முன்னிலை கதாபாத்திரம் ஏற்று நடித்த ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இதை இயக்குகிறார். படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.



    இந்தப் படத்துக்கு ‘கேம் ஓவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காலில் கட்டுப் போடப்பட்டு சக்கர நாற்காலியில் டாப்சி அமர்ந்திருப்பதுபோல காட்டப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
    பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து வரும் டாப்சி, சினிமாவுக்காக எதையும் செய்ய தயார் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Taapsee
    தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான டாப்சி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    “சினிமாவில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி நடிக்கிறேன். பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமானால் மற்றவர்களை பின்பற்றுவதை விட எனக்கென்று புதிய பாணி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறேன். வீணாக மேக்கப் போடுவது அதற்காக நேரத்தை செலவிடுவது எனக்கு பிடிக்காது.

    ஆடை அணிவதில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுப்பேன். எப்போதாவது சோர்வாக இருந்தால் ஷாப்பிங் செல்வேன். அது எனக்கு புதிய தெம்பை கொடுக்கும். சினிமாவுக்காக எதையும் செய்ய தயார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவையோ அதை செய்ய தயாராக இருக்கிறேன்.

    துப்பாக்கி சுடும் வீரர்கள் பற்றி அனுராக் காஷ்யப் எடுக்கும் உண்மை கதையில் நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படம். அந்த படத்துக்காக துப்பாக்கி சுட கற்று வருகிறேன். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அதற்கு நூறு சதவீதம் உழைப்பை கொடுக்க வேண்டும். நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும். எந்த காரணத்துக்காவும் டூப் நடிகையை வைத்து காட்சிகளை எடுக்க நான் சம்மதிக்க மாட்டேன். நானே எல்லா காட்சிகளிலும் நடிக்கிறேன். கதாபாத்திரமாக மாறி நடித்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்று டாப்சி கூறினார்.
    ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமான டாப்சி, தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிர ஆர்வம் காண்பித்து வருகிறார். #Taapsee
    தமிழில் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறிய டாப்சி இந்தி சினிமாவில் முன்னணி நாயகியாகி விட்டார். பின்க், பேபி படங்களை தொடர்ந்து அனுரக காஷ்யப் இயக்கத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடித்த மன்மர்சியான் படமும் வெற்றியடைந்து இருக்கிறது.

    டாப்சியின் திறமையை பார்த்த அனுராக் தனது தயாரிப்பில் அடுத்து உருவாக இருக்கும் படத்திலும் டாப்சியையே நாயகியாக்கி உள்ளார்.

    உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தில் டாப்சி துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடிக்கிறார். துசார் ஹீரா நந்தினி இயக்குகிறார். ஜனவரியில் தொடங்க இருக்கும் இந்த படத்துக்காக துப்பாக்கி சுடும் பயிற்சியை டாப்சி இப்போதே தொடங்கி விட்டார்.
    தமிழில் ஆடுகளம் படத்திலும், இந்தியில் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் டாப்சி காதல்தான் முக்கியம், கல்யாணம் அல்ல என்று கூறியிருக்கிறார். #Taapsee
    ஆடுகளம் மூலம் தமிழில் அறிமுகமான டாப்சி தொடர்ந்து தமிழில் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. ஒரு கட்டத்தில் ராசியில்லாத நடிகை என்று வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு, இந்தி பக்கம் சென்றார். இப்போது இந்தியில் முன்னணி நடிகையாகி விட்டார். 

    அவர் நடித்த மன்மர்சியான் படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சில ஆண்டுகளாகவே டாப்சி டென்மார்க் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் மத்தியாசை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இதுவரை இதனை மறுத்து வந்த டாப்சி முதன்முறையாக தான் காதலிப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். 



    ‘காதல்தான் முக்கியம்; கல்யாணம் அல்ல. நான் எப்போது குழந்தைகள் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேனோ, அப்போது தான் திருமணம் செய்து கொள்வேன். அதுவரை, மத்தியா சோடு ஒன்றாக வாழ்வேன்’ என்று கூறியிருக்கிறார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்சி, சமீபத்தில் அளித்த பேட்டியில் நான் யாருடனும் அவ்வளவாக பழகுவது இல்லை என்று கூறியிருக்கிறார். #Taapsee
    ஆடுகளம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் டாப்சி. தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

    டாப்சி அளித்த பேட்டியில், “தனி மனுஷியாக எனக்குத் தோல்வியை கண்டு பயம் இல்லை. படங்களோடு என் வாழ்க்கை முடிந்துவிடுவது இல்லை.

    என் தங்கை ‌ஷகுனுடன் சேர்ந்து உணவகம் தொடங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைத்த உடன் அந்தத் திட்டத்தை செயல்படுத்துவேன்.



    எதிர்காலத்தில் நான் சினிமாவை விட்டு விலகுவது என்றால் அதனுடன் தொடர்பில்லாத பிற தொழில் என் கைவசம் இருக்க வேண்டும். திரைப்படத்தைத் தாண்டி வாழ்க்கை இருப்பது நல்லது. நான் யாருடனும் அவ்வளவாகப் பழகுவது இல்லை. அதனால் திரையுலகினர் மாறிவிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் தற்போது எல்லாம் சிறப்பான திரைக்கதைகள் என்னைத் தேடி வருகிறது. வெற்றி அடைந்த பிறகு மக்கள் என்னை மரியாதையுடன் நடத்துகிறார்கள். என் கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். என் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கத் தொடங்கிவிட்டது” என்று கூறியுள்ளார்.
    ×