search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taapsee Pannu"

    • சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டாப்ஸி படுகவர்ச்சியாக வருகை தந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    • அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஆடை சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக இருந்தது.

    சென்னை:

    ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்ஸி வந்தான் வென்றான், கதை திரைக்கதை வசனம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட் மொழிகளிலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் பிங்க் படம் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அதன் பின்னர் பல படங்களில் நடித்த டாப்ஸி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தார்.

    கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படம் அவருக்கு வெற்றிப் படமாக மாறியது. அடுத்ததாக ஹசின் தில்ருபா 2 படத்தில் நடித்துள்ள டாப்ஸி விரைவில் அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டாப்ஸி படுகவர்ச்சியாக வருகை தந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஆடை சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக இருந்தது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அதிகமாக ரசிகர்கள் ஷேர் செய்து நடிகை டாப்ஸியை திட்டினர்.

    இந்நிலையில் யார் என்ன சொன்னாலும் அவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி படங்களை பதிவிடுவதை நிறுத்தவில்லை. தற்போது கருப்பு உடையில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள், இந்த அடக்கம் ஒடுக்கம் கூட நல்லாதான் இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்துக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் போட்டுள்ளனர்.

    இவர் சமீபத்தில் டென்மார்க் பேட்மிண்டன் வீரரை திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://www.maalaimalar.com/cinema/cinemanews/taapsee-excites-her-fans-by-posting-sexy-photos-726625?infinitescroll=1

    • ஸ்விக்கி ஊழியர் ஒருவர் உணவு டெலிவெரி செய்வதற்காக உள்ளே சென்றார்.
    • ஸ்விக்கி ஊழியருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    பொதுவாக நம் ஊரில் திரைப் பிரபலங்கள் பொது இடங்களில் கண்டுவிட்டால் அவர்களை ரசிகர்கள் சூழ்ந்துவிடுவது வழக்கம். சிலர் செல்பி என்ற பெயரில் அவர்களை நச்சரித்துவிடுவார்கள்.

    நடிகர், நடிகைகள் என்றால் வாயடைத்து நிற்பவர்களுக்கு மத்தியில் தனக்கு கடமை தான் முக்கியம் என்று நடிகை எதிரே வந்தும் கண்டும் காணாமல் கடந்து தனது பணியை ஆற்றிய ஸ்விக்கி ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சலூன் ஒன்றுக்கு சென்றுவிட்டு நடிகை டாப்சி பன்னு வெளியே வந்தார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என பலரும் வெளியே நின்று அவரை அழைத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, அங்கு வந்த ஸ்விக்கி ஊழியர் ஒருவர் உணவு டெலிவெரி செய்வதற்காக உள்ளே சென்றார். அப்போது, நடிகை டாப்சி ஸ்டைலிஷாக எதிரே வந்தார். ஆனாலும, ஸ்விக்கி ஊழியர் அவரை கண்டுக்கொள்ளாமல் தனது கடமையை செய்ய சென்றார்.

    இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள்," எவ்வளவு பெரிய நடிகை வந்தாலும் தனக்கு கடமை தான் முக்கியம் என்று தனது பணியை செய்யும் ஸ்விக்கி ஊழியருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" என பாராட்டி வருகின்றனர்.

    23 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ காட்சியை, புகைப்பட கலைஞர் ஒருவர் ஸ்விக்கி பார்ட்னரை டேக் செய்து, ஸ்விக்கி ஊழியரின் கடமையை பாராட்டினார். அதில், "ஹே ஸ்விக்கி, இந்த டெலிவரி பார்ட்னர் தனது அர்ப்பணிப்புக்கு ஊக்கத்தொகைக்கு தகுதியானவர்" என குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த ஸ்விக்கி, "தொந்தரவு இல்லை. நெஞ்சில் ஈரம், மகிழ்ச்சி. என் பாதை. கவனம் செலுத்துகிறது. செழிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தது.

    • டங்கி படத்தில் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
    • குடும்பத்தார், உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளவர் என தெரிகிறது.

    தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்சி. இதைத் தொடர்ந்து இவர் காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார். மேலும் பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஷாருக் கான் நடித்து வெளியான டங்கி படத்திலும் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

    இந்த நிலையில், டாப்சிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது நீண்டகால நண்பரும், பேட்மின்டன் வீரருமான மத்யாஸ் போ என்பவரை டாப்சி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

     


    இருவரின் திருமணம் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும், இதில் இரு குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரின் திருணம் சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் `கேம் ஓவர்' படத்தின் முன்னோட்டம்.
    ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் `கேம் ஓவர்'.

    பாலிவுட் சென்று பிரபலமாகி இருக்கும் டாப்சி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தில் டாப்சிக்கு வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரம். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ஏ.வசந்த், கலை இயக்குனர் - சிவா சங்கர், ஆடை வடிவமைப்பு - என்.கே.நந்தினி, சண்டைப்பயிற்சி - ரியல் சதிஷ், இசை - ரான் ஈதன் யோஹன், படத்தொகுப்பு - ரிச்சர்ட் கெவின், ஒலி வடிவமைப்பு - சச்சின் சுதாகரன், ஹரிஹரன், ஸ்டில் போட்டோகிராபர் - எம்.எஸ்.ஆனந்தன், லைன் புரொடுயுசர் - முத்துராமலிங்கம், புரொடக்‌ஷன் எக்சிகியுடிவ் - ரங்கராஜ், இணை தயாரிப்பு - சக்ரவர்த்தி ராமசந்திரா, தயாரிப்பு - எஸ்.சசிகாந்த், எழுத்து - அஸ்வின் சரவணன், காவ்யா ராம்குமார், இயக்கம் - அஸ்வின் சரவணன்.



    படம் குறித்த இயக்குனர் அஸ்வின் சரவணன் பேசியதாவது, “மாயா படம் இன்று வரை மக்கள் மனதில் ஞாபகத்தில் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரு திரைப்பட வெளியீட்டை எதிர்நோக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டாப்சி இப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் என்றே நம்புகிறேன். கேம் ஓவர் வெளியீடு மற்றும் வரவேற்ப்பை எதிர்நோக்கி ஆவலோடு இருக்கிறேன்” என்றார்.

    தணிக்கையில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    கேம் ஓவர் படத்தின் டிரைலர்:

    அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் ஓவர் படத்தின் டீசருக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது.
    `மாயா', `இறவாக்காலம்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து `கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

    இந்த நிலையில், படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

    அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் `கேம் ஓவர்' படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    `மாயா', `இறவாக்காலம்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து `கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நேற்று வெளியான இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

    இந்த படத்தின் இந்தி உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும், `இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவருமான அனுராக் காஷ்யப் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேம் ஓவர் டீசர்:

    பாலிவுட்டில் பிரபலமாகி இருக்கும் டாப்சி, தமிழ் சினிமாவில் கேம் ஓவர் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தின் இந்தி உரிமையை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் கைப்பற்றியிருக்கிறார். #TaapseePannu #GameOver
    இறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றிகளை தொடர்ந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து `கேம் ஓவர்' என்ற படத்தை தயாரித்துள்ளனர்.

    பாலிவுட் சென்று பிரபலமாகி இருக்கும் டாப்சி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவருமான அனுராக் காஷ்யப் கைப்பற்றியிருக்கிறார்.


    தமிழ், தெலுங்கில் என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    ரான் ஈதன் யோஹன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பையும், சிவா சங்கர் கலைப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். #TaapseePannu #GameOver

    பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை டாப்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச அழைக்காததால், அவர் விரக்தியடைந்து பேட்டியளித்திருக்கிறார். #Taapsee #Pink
    அமிதாப்பச்சன், டாப்சி நடித்த படம் பிங்க். இந்த படம்தான் தற்போது தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அமிதாப் வேடத்தில் அஜித் நடிக்கிறார். வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா நடிக்கின்றனர். ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

    பிங்க் இந்தி படத்தில் நடித்தவர்களை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அழைத்து உரையாடினார்கள். ஆனால் முக்கிய வேடத்தில் நடித்த டாப்சியை அவர்கள் அழைக்கவில்லை. பேட்டியை கண்ட ரசிகர்கள் டாப்சியிடம் இதுபற்றி விசாரிக்க தொடங்கினார்கள். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நீங்கள் பேட்டியில் பங்கேற்காதது ஏன்? என்று கேட்டதும் டாப்சி வருத்தமானார்.



    ஆனாலும் சிரித்தபடி சமாளித்தவர், ‘நல்ல கேள்வி... எனக்கு அந்த பேட்டியில் பங்கேற்கும் தகுதி இன்னும் வரவில்லை. அதற்கான தகுதிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று விரக்தியாக பதில் அளித்தார். இந்த பதிலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, ‘எல்லாவற்றிலும் நீங்கள் புத்திசாலி. எல்லா தகுதியும் உங்களுக்கு உண்டு’ என ஆறுதல் கூறத் தொடங்கின. உடனே டாப்சி ‘உங்களிடமிருந்து நான் ஜாலியான பதிலைத்தான் எதிர்பார்த்தேன். மற்றபடி எனக்கு எந்த வருத்தமும், விரக்தியும் இல்லை’ என்றார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சியை பிரபல செல்போன் நிறுவனம் கோபப்படுத்தி இருக்கிறது. #Taapsee
    ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர். இந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கு முன்னணி கதாநாயகியாக விளங்குகிறார். டாப்சி சரியாக சிக்னல்கள் கிடைப்பதில்லை என்றும் அதிக விலை வைத்து ஏமாற்றுவதாகவும் முன்னணி செல்போன் நிறுவனத்தை கடுமையாக டுவிட்டரில் சாடியுள்ளார்.

    அவர் அந்த நிறுவனத்தை குறிப்பிட்டு அவர்கள் தங்கள் சேவையை நிறுத்திவிட்டுக் கிளம்பும் நேரம் வந்துவிட்டது அல்லது அவர்கள் அதிக விலை வைப்பதை நிறுத்தவேண்டும். சிக்னல்கள் எங்கும் கிடைக்காத நிலையை மாற்ற வேண்டும். நாம் இப்போது போன்களை அதிக அளவு சார்ந்து இருப்பதால் எப்படியெல்லாம் வாடிக்கையாளராகிய நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.” என்று டுவிட்டரில் பதிவிட்டார்.



    இது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் விரைவில் தங்கள் குழு தொடர்புகொண்டு பிரச்சனையை தீர்க்கும் என்றும் அந்த நிறுவனம் பதிலளித்தது. இந்த டுவிட்டுக்கு கீழே மக்கள் பலரும் தாங்களும் இதைப் போன்று பாதிக்கப்பட்டதாக தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தனர். பலர் மற்ற நிறுவனங்களையும் டேக் செய்து பிரச்சினைகளை பதிவிட்டு வருகின்றனர்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாகி இருக்கும் டாப்சி, தன்னைப் பற்றிய வலைத்தளத்தில் தவறாக விமர்சித்தவருக்கு உறைக்கும் விதமாக பதிலடி கொடுத்ததற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. #TaapseePannu
    ‘ஆடுகளம்‘ படம் மூலம் அறிமுகமானவர் டாப்சி. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிப் படங்களிலும் தனக்கென தனிச்சிறப்பான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தியில் இவர் நடித்த ‘பிங்க்‘ திரைப்படம் இவருக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. அது பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பந்தமான படம்.

    தொடர்ந்து இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். டாப்சி அதிரடியான கருத்துகளை தெரிவித்து பரபரப்புகளையும் ஏற்படுத்துவார். டாப்சியின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் தவறான எண்ணத்தில் ’உங்களுடைய உடல் அங்கங்கள் எனக்குப் பிடிக்கும்’ எனப் பதிவிட்டிருந்தார்.

    இதற்கு டாப்சி தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார். “வாவ்.. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். எனக்கு குறிப்பாக எனது மூளையில் உள்ள செரிப்ரம் ரொம்பப் பிடிக்கும். உங்களுக்குப் பிடித்த அங்கம் எது?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். செரிப்ரம் என்பது பெருமூளை.


    தன்னைப் பொதுவெளியில் கேவலமாக வர்ணித்த நபருக்கு பெருமூளை வேலை செய்யவில்லை என்பதை உணர்த்தும் வகையிலேயே டாப்சி இந்த டுவிட்டைப் பதிவு செய்திருக்கிறார். டாப்சியின் பதிலுக்கு சமூகவலைதளங்களில் வரவேற்பு கிடைத்து வருகிறது. #TaapseePannu

    பாலிவுட்டுக்கு சென்று அங்கு பிசியாகியிருக்கும் டாப்சி, கேம் ஓவர் படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ள நிலையில், சினிமா நிரந்தரம் கிடையாது என்று கூறியிருக்கிறார். #TaapseePannu #GameOver
    டாப்சி இந்தியில் அறிமுகமாகி முன்னணி நடிகையான பிறகு தமிழ், தெலுங்கு பக்கம் கவனம் செலுத்துவதில்லை. கதை கேட்கக்கூட மறுக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் விதமாக தென் இந்திய சினிமா பக்கம் மீண்டும் திரும்பியுள்ளார்.

    இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நிறைய படங்களில் நடிக்கிறதைவிட, தரமான சில படங்கள்ல நடிச்சாலே போதும், தமிழ் மக்கள் மனசுல இடம் பிடிச்சிடலாம்னு நினைக்கிறேன். `கேம் ஓவர்’ அப்படிப்பட்ட படம்தான். தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆகுற இந்தப் படத்துக்கு நானும் ஒரு தயாரிப்பாளர். வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கேரக்டர்.



    என் முதல் தெலுங்கு படத்தோட தயாரிப்பாளர் நடிகை லக்ஷ்மி மஞ்சு மட்டும்தான் எனக்கு இருக்குற ஒரே தோழி. நண்பர்களோட எமோ‌ஷனலா நெருக்கம் ஆகிவிட்டால், சினிமாவை விட்டு வெளியேறுவது கஷ்டமா இருக்கும். அதனால், நானும் அதிகமா அதுக்கு மெனக்கெடுறதில்லை. ஏன்னா, சினிமா நிரந்தரம் கிடையாது’ என்று கூறி இருக்கிறார். #TaapseePannu #GameOver
    தமிழில் ஆடுகளம் படம் மூலம் மிகவும் பிரபலமான டாப்சி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். #Taapsee #GameOver
    தமிழ் சினிமாவில் சரியான இடம் கிடைக்காமல் தவித்த டாப்சி தெலுங்கு, இந்திக்கு சென்றார். இந்தியில் அவருக்கு நல்ல இடம் கிடைத்தது. அங்கு முன்னணி நடிகையாகி விட்ட டாப்சி தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் தமிழில் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடிக்க உள்ளார். நயன்தாரா முன்னிலை கதாபாத்திரம் ஏற்று நடித்த ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இதை இயக்குகிறார். படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.



    இந்தப் படத்துக்கு ‘கேம் ஓவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காலில் கட்டுப் போடப்பட்டு சக்கர நாற்காலியில் டாப்சி அமர்ந்திருப்பதுபோல காட்டப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
    ×