search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taapsee Pannu"

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்சி, சமீபத்தில் அளித்த பேட்டியில் நான் யாருடனும் அவ்வளவாக பழகுவது இல்லை என்று கூறியிருக்கிறார். #Taapsee
    ஆடுகளம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் டாப்சி. தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

    டாப்சி அளித்த பேட்டியில், “தனி மனுஷியாக எனக்குத் தோல்வியை கண்டு பயம் இல்லை. படங்களோடு என் வாழ்க்கை முடிந்துவிடுவது இல்லை.

    என் தங்கை ‌ஷகுனுடன் சேர்ந்து உணவகம் தொடங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைத்த உடன் அந்தத் திட்டத்தை செயல்படுத்துவேன்.



    எதிர்காலத்தில் நான் சினிமாவை விட்டு விலகுவது என்றால் அதனுடன் தொடர்பில்லாத பிற தொழில் என் கைவசம் இருக்க வேண்டும். திரைப்படத்தைத் தாண்டி வாழ்க்கை இருப்பது நல்லது. நான் யாருடனும் அவ்வளவாகப் பழகுவது இல்லை. அதனால் திரையுலகினர் மாறிவிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் தற்போது எல்லாம் சிறப்பான திரைக்கதைகள் என்னைத் தேடி வருகிறது. வெற்றி அடைந்த பிறகு மக்கள் என்னை மரியாதையுடன் நடத்துகிறார்கள். என் கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். என் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கத் தொடங்கிவிட்டது” என்று கூறியுள்ளார்.
    பிரபலங்களின் வாழ்க்கை படமாக உருவாகி வரும் நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் முன்னணி வீராங்கணையாக விளங்கும் மிதாலி ராஜின் வாழ்க்கை படத்தில் டாப்சி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #MithaliRajBiopic
    மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து சாதனை நிகழ்த்திய இந்திய வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

    மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். தனது வாழ்க்கையை படமாக எடுக்க மிதாலி ராஜ் அனுமதி அளித்துள்ளார். சிறு வயது முதல், புகழ் பெற்ற கிரிக்கெட் வீராங்கனையாக உயர்ந்தது வரை உள்ள அவரது வாழ்க்கை சம்பவங்களை படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். 

    இந்த படத்தில் தனது வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும், தனது குணமும் பிரியங்கா சோப்ரா குணமும் ஒத்துப்போகின்றன என்றும் முன்னதாக மிதாலி ராஜ் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், மிதாலி ராஜ் வாழ்க்கை கதையில் நடிக்க டாப்சி தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 



    இந்த படத்தில் நடிப்பது குறித்து டாப்சி கூறும்போது, ‘‘விளையாட்டு வீராங்கனை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. மிதாலி ராஜ் வாழ்க்கை கதையை திரைக்கதையாக்கும் முயற்சி நடக்கிறது. எனவே இந்த படம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது’’ என்றார். 

    ஏற்கனவே சச்சின், கேப்டன் டோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை படமாக வெளிவந்தது. கபில்தேவ் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியும் நடக்கிறது. #MithaliRajBiopic #Taapsee

    தமிழில் ஆடுகளம், காஞ்சனா 2 படங்களில் நடித்து தற்போது பாலிவுட்டில் பிசியாக இருக்கும் டாப்சி, ரசிகர் ஒருவர் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். #Taapsee
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்சி. அதன் பின்னர் ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தாலும் தமிழில் பெரிதாக ஜொலிக்க வில்லை.

    தமிழ்ப் படங்களைக் குறைத்துக் கொண்டு இந்தியில் கவனம் செலுத்திவந்த அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் தற்போது இந்தியில் பிசி நடிகையாக வலம் வருகிறார் டாப்சி.

    அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒருவர், “பாலிவுட்டில் மோசமான தோற்றம் கொண்ட நடிகை டாப்சிதான். அவரின் அடுத்த படங்களைப் பார்த்திட மாட்டேன் என நினைக்கிறேன். இன்னும் 2, 3 படங்களில் அவர் பாலிவுட்டில் இருந்து காணாமல் போய்விடுவார்” என்றார்.



    அதையொட்டி பதிவிட்ட டாப்சி, “ஏற்கனவே நான் முல்க், மன்மர்ஸியான், பத்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். மேலும், சில படங்களிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளேன். எனவே இன்னும் சில காலம் என்னை சகித்துக்கொண்டுதான் படம் பார்த்தாக வேண்டும்” எனத் தன்னை கிண்டல் செய்த நபருக்கு பதில் அளித்துள்ளார்.
    நடிகை டாப்சி, டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மேதிஸை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக வெளியான தகவலுக்கு டாப்சி மறுப்பு தெரிவித்துள்ளார். #TaapseePannu
    தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் டாப்சிக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை.

    கடந்த சில வருடங்களாக இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனது ஆண் நண்பருடன் ஊர் சுற்றுவதாக செய்தி வந்தது. அது குறித்து டாப்சி வாய்திறக்காமல் இருந்து வந்தார். ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போ, மற்றொரு வீரர் தனிஷ் ஆகியோரிடம் அவர் பழகி வந்தார்.



    இந்நிலையில் டாப்சிக்கும், மேதிசுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார் டாப்சி. அங்கு மேதிசும் வந்திருந்தார். எளிமையாக நடந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. இதனை டாப்சி மறுத்து இருக்கிறார். என் பெற்றோருடன் கோவாவுக்கு விடுமுறையை கழிக்க தான் சென்றேன் என்று கூறி உள்ளார். #TaapseePannu

    ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Taapsee
    இந்தியில் டாப்சிக்கு கைநிறைய படங்கள் உள்ளன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நாம் சபானா படத்தில் நடித்த பிறகே இந்தியில் அவரது மார்க்கெட் மளமளவென உயர்ந்தது.

    அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் படமும் பெயர் வாங்கி கொடுத்தது. இப்போது முல்க், மேன் மர்ஷியான், தட்கா, பத்லா ஆகிய படங்களில் நடிக்கிறார். டாப்சிக்கும் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவின. 

    சமீபத்தில் மும்பை ஓட்டலில் இருந்து கைகோர்த்தபடி வெளியே வந்தபோது மத்யாசிடம் இருவரும் காதலிக்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘இது சொந்த வி‌ஷயம். மேற்கொண்டு பேச விரும்பவில்லை’’ என்றார். 



    இந்த நிலையில் இருவருக்கும் ரகசியமாக நிச்சயார்த்தம் நடந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. டாப்சி குடும்பத்துடன் கோவா சென்று இருந்தார். மத்யாசும் குடும்பத்தினருடன் வந்தார். அங்கு டாப்சிக்கும் மத்யாசுக்கும் ரகசியமாக நிச்சயார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை டாப்சி உறுதிப்படுத்தவில்லை.
    பாலிவுட் சினிமாவில் பிரபலமாகியிருக்கும் நடிகை டாப்சி, பிரபல ஹாக்கி வீரர் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாறு படமான சூர்மா படத்தில் நடிப்பதற்காக ஹாக்கி பயிற்சி எடுத்து வருகிறார். #TaapseePannu #Soorma
    தென் இந்திய மொழிகளில் நடிப்பதை தவிர்த்து இந்தியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தும் டாப்சியின் அடுத்த அவதாரம் ஹாக்கி வீராங்கனை. பிரபல ஹாக்கி வீரர் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாறு சூர்மா என்ற பெயரில் படமாகிறது.

    இதில் கதாநாயகியாக நடிக்கும் டாப்சி அந்த வேடத்துக்காக ஹாக்கி கற்றுக் கொண்டிருக்கிறார். ‘எனக்கு விளையாட்டு என்றால் கொள்ளை பிரியம். இந்த படத்துக்காக ஹாக்கி கற்றுக்கொண்டது மறக்க முடியாத அனுபவம். பொதுவாக விளையாட்டு வீராங்கனை என்றால் கடினமானவராக இருக்க வேண்டும்.

    ஆனால் நான் மிகவும் மென்மையானவள். எனவே விளையாட்டு வீராங்கனையாக மாறியது பெரிய சவாலாக இருந்தது. நான் இதற்கு முன்பு ஹாக்கி விளையாட்டை தொலைக்காட்சியில் கூட பார்த்தது இல்லை. ஆனால் ஒரு இந்திய குடிமகளாக சந்தீப் சிங் பற்றி அறியாமல் இருந்ததை எண்ணி வெட்கப்படுகிறேன்.



    இந்த படம் வெளியான பின், சந்தீப் சிங்கை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்’’ என்று கூறியவர் தனது ஆரம்பகால சோதனைகளையும் பகிர்ந்துள்ளார். ‘வாழ்க்கையில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆரம்பத்தில் சோதனைகளை தாங்கியதால் தான் இந்த இடத்தில் இருக்கிறேன். இன்னும் மேலே செல்ல வேண்டும் என்றால் சோதனைகளை தாங்கித் தான் ஆகவேண்டும்’’ என்று கூறி இருக்கிறார். #TaapseePannu #Soorma

    ×