search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunny Leone"

    நீலப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை சன்னி லியோன், எல்லாமே பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். #SunnyLeone
    நீலப்படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் அதுபோல் நடிப்பதை விடுத்து சாதாரண படங்களில் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாறு கரன்ஜித் கவுர் என்ற பெயரில் இணைய தொடராக வெளியாகி உள்ளது.

    அவரிடம் தமிழ் சினிமா பற்றி கேட்டதற்கு ’நிறைய தமிழ்ப்படங்களைப் பார்த்திருக்கேன். ரஜினியை ரொம்பப் பிடிக்கும்.

    இப்போ நான் தமிழில் நடிக்கிற ‘வீரமாதேவி’ ஷூட்டிங் ஆரம்பிக்கப்போகுது. கூடிய சீக்கிரம் நிறைய தமிழ்ப்படங்கள்ல என்னைப் பார்க்கலாம்” என்று கூறி உள்ளார். நீலப்படங்கள் பற்றி கேட்டதற்கு ’ஆடையைக் குறைப்பது மூலமா ஒரு பெண்ணோட மதிப்பு என்றுமே குறைந்துவிடாது.

    எல்லாமே பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. பாலியல் தொழில் செய்பவர்களுக்கும் நீலப்படங்களில் நடிப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.



    ஒரு பெண்ணை வற்புறுத்தி பாலியல் தொழிலுக்கு இழுத்துட்டு வரலாம். ஆனால் நீலப்படத்துறையில் ஒரு பெண்ணை வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ முடியாது’ என்று பதில் அளித்து இருக்கிறார்.
    டெல்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை வைத்து கவுரவிக்கப்பட்டுள்ளது. #SunnyAtTussauds #SunnyLeone
    பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன். இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் `வீரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். ஒரு சில இந்தி படங்களிலும் நடிக்கிறார். 

    இவரது வாழ்க்கை கதை இணைய தொடராக தயாராகி உள்ளது. சன்னிலியோன் இந்தி படங்களில் நடிப்பதற்கு அங்குள்ள கவர்ச்சி நடிகைகள் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகிறார்கள். 

    இந்த நிலையில் சன்னிலியோனுக்கு மெழுகு சிலை தயாராகி உள்ளது. டெல்லியில் உள்ள மேடம் துஷாத் மியூசியத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு அமிதாப்பச்சன், ஸ்ரீதேவி உள்பட முன்னணி நடிகர், நடிகைகளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டு உள்ளது. 



    தனது மெழுகு சிலையை சன்னிலியோன் திறந்து வைத்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து சன்னிலியோன் கூறும்போது, ‘‘எனக்கு மெழுகு சிலை வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த சிலையை பார்த்ததும் வியப்பு ஏற்பட்டது. இந்த சிலையை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் உருவாக்க நிறைய பேர் பல நாட்கள் உழைத்து உள்ளனர். அவர்களை நான் பாராட்டுகிறேன். எனக்கு மகிழ்ச்சியான உணர்வை இந்த சிலை ஏற்படுத்தி உள்ளது. இதை கவுரவமாக கருதுகிறேன்’’ என்றார். #SunnyAtTussauds #SunnyLeone

    ஆபாச படங்களில் நடித்து தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், தன்னுடைய குடும்பத்தை இழந்தது குறித்து கூறியிருக்கிறார். #SunnyLeone #Sunny
    நீலப்பட நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜீத் கவுர் தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன்’ எனும் இணைய தொடராக எடுத்து வெளியிட்டிருக்கிறார். இதன் 2-ம் பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சன்னி லியோன் அளித்த பேட்டி வருமாறு:-

    கே:- நீலப்பட நடிகையாக இருந்ததில் இழந்தது என்ன?

    ப:- என்னோட குடும்பத்தை தான். நான் என்ன செய்கிறேன், என்னோட வேலை என்னனு என் அம்மா, அப்பாகிட்ட சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை. அவர்கள் என்மீது கோபப்பட்டார்கள். கடைசி வரைக்கும் அவங்க என்னைப் புரிஞ்சுக்கவே இல்லை. ஒரு பொண்ணுக்குக் குடும்பத்துல இருந்து கிடைக்க வேண்டிய அன்பு, ஆதரவு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.



    கே:- உங்கள் வாழ்க்கை தொடரில் நீங்களே நடித்த அனுபவம் எப்படி இருக்கிறது?

    ப:- இந்த மாதிரியான ஒரு கதையைத் தேர்வு செஞ்சு நடிக்கிறது அவ்வளவு எளிதாக இல்லை. இதில் நடிக்கும் போதுதான் என்னோட வாழ்க்கை எவ்வளோ கஷ்டமானதா இருந்திருக்குனு தெரிய வந்தது. ஒரு ஆபாச நடிகையாக தான் என்னை எல்லோருக்கும் தெரியும். இந்த வெப் சீரீஸ் மூலமா என்னோட மறுமுகத்தை நீங்க பார்ப்பீர்கள்.

    என் வாழ்க்கையில் நடந்த அழுகை, கோபம், ஏமாற்றம் மாதிரியான எல்லாவிதமான உணர்ச்சிகளையும் இன்னொரு முறை கடந்து வந்த மாதிரி இருந்தது. நான் பொதுவா எமோ‌ஷனலான ஆள் கிடையாது.

    இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்ல தினந்தினம் அழுதுருக்கேன். வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், என்னோட கணவர் வெபரைப் பார்க்கும் போது தான் மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். ‘‘இதற்கு பிறகு மக்கள் என்னைப் பார்க்கிற விதமே மாறியிருச்சுனு சொல்லலாம்.

    ‘நான் உங்களோட பெரிய விசிறின்’னு ரசிகர்கள் சொல்லும் போது ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கும். ‘நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க, இனிமேல் வாழ்க்கையில நீங்க சந்தோ‌ஷமா இருக்கணும்’னு ரசிகர்கள் என்கிட்ட வந்து பேசுற அந்தச் சில தருணங்கள் எனக்கு முக்கியமானது.



    கே:- இதை படமாக எடுத்து தியேட்டர்களில் வெளியிட்டிருக்கலாமே?

    ப:- ஒரு படம்னா 3 மணிநேரத்துக்குள்ள நீங்க சொல்ல வந்த வி‌ஷயத்தைச் சொல்லிடணும். அதுவே ஒரு வெப் சீரீஸா இருக்கும்போது, உங்களுக்கான நேரத்தை நீங்க முடிவு பண்ணிக்கலாம். இதுக்காக நிறைய தயாரிப்பாளர்களை நான் சந்திச்சப்போ, ஒவ்வொருத்தவங்களும் அவங்க ரசனைக்கு ஏத்த மாதிரி கதையை மாத்திக்கிறாங்க. அதனால், வெப் சீரீஸ்தான் பெஸ்ட்.

    கே:- பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது பற்றி?

    ப:- எங்க போனாலும் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை நடக்கத்தான் செய்கிறது. நம்ம சமூகம் இது குறித்த விழிப்புணர்வையும், அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் மக்களுக்குக் கத்துக்கொடுக்க வேண்டும். பெண்களுக்கு மட்டும் இது நடக்கலை, ஆண்களுக்கும் நடந்துக்கிட்டு தான் இருக்கு. யாரையும் துன்புறுத்தவோ, வற்புறுத்தவோ மத்தவங்களுக்கு உரிமை இல்லை என்பதை எல்லோரும் புரிந்து கொண்டாலே போதும்.

    இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.
    அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் அடுத்த சன்னிலியோன் நீங்க தான் என்று விமர்சித்துள்ளார்கள். #Amalapaul
    அமலாபால் ‘ஆடை’ படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ள அவரது முதல் தோற்றம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

    அதைப் பார்த்து இந்தி நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி என்று பலரும் பேசினர். எந்த தமிழ் நடிகையும் இதற்கு முன்பு இவ்வளவு கவர்ச்சியாக தோன்றியது இல்லை என்கின்றனர். செல்போன்களில் இலவசம் என்று வரும் குறுந்தகவல்களையும் அதனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்தும் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. 

    அமலாபால் பழிவாங்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். கதை பிடித்ததால் கவர்ச்சிக்கு சம்மதித்ததாக கூறினார். இந்த நிலையில் அமலாபாலின் கவர்ச்சி தோற்றத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. இவ்வளவு கவர்ச்சியாக நடித்துள்ளதால் அவர்தான் அடுத்த சன்னிலியோன் என்று டுவிட்டரில் சிலர் மோசமான கருத்துக்களையும் பதிவிட்டு உள்ளார்கள்.



    அதே நேரம் ஆடை இல்லாமல் நடித்துள்ள அவரது துணிச்சலையும் சிலர் பாராட்டி உள்ளனர். விமர்சனங்களுக்கு பதில் அளித்து அமலாபால் கூறும்போது, ‘‘எனது முதல் தோற்றத்தை பார்த்து விமர்சிப்பவர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டுவார்கள். அந்த ஆடையுடன் நான் ஏன் அப்படி நடித்தேன் என்பது படம் பார்க்கும்போது தெரியவரும்’’ என்றார்.
    பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன், என் கணவருக்கு பிடிக்காதது எது ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். #SunnyLeone #Sunny
    ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர், சன்னி லியோன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நீலப் படங்களில் நடித்ததை கணவர் டேனியல் வெப்பர் எப்படி எடுத்துக் கொண்டார்? என்று சன்னி லியோன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 

    அவர் கூறியிருப்பதாவது:–

    ‘‘முதன் முதலாக என் கணவரை ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போதுதான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். முதல் பார்வையிலேயே இருவருக்கும் பிடித்து இருந்தது. காதல் வசப்பட்டோம். 



    வருடக்கணக்கில் ஜோடியாக சுற்றினோம். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்து கொண்டோம். நான், நீலப் படங்களில் மற்ற ஆண்களுடன் நடித்தால், என் கணவருக்கு பிடிக்காது. அதனால், அவரே என்னுடன் நடிக்க தொடங்கினார்!’’

    இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.
    தமிழில் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வரும் சன்னி லியோன், அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருடன் பிரபல நடிகர் இணைந்து நடிக்க இருக்கிறார். #SunnyLeone
    சன்னி லியோன் ஆபாசப்படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனம் ஆடியதன் மூலம் தமிழிலும் கால்பதித்த அவர், இந்தி, தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.

    தமிழில் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சன்னி லியோன் கேரளா வந்தபோது அவரைக்காண ஆயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அன்று முதல் மலையாளத் திரைப்படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறி வந்தார்.



    தற்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தப் படத்தை கண்ணசைவு புகழ் பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ பட இயக்குனர் ஒமர் லுலு இயக்குகிறார். சன்னி லியோனுடன் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் மற்றும் ஹனிரோஸ் நடிக்க உள்ளனர்.
    சன்னிலியோன் வாழ்க்கை கதை படமான ‘கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. #SunnyLeone
    சன்னிலியோன் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இப்போது ‘வீரமாதேவி’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

    சன்னிலியோனின் இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கையை ‘கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன்’ என்ற பெயரில் தொடராக தயாரித்து உள்ளனர். இந்த தொடர் இணையதளத்தில் வெளியாகிறது. சன்னிலியோனின் இளம் வயது வாழ்க்கை போராட்டங்கள், பாலியல் தொழிலுக்கு வந்த சூழ்நிலைகள், சினிமாவில் அறிமுகமானது உள்ளிட்ட வி‌ஷயங்கள் இந்த தொடரில் இடம்பெற்று உள்ளன. 

    படத்தின் தலைப்பில் கவுர் பெயரை பயன்படுத்த சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி சன்னிலியோன் வாழ்க்கை தொடர் இணையதளத்தில் வெளியானது. பணம் கட்டிய சந்தாதாரர்கள் மட்டுமே இந்த தொடரை பார்க்க முடியும். ஆனால் தமிழ் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளம் சன்னிலியோன் தொடரையும் திருடி வெளியிட்டு உள்ளது. 



    இது சன்னிலியோனுக்கும், படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிக செலவில் இந்த தொடரை படமாக்கி இருக்கிறோம். இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் வருமான இழப்பு ஏற்படும் என்று படக்குழுவினர் வருத்தப்பட்டுள்ளனர். #SunnyLeone
    பிரபல ஆபாச பட நடிகையும், பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன், என்னை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் என தமிழில் டுவிட் செய்துள்ளார். #SunnyLeone
    கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழி பெற்றோருக்கு பிறந்தவர் நடிகை சன்னி லியோன். அவரது இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜித் கவுர் - சன்னி லியோனின் சொல்லப்படாத கதை என்ற பெயரில் வெப் சீரிசாக எடுக்கப்பட்டு வருகிறது.

    கரன்ஜித் கவுராக இருந்தவர் ஆபாச பட உலகுக்கு வந்து சன்னி லியோனாக எப்படி மாறினார் என்பது பற்றி அந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    இரண்டு நிமிடம் 22 வினாடிகள் ஓடக்கூடிய அந்த டிரெய்லரில் சன்னி லியோனின் பால்ய காலம் முதல் தற்போதை நிலை வரை காட்டப்படுகிறது. அடுத்த வீட்டு பெண்ணாக இருந்து, பாலிவுட் ஸ்டாரான சன்னி லியோன் என வர்ணிக்கப்படுகிறார் அவர்.



    தமிழிலும் இதற்கு வரவேற்பு கிடைத்தது குறித்து சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்துள்ளார். அதில், ‘அனைவருக்கும் வணக்கம்.. தமிழ் உட்பட பல மொழிகளில் என் கதை சொல்லப்படுகிறது என்று நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
    பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்று ஆபாச பட நடிகை சன்னி லியோன் கூறியிருக்கிறார். #SunnyLeone
    கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழி பெற்றோருக்கு பிறந்தவர் நடிகை சன்னி லியோன். அவரது இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜித் கவுர் - சன்னி லியோனின் சொல்லப்படாத கதை என்ற பெயரில் வெப் சீரிசாக எடுக்கப்பட்டு வருகிறது.

    கரன்ஜித் கவுராக இருந்தவர் ஆபாச பட உலகுக்கு வந்து சன்னி லியோனாக எப்படி மாறினார் என்பது பற்றி அந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 16ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.



    இரண்டு நிமிடம் 22 வினாடிகள் ஓடக்கூடிய அந்த டிரெய்லரில் சன்னி லியோனின் பால்ய காலம் முதல் தற்போதை நிலை வரை காட்டப்படுகிறது. அடுத்த வீட்டு பெண்ணாக இருந்து, பாலிவுட் ஸ்டாரான சன்னி லியோன் என வர்ணிக்கப்படுகிறார் அவர்.

    பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களும் ஒன்று தான் என இந்தியாவில் உள்ள மக்கள் நினைக்கிறார்களே என சன்னி லியோனிடம் தொகுப்பாளர் ஒருவர் கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் சன்னி லியோன், இந்த எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை தைரியம் தான் என்கிறார்.

    படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சன்னி லியோன் தற்போது வீடு திரும்பி உள்ளார். #SunnyLeone
    ஆபாச நடிகையான சன்னி லியோன், இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடன ஆடிய சன்னி லியோன், தற்போது ‘வீரமாதேவி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    திரைப்படங்கள் மட்டுமில்லாமல், டி.வி. நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வரும் சன்னி லியோனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை அன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.




    தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது வீடு திரும்பியுள்ளார். மேலும் மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளார்கள். #SunnyLeone
    இந்தி, தமிழ் படங்களில் நடித்து வரும் பிரபல ஆபாச நடிகை சன்னி லியோன், சமீபத்தில் ஒரு படத்தை பார்த்து 1000 முறை கதறி அழுதிருக்கிறார். #SunnyLeone
    கனடாவில் இருந்து வந்து இந்தி படங்களில் நடித்து வரும் சன்னிலியோன் செக்ஸ் பட நடிகை என்பதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஆபாச படங்கள் இணையதளத்தில் நிரம்பி கிடக்கிறது. முன்னணி இந்தி நடிகர்கள் தங்கள் படங்களில் சன்னிலியோன் நடிப்பதை விரும்புவதில்லை.

    பெண்கள் அமைப்பினரும் சில கவர்ச்சி நடிகைகளும் சன்னிலியோனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஓங்கி குரல் எழுப்புகிறார்கள். பெங்களூருவில் நடன நிகழ்ச்சியொன்றுக்கு வரவிடாமலும் விரட்டினார்கள். செக்ஸ் நடிகை இமேஜை மாற்ற முயற்சிக்கிறார் சன்னிலியோன். தமிழில் அவர் நடிக்கும் வீரமாதேவி சரித்திர படம் அதற்கு உதவும் என்று நம்பி இருக்கிறார்.



    சன்னிலியோன் வாழ்க்கை அவரது ஒப்புதலோடு ஆவணப்படமாக தயாராகி உள்ளது. சிறுவயது சம்பவங்கள், செக்ஸ் நடிகையாக மாறிய சூழ்நிலை, குடும்பம் என்று அனைத்து விஷயங்களையும் அதில் பதிவு செய்துள்ளனர். இந்த படம் சன்னிலியோனுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த சன்னிலியோன் கதறி அழுதார். “ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது. 1000 முறைக்கு மேல் கதறி அழுதேன். நான் செய்த சில விஷயங்களை நினைத்து வருத்தப்படுகிறேன்” என்று படத்தை பற்றிய உணர்வுகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
    வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் வீரமாதேவி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. #Veeramadevi #SunnyLeone
    வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

    இந்த படத்தை பொட்டு படத்தை இயக்கியுள்ள வடிவுடையான் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் பொன்சே.ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Veeramadevi #SunnyLeone

    ×