search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide 10th class student"

    திருவட்டார் அருகே தனது பாட்டி செல்போன் வாங்கி கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகர்கோவில்:

    தக்கலையை அடுத்த மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சஜினி (வயது 34). இவரது மகன் கிஸ்காஷ் (15). இவர் திருவட்டாரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கிஸ்காஷ் தனது பாட்டியிடம் புதிய செல்போன் ஒன்று வாங்கித் தருமாறு கேட்டார். அதற்கு பாட்டி 10-ம் வகுப்பு முடித்த உடன் செல்போன் வாங்கித் தருவதாக கூறினார். ஆனால் மாணவர் தொடர்ந்து பாட்டியிடம் செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுவந்துள்ளார். அவர் வாங்கிக் கொடுக்க மறுத்துள்ளார்.

    இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட மாணவர் கிஸ்காஷ் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுத்தனர். மேலும் சம்பவம் குறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் திருவட்டார் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (39) தொழிலாளி. இவர் புதிய வீடு கட்டியதில் கடன் இருந்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று மனைவி, குழந்தைகளுடன் வெளியே சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது வீட்டில் அலெக்ஸ் தூக்குபோட்டு தற்கொலை செய்திருதார். இதனைப் பார்த்த மனைவி கதறி அழுதார். சம்பவம் குறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×