search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srirangam temple"

    ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் நம்பெருமாள் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    மங்கையர் போற்றும் நவராத்திரி விரதம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முப்பெரும் தேவியர்களான துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோரை போற்றி வணங்குவதே இந்த நாளில் சிறப்பாகும். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் அம்பிகை வீற்றிருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது. கொலுவிற்கு வரும் பக்தர்களுக்கு மங்கள பொருட்களான மஞ்சள், குங்குமம் கொடுத்து உபசரிப்பர்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரிவிழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 10-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. நவராத்திரி விழாவையொட்டி கடந்த 16-ந் தேதி ரெங்கநாச்சியார் திருவடிசேவை நடைபெற்றது. விஜயதசமியையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காட்டழகிய சிங்கர் கோவில் ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    பின்னர் மாலை 6.30 மணியளவில் அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு கோவிலில் உள்ள வன்னிமரத்தில் அம்பு போட்டார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அங்கிருந்து புறப்பட்டு சாத்தாரவீதி வழியாக வலம் வந்து இரவு 9.30 மணியளவில் சந்தனுமண்டபம் சேர்ந்தார். பின்னர் 10 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அமுதுபாறையில் திருமஞ்சனம் கண்டருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 10-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. அன்று முதல் அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளினார். விஜயதசமியான நேற்று இரவு 7.30 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க வன்னி மரம் சென்றடைந்தார். அங்கு, அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இதேபோல இனாம் சமயபுரத்தில் உள்ள அய்யாளம்மன் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளிய அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வன்னி மரம் சென்றடைந்தார். அங்கு கோவில் பூசாரி சுரேஷ்குமார் தலைமையில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளரை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் விஜயதசமியையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் கோவிலின் கிழக்கு வாசல் அருகே எழுந்தருளினார். அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விஜயதசமியையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்டழகிய சிங்கர் கோவிலில் உள்ள வன்னி மரத்தின் மீது அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் புகழ்பெற்ற பெரியகாண்டியம்மன், சப்தகன்னிமார், பொன்னர்-சங்கர், தங்காள், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய கன்னிமாரம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் மாசிப் பெருந்திருவிழா நடைபெறும். பொன்னர், குதிரை வாகனத்தில் சென்று அம்பு போடும் வேடபரி திருவிழா முக்கிய திருவிழாவாக கருதப்படும்.

    இதற்கு அடுத்தபடியாக மகாநோன்பு திருவிழா நடைபெறும். இந்த திருவிழா நேற்று முன்தினம் மாலை ஆயுதபூஜை அன்று தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து நேற்று மாலை கோவில் வழக்கப்படி வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் முன்பிருந்து முரசு கொட்டும் சாம்புவன் காளை முன்னே செல்ல அதைத்தொடர்ந்து ஜமீன்தார்கள், பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் செல்ல, குதிரை வாகனத்தில் குதிரை பூசாரி மாரியப்பன் பொன்னர் தெய்வத்துடன் நின்று வர, அதைத் தொடர்ந்து யானை வாகனத்தில் பெரிய பூசாரி முத்து மகன் செல்வம் பெரியகாண்டியம்மன் அருகில் கரகப்பூசாரி மணி என்ற வீரமலை தங்காள் கரகம் சுமந்து செல்ல வேடபரி புறப்பட்டு பெரியகாண்டியம்மன் கோவில் எதிர் திசையில் உள்ள தேவரடிக்காடு என்ற இடம் சென்றது.

    அங்கு யானை வாகனத்தில் இருந்து பெரியகாண்டியம்மன் வாழை மரத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாழை மரத்தில் அம்பு எய்ததும் தரையில் தண்ணீர் விழுந்த மண்ணை பக்தர்கள் எடுத்துச் சென்று வீடுகளில் வைத்து வழிபட்டனர். திருவிழாவில் வீ.பூசாரிபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் புறப்பட்டு நாகநாதர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து இன்று காலை வஸ்திர மரியாதை பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.
    ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதேபோல் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரம் தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் ஆண்டாளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதன்படி இந்த ஆண்டு வஸ்திர மரியாதை பொருட்கள் வழங்கப்படுவதையொட்டி, நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    பின்னர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் பட்டு வஸ்திரங்களை யானை மீது அமர்ந்து எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கல பொருட்களை கைகளில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கல பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்படும்.

    இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தில், தேரில் எழுந்தருளுவார். 
    நெற்றியில் இடப்பட்ட மத அடையாளத்தை ஸ்டாலின் அழித்ததால் பகிரங்க மன்னிப்பு கேட்ட வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். #ponradhakrishnan #mkstalin

    நாகர்கோவில்:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார். ரெங்கா ரெங்கா கோபுரம் அருகே அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    தேர்தல் வெற்றிக்காக ஸ்ரீரெங்கம் கோவிலில் சுக்கிரயாகம் நடத்தியதாக தகவல்கள் பரவியது.

    இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    ரெங்க நாதருக்கு சாத்தப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டதோடு, ரெங்கநாயகி அம்மையாருக்கான பிரசாதம், மு.க. ஸ்டாலின் நெற்றியில் பூசப்பட்டுள்ளது. இதை மு.க. ஸ்டாலின் அழித்திருக்கிறார். இது மிகவும் வருந்தத்தக்க செயல்.

    நெற்றியில் இடப்பட்ட மத அடையாளத்தை ஸ்டாலின் அழித்ததை ஏற்க முடியாது. இது தெய்வதிற்கு இழைக்கப்பட்ட அவமானம். இதற்காக மு.க. ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    நெற்றியில் இடப்பட்ட அடையாளத்தை ஸ்டாலின் அழித்தபோது அதை பார்த்த பூசாரிகள், பட்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? யாரை நம்ப வைக்க அவர், இந்த வேடம் போடுகிறார்.

    மு.க.ஸ்டாலின் மத அடையாளத்தை அழித்ததால் இனி அவரை எந்த கோவிலுக்குள்ளும் அனுமதிக்கக்கூடாது. இதற்கான பட்டியலில் அவரது பெயரையும் சேர்க்க வேண்டும்.

    மேலும் ஸ்டாலினை கோவிலுக்குள் அனுமதிக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் கூட குன்றக்குடி அடிகளார் திருநீறு அணிவித்தபோது அதை அழிக்கவில்லை. தெய்வ நம்பிக்கை இல்லையென்று பகிரங்கமாக கூறியவர் கூட இதுபோன்ற செயலை செய்யவில்லை.


    ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஸ்டாலின் செய்த தவறுக்காக அங்குள்ள சாமிக்கு பரிகார பூஜை செய்ய வேண்டும். இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். ஆகம விதிகள் மீறப்பட்டதா? என்பதையும் விளக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #mkstalin

    ×