search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sooriya Bagavan"

    சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தொலைவு 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர் ஆகும்!

    சுயமாக ஒளியையும், வெப்ப ஆற்றலையும் உமிழும் கோளம் சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தொலைவு

    14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர் ஆகும்! சூரியன் தன்னைத்தானே சுற்றிக் கொள்ள ஆகும் காலம் 25.38 நாட்களாகும்.

    சூரியனின் இயக்க வேகம் வினாடிக்கு 20 கிலோ மீட்டர் ஆகும். இதன் இயக்கப் பயணத்தில் தன்னுடன் சார்ந்த பூமி பிற கோள்களையும், விண்மீன்களையும் கூடவே இழுத்துச் செல்கிறது!

    சூரியன் தனது "ஈர்ப்புச் சக்தியால்" பிற கோள்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அவைகளை ஒரே சீரான நீள்வட்ட பாதையில் இயங்க வழிவகை செய்கிறது.

    விஞ்ஞானத்தில் சூரியன்:

    சூரியனில் நிகழும் "அணுக்கரு இணைவு" வினைதான் அதன் நீண்டகால ஒளி உமிழ் ஆற்றலையும், தீராத வெப்ப ஆற்றலையும் தரக் காரணமாக இருக்கிறது.

    சூரியனின் நிறமாலைகள்:

    சூரியனின் ஒளிக்கதிரை முப்பட்டகம் ஒன்றின் வழியாக பாய்ச்சப்படும் போது அது ஏழு வண்ண ஒளிகளாக பிரிகை அடைகிறது.

    இந்த வண்ணங்களின் தொகுப்பே சூரிய நிறமாலை எனப்படுகிறது.

    • தந்தை: காசியப முனிவர் தாய்: அதிதி
    • சூரியனின் சகோதரர்கள்: கருடன், அருணன்

    சூரியனின் பெற்றோர்கள்:

    தந்தை: காசியப முனிவர்

    தாய்: அதிதி

    சூரியனின் சகோதரர்கள்:

    * கருடன்

    * அருணன்

    சூரியனின் மனைவிகள்:

    * உஷாதேவி

    * சாயாதேவி

    சூரியனின் புத்திரர்கள்:

    * சூரியன்+சாயாதேவி = சனீஸ்வரன்

    * எமன், அஸ்வினி தேவர்கள், கர்ணன், சுக்ரீவன்

    போன்றவர்கள் சூரியனின் புதல்வர்கள்.

    சூரியனின் புத்திரிகள்:

    * யமுனை, பத்திரை

    * எமனின் தங்கை யமுனா.

    • வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
    • தேசிகா எனைரட்சிப்பாய் ச்ங்கதிரவனே போற்றி”

    "காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்

    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்

    வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த

    தேசிகா எனைரட்சிப்பாய் ச்ங்கதிரவனே போற்றி"

    சீலமாய் வாழ சீரருள் புரியும்

    ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி

    சூரியா போற்றி சுந்தரா போற்றி

    வீரியா போற்றி வினைகள் களைவாய்

    ஞாலம் காக்கும் ஞாயிறே போற்றி

    நாளும் நன்றே நல்குவாய் போற்றி

    சீலம் எல்லாம் சேர்ப்பாய் போற்றி

    காலம் முழுவதும் அருள்வாய் போற்றி

    • தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.
    • ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.

    உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனுமன் கோவிலுக்குப் போய் வழிபடுங்கள்.

    தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45-க்குள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.

    பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள்.

    ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.

    வசதி இருப்பவர்கள், மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள்.

    அல்லது, மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள்.

    வருடத்திற்கு ஒரு முறை அனுமன் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்து விட்டு கோதுமையால் ஆன

    இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது.

    தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து அன்றாடப் பணி களைச் செய்ய ஆரம்பியுங்கள்.

    மாதத்தில் ஒருநாள் நவக்கிரக சூரியனை தரிசித்து வழிபடுங்கள்.

    மேற்கண்ட பரிகாரங்களுள் உங்களால் இயன்றதையெல்லாம் செய்யுங்கள்.

    சூரியதோஷம் நிச்சயமாக உங்களை விட்டுப் போகும்.

    • இந்து சூரியக் கடவுளான சூரியனின் இறைவழிபாட்டில் இருந்து திரிந்து இது பிறந்ததாகும்.
    • பயிற்சி இணைப்புகளின் உடல்சார் அடிப்படையானது

    சூரிய நமஸ்காரம் அல்லது சூரிய வணக்கமுறை என்பது ஹட யோக ஆசனங்களின் பொதுவான வரிசை முறையாகும்.

    இந்து சூரியக் கடவுளான சூரியனின் இறைவழிபாட்டில் இருந்து திரிந்து இது பிறந்ததாகும்.

    இந்த இயக்கங்களின் வரிசைமுறை மற்றும் நிலைகளானது விழிப்புணர்வின் மாறுபட்ட நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    ஆசனம், பிரணாயாமம், மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒன்றிணைத்து பல்வேறு பாணிகளில் உடல் பயிற்சிகளின் எல்லைகளைக் கொண்ட ஒரு முழுமையான சாதனாவாக இது உள்ளது.

    பயிற்சி இணைப்புகளின் உடல்சார் அடிப்படையானது இயக்கவியலில் செயல்படுத்தும் வரிசையில் பன்னிரண்டு ஆசனங்களை ஒன்றாய் கொண்டுள்ளது.

    இந்த ஆசனங்கள் சீர்படுத்தப்பட்டுள்ளன.

    அதனால் ஆசனங்களைச் செய்பவர்கள் முதுகெலும்பு முன்னோக்கியும், பின்னோக்கியும் மாறி மாறி நீட்ட முடியும்.

    வழக்கமான வழியில் செயல்படும் போது ஒவ்வொரு ஆசனமும் (ஆறாவது ஆசனத்தைத் தவிர்த்து, மூச்சோட்டமானது வெளிப்புற தாமதத்துடன் கடைப்பிடிக்கப்படும்) மாறி மாறி நிகழும் மூச்சை உள்ளழுத்தல் மற்றும் மூச்சை வெளியிடுதலுடன் நகரும்.

    சூரிய நமஸ்காரத்தின் ஒரு முழுச் சுற்றானது இந்த வரிசையின் வழியாக எதிர்பக்கத்திலுள்ள காலை முதலில் நகர்த்தும் இரண்டாவது தொகுப்பில் மாறுவதுடன் பன்னிரண்டு நிலைகளுடைய இரண்டு தொகுப்புகள் இதில் கருதப்படுகின்றன.

    • பொங்கல் தினத்தன்று மறக்காமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டும்.
    • சூரிய நாராயண பூஜைக்குக் கோலம் போட வேண்டிது மிகவும் அவசியம்.

    பொங்கல் தினத்தன்று மறக்காமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டும்.

    பொங்கலிட்டு முடிந்ததும் செய்ய வேண்டிய பூஜை விவரம் வருமாறு:-

    சூர்ய நாராயண பூஜை செய்யும் போது சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை, சாதம், பருப்பு, கறி வகைகள், செய்து தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், கரும்பு வைத்து சூரியனுக்கு நைவேத்யம் செய்ய வேண்டும்.

    சூரிய பூஜை திறந்த வெளி அதாவது முற்றத்திலோ அல்லது மாடியிலேயோ செய்ய வேண்டும்.

    பொங்கல் அன்று சாம்பார், மோர்க்குழம்பு செய்யக்கூடாது. கூட்டு செய்யலாம்.

    பூஜை முடிந்த பிறகு ஒரு கிண்ணத்தில் சர்க்கரைப்பொங்கல், மற்றும் சமைத்திருக்கும் யாவற்றையும் போட்டு, பால்விட்டு, கலந்து வீட்டில் உள்ள யாவரும் "பொங்கலோ பொங்கல்" என்று கூவி வீட்டின் நான்கு திக்குகளிலும், காக்கைக்கும் வைக்க வேண்டும்.

    இதற்கு பின்னர் பூஜை கிடையாது.

    சூரிய நாராயண பூஜைக்குக் கோலம் போட வேண்டிது மிகவும் அவசியம்.

    • உதாரணமாக கன்னி மாதம் என்கிற புரட்டாசியில் சூரியன் வருணனாக காட்சியளிக்கிறார்.
    • யுகத்தின் முடிவில் இந்த 12 சூரியர்களும் ஒரே சமயத்தில் உதிப்பார்களாம்.

    சூரியனின் பன்னிரெண்டு வடிவங்கள் பின்வருமாறு:-

    மேஷம் -இந்திரன்,

    ரிஷபம் -தாதா,

    மிதுனம் - பகன்

    கடகம் - மித்திரன்

    சிம்மம் - சகாயன்

    கன்னி -வருணன்

    துலாம் - அர்யமா

    விருச்சிகம் -அர்ச்சிஸ்

    தனுசு - விவஸ்வான்

    மகரம் -த்வஷ்டா

    கும்பம் -ஸவிதா

    மீனம் -விஷ்ணு

    பன்னிரெண்டு ராசிகளில் சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும்போது ஒவ்வொரு வடிவில் தரிசனம் தருகிறார்.

    உதாரணமாக கன்னி மாதம் என்கிற புரட்டாசியில் சூரியன் வருணனாக காட்சியளிக்கிறார்.

    யுகத்தின் முடிவில் இந்த 12 சூரியர்களும் ஒரே சமயத்தில் உதிப்பார்களாம்.

    சூரியன் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் 1 மாதம் ஆகும். ஒரு ராசி என்பது 30 பாகை கொண்டதாகும்.

    சூரியன் மேஷ ராசியில் நுழையும் தினமே புதுவருடப் பிறப்பு தினமாகும்.

    பன்னிரு ராசிகளில் சூரியன் பன்னிரு வடிவங்களில் காட்சி அளிக்கிறார்.

    • ஈசனிடம் அருள் பெற்ற இந்த சூரியன் "மயூகாதித்யர்" என்று போற்றப்பட்டார்.
    • இந்த ஆலயம் கங்கைக்கரையோரம் உள்ள பஞ்சகங்கா காட் அருகில் உள்ளது.

    முன்னொரு காலத்தில் சூரிய பகவான் காசி திருத்தலத்தில் ஈசனையும், உமையையும் ஸ்ரீமங்களகவுரி,

    ஸ்ரீகபஸ்தீஸ்வரர் என்ற திருப்பெயருடன் பிரதிஷ்டை செய்து சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் கடுமையாகத் தவம் புரிந்தார்.

    சூரியனின் தவத்தினை போற்றிய சிவபெருமான் சூரியனுக்கு மயூகன் என்று பெயர் சூட்டி, சூரியன் கேட்ட வரத்தை அருளினார்.

    ஈசனிடம் அருள் பெற்ற இந்த சூரியன் "மயூகாதித்யர்" என்று போற்றப்பட்டார்.

    இந்த ஆலயம் கங்கைக்கரையோரம் உள்ள பஞ்சகங்கா காட் அருகில் உள்ளது.

    சூரிய ஹோரையின் பலன்கள்

    உத்தியோகம், வியாபாரம் செய்ய ஒருவருடைய தயவு பெற ஒதடதியோகஸாட உயில் சாசனம் முதலியவைகள் செய்வதற்கு நலம்.

    இந்த நேரத்தில் சூரிய பகவானை வழிபட்டு அவரை நினைத்து பிரார்த்தனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஹோரையின் கால அளவு 1 மணி நேரம் ஆகும்.

    • கங்கை நதி காசிக்குள் பிரவேசித்ததை அறிந்த சூரிய பகவான், கங்கையையும் வழிபட்டுப் பேறுகள் பெற்றான்.
    • இங்குள்ள சூரிய பகவானை “கங்காதித்யர்” என்று போற்றுவர்.

    பகீரதன், தன் மூதாதையர் புனிதமடைவதற்காக கடுமையாக தவம் புரிந்து பூலோகத்திற்கு கங்கை நதியை வரவழைத்தான்.

    அந்த வேளையில் சூரிய பகவான் பூமிக்கு வந்து காசி விஸ்வநாதரை வழிபட்டு கொண்டிருந்தான்.

    கங்கை நதி காசிக்குள் பிரவேசித்ததை அறிந்த சூரிய பகவான், கங்கையையும் வழிபட்டுப் பேறுகள் பெற்றான்.

    அதன் நினைவாக காசி திருத்தலத்தில் லலிதாகாட் படித்துறை அருகில் ஒரு சூரியன் ஆலயம் உள்ளது.

    இங்குள்ள சூரிய பகவானை "கங்காதித்யர்" என்று போற்றுவர்.

    ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹிரண்யகர்ப்ப மரீசிப்யா மரீசிப்யா நம!

    1. ஓம் ஸ்ரீகணேசாய நம:

    2. ஓம் ஸ்ரீ குருப்யோ நம:

    3. ஓம் ஹ்ராம் மித்ராய நம:

    4. ஓம் ஹ்ரீம் ரவயே நம:

    5. ஓம் ஹ்ரூம் சூர்யாய நம:

    6. ஓம் ஹ்ரைம் பானவே நம:

    7. ஓம் ஹ்ரௌம் ககாய நம:

    8. ஓம் ஹ்ர பூஷ்ணே நம:

    9, ஓம் ஹ்ராம் ஹிரண்யகர்ப்பாய நம:

    10. ஓம் ஹ்ரீம் மரீசயே நம:

    11. ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நம:

    12. ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நம:

    13. ஓம் ஹ்ரௌம் அர்க்காய நம:

    14. ஓம் ஹ்ர பாஸ்கராய நம:

    15. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் மித்ரரவிப்யாம் நம:

    16. ஓம் ஹ்ரூம் ஹ்ரைம் சூர்யபானுப்யாம் நம:

    17. ஓம் ஹ்ரௌம் ஹ்ரசக பூஷப்பயாம் நம:

    18. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹிரண்யகர்ப்ப மரீசிப்யா மரீசிப்யா நம:

    19. ஓம் ஹ்ரூம் ஹ்ரைம் ஆதித்ய ஸவித்ரப்பாயாம் நம:

    20. ஓம் ஹ்ரௌம் ஹ்ர அர்க்க பாஸ்கராப்யாம் நம:

    21. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் மித்ர ரவி சூர்ய பானுப்யோ நம:

    22. ஓம் ஹ்ரௌம் ஹ்ர ஹ்ராம்ஹ்ரீம் கக பூஷ ஹிரண்யகர்ப்ப மரீசிப்யோ நம:

    23. ஓம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹர ஆதித்ய ஸவித்ரார்க்க பாஸ்கரேப்யோ நம:

    24. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ர மித்ர ரவிசூர்ய, பானு கக பூஷப்யோ நம:

    25. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹரௌம் ஹிரண்ய கர்ப்ப மரீசி ஆதித்ய ஸவித்ர அர்க்க பாஸ்கரேப்யோ நம:

    26. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹர மித்ர ரவி சூர்ய பானு கக பூஷ ஹிரண்யகர்ப்ப மரீசி ஆதித்ய ஸவித்ர அர்க்க பாஸ்கரேப்யோ நம:

    27. பானோ பாஸ்கர மார்த்தாண்ட கண்ட ரச்மீ ப்ரபாகரா ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்ய பக்திம் தேஹி திவாகரா.

    • பஞ்ச பாஸ்கர ஸ்தலம் என்பது சூரியனை மையமாக வைத்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள ஸ்தலங்களாகும்.
    • வாரங்களில் முதல் நாளை ஞாயிறு என்றும், மாதங்களில் முதல் நாளை ஆதித்ய என்றும் குறிப்பிடுவார்கள்.

    1. ஞாயிறு - சென்னைக்கு அருகில்

    2. திருச்சிறுகுடி- நன்னிலம் அருகில்

    3. திருமங்களகுடி- ஆடுதுறை அருகில்

    4. திருப்பரிதி நியமம்- நீடாமங்கலம் அருகில்

    5. தலைஞாயிறு- திருவாரூர் அருகில்

    பஞ்ச பாஸ்கர ஸ்தலம் என்பது சூரியனை மையமாக வைத்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள ஸ்தலங்களாகும்.

    அதில் ஒன்று ஞாயிறு ஸ்தலம். சூரிய பகவான் பூசித்தால் இத்திருநாமம் பூண்டது.

    வாரங்களில் முதல் நாளை ஞாயிறு என்றும், மாதங்களில் முதல் நாளை ஆதித்ய என்றும் குறிப்பிடுவார்கள்.

    முதல் மாதமான சித்திரை முதல் நாளிலிருந்து 7 நாட்களுக்கு ஆதித்தன் அலை கடலெழுந்து தன் ஆயிரம் கிரணங்களால் ஈசன் அம்மை இருவருக்கும் பாதசேவை புரிவது போன்று காலடியில் ஒளியைப் படரவிட்டு இறைவி, இறைவன் இருவரையும் சூரிய பகவான் வணங்குகிறார்.

    ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டு தினத்திலும், தை மாதப் பிறப்பு அன்றும் சிறப்பு சூரிய வழிபாடு நடைபெறுகிறது.

    • ராமாயணத்தில் அகத்தியர் ராமருக்கு உபதேசித்த மந்திரம்-ஆதித்ய ஹிருதயம் யுத்த காண்டத்தில் வருகிறது.
    • இந்த மந்திரத்தை பாராயணம் செய்து சூரிய பகவானை வழிபட்டால் தொழு நோய் நீங்கும்.

    ராமாயணத்தில் அகத்தியர் ராமருக்கு உபதேசித்த மந்திரம்-ஆதித்ய ஹிருதயம் யுத்த காண்டத்தில் வருகிறது.

    ராமபிரான் இந்த மந்திரத்தை உபாசனை செய்து ராவணனை வென்றார்.

    இப்போதும் சூரிய உபாசனை செய்பவர்கள் பாராயணம் செய்கிறார்கள்.

    இத்தலத்தில் இந்த மந்திரத்தை உபாசனை செய்வது மிகவும் விசேஷம்.

    மகாபாரதத்தில் கிருஷ்ணனுடைய மகன் சாம்பன் சூரியனைப் பாடிய செய்யுள் ஐம்பது உள்ளது.

    ஸாம்ப பஞ்சாசத் இந்த மந்திரத்தை பாராயணம் செய்து சூரிய நமஸ்காரம் செய்து ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும், கண்பார்வையும் பெறுவதற்கு ஏற்ற மந்திரமாகும்.

    போஜ ராஜனின் சபையில் பாண கவியுடன் விளங்கிய மயூர கவியின் "சூரிய சதகம்" தனிச் சிறப்பு வாய்ந்தது.

    இந்த மந்திரத்தை பாராயணம் செய்து சூரிய பகவானை வழிபட்டால் தொழு நோய் நீங்கும்.

    அவ்வளவு வலிமை வாய்ந்த மந்திரமாகும்.

    ×