search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "somanatha swamy"

    • வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • ஜூலை 5-ந் தேதி இரவு சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா எழுந்தருளல் நடக்கிறது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலின் ஆனி உத்திர திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

    இதற்கான கால்நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் கன்னி விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து முகூர்த்தகால் நாட்டும் விழா நடைபெற்றது.

    இதற்கான சடங்கு வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் மற்றும் சண்முகம் பட்டர் ஆகியோர் செய்தனர். பக்த ஜன சபை சார்பில் பூபால் ராஜன், தெரிசை அய்யப்பன், சுப்பிரமணியன், தங்கமணி மற்றும் திருமுறை பண்ணிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார். இதன் பின்னர் மாலையில் திருவிளக்கு பூஜையும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினசரி காலையும் மாலையும் சப்பர பவனி நடக்கிறது.

    சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. நிறைவு நாளான ஜூலை 5-ந் தேதி இரவு சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா எழுந்தருளல் நடக்கிறது.

    • ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    • 24 வருடங்களுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பிரசித்தி பெற்ற சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவில் உள்ளது. கற்கோவிலான இக்கோவில் மன்னர் காலத்தில் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

    கோவிலில் பழம் பெருமையை பறைசாற்றும் பல்வேறு கல்வெட்டுகளும் உள்ளது. தாமிரபரணி ஆற்றுக் கரையோரம் அமைந்துள்ள இக்கோவில் தாமிரபரணியின் குறுக்கே பாலம் இல்லாத காலத்தில் கட்டப்பட்டிருப்பதை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர். 24 வருடங்களுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

    அதிகாலையிலேயே கோவில் வளாகம் முழுவதும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. கோபுர தரிசனம் செய்வதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் இரண்டு இடங்களில் படி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அனைத்து பொதுமக்களும் எளிதாக சென்று கோபுரங்கள் அருகில் சென்று தரிசனம் செய்தனர்.

    கோவிலில் கூட்டம் அலை மோதியதால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பெருங்குளம் 103-வது செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பிரம்மச்சாரி சுவாமிகள், டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த தலைவர் ஸ்ரீனிவாசன், தி.மு.க. மாணவரணி செயலாளர் உமரி சங்கர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய சதீஷ்குமார், ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர்கமால்தீன்,

    புன்னைக்காயல் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா, ஆத்தூர் பேரூராட்சி தி.மு.க. செயலாளர் முருகானந்தம், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் சரக ஆய்வாளர் செந்தில்நாயகி, ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி தேவஸ்தான செயல் அலுவலர் ஜெயந்தி, ஆத்தூர் இன்ஸ்பெக்டர் அய்யப்பன்,

    ஆத்தூர் அ.தி.மு.க. அவைத் தலைவர் அண்ணாமலை சுப்பிரமணியன், ஆத்தூர் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ஆண்டிப்பட்டி என்ற கண்ணன், மற்றும் மண்டகப்படிதாரர்கள், கும்பாபிஷேக திருப்பணிகள் உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆனந்த வல்லி அம்மன் சோமநாதர் திருக்கோவில் சிவனின் அம்சமாக கருதப்படும் வில்வகாடாக இருந்ததை காண முடிகிறது.
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆனந்த வல்லி அம்மன் சோமநாதர் திருக்கோவில் சிவனின் அம்சமாக கருதப்படும் வில்வகாடாக இருந்ததை காண முடிகிறது.

    இக்கோவில் முழுவதும் வில்வமே ஸ்தல விருட்ச மரமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் அதிக அளவில் வில்வமரங்களை இன்னும் காண முடிகிறது.

    சிவனே சோமநாதராக அருள்பாலிக்கும் வில்வவன ஷேத்திரமாக இப்போதும் உள்ளது. சந்திரன் 48 நாட்கள் தங்கி சோமநாதர் ஆனந்தவல்லியை வணங்கி சுகம்அடைந்ததால் கிருதயுகத்தில் சந்திரபட்டணம் எனவும் திரே தாயுகத்தில் வாரை வீர மதுரை மற்றும் வில்வவனம் வானரபுரம் என பல பெயர்கள் இருந்து தற்போது வானர்கள் போற்றும் மானாமதுரையாக உள்ளது.

    இங்கு உள்ள சோமநாதர் பால் வெண்மை நிறத்தில் அருள்பாலிக்கிறார். ஆனந்தவல்லியை வணங்கி பலர் வாழவில் அற்புதங்கள் நிகழ்ந்ததால் அற்புதங்கள் தரும் ஆனந்த வல்லியாக மானாமதுரை மக்களுக்கு அருள் ஆசி வழங்கி வருவது தனிச்சிறப்பாக உள்ளது.

    சந்திரன் சாபம் நீங்க புஷ்கரணி தீர்த்தம் உருவாக்கப்பட்டு கோவில் முன்பு கிணறு வடிவில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
    ×