search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skin"

    முகம் முழுவதும் சீரான சருமம் இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. கருவளையத்தை எளிய முறையில் நிரந்தரமாகப் போக்கிட சில இயற்கை சிகிச்சைகள் உள்ளன.
    முகம் முழுவதும் சீரான சருமம் இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. பிரசவத்துக்குப் பின் சரியாக தூங்காமல் பல தாய்மார்களுக்கு கண்களை சுற்றி கருவளையம் இருக்கும். அதை எளிய முறையில் நிரந்தரமாகப் போக்கிட சில இயற்கை சிகிச்சைகள் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

    ஹோம்மேட் தேன் ஐ பேக்

    வெள்ளரிக்காய் துண்டு - 3
    உருளைக்கிழங்கு துண்டுகள் - 3
    தேன் - 1 டீஸ்பூன்
    கற்றாலை ஜெல் - 1 டீஸ்பூன்

    வெள்ளரிக்காய், உருளைக்கிழங்களையும் தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.

    இதில் தேனும் கற்றாலை ஜெல்லும் சேர்த்து நன்கு கலக்கவும்.

    ஹோம்மேட் தேன் ஐ பேக் ரெடி. இதைக் கண்களை சுற்றி தடவுவதற்கு முன், பன்னீரால் சுத்தமாக துடைத்த பின் இந்த கீரிமை போடவும். மறுநாள் காலை கழுவி விடலாம். ஒரு வாரத்திலே கருவளையம் மறைய ஆரம்பிப்பதை பார்க்க முடியும்.

    ஹோம்மேட் கிரீன் டீ ஐ பேக்

    homemade green tea eye cream


    பாதாம் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கற்றாலை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்
    கிரீன் டீ - 1 டீஸ்பூன்

    இவற்றை ஒரு பவுலில் போட்டு, நன்கு கலந்து சுத்தமான டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் இரவில் உங்கள் கண்களை சுற்றி தடவிய பின், மோதிர விரலால் கிளாக் வைஸ் மற்றும் ஆன்டி கிளாக் வைஸாக சுற்றி மசாஜ் செய்யவும். 10 நாட்களில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.
    முகத்தில் உள்ள அழுக்கையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். இத்தகைய பிளீச்சிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். பொதுவாக இத்தகைய பிளீச்சிங்கை அதிக செலவு இன்றி வீட்டிலேயே செய்யலாம். சருமத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளலாம்.

    * ப்ளீச்சிங் செய்யும்போது முகக்கலவை புருவத்திலோ அல்லது தலை முடியிலோ படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * ப்ளீச்சிங் செய்யும் முன் முகத்தை கிளன்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குகிறது. அதுமட்டுமின்றி கிளன்சிங் செய்வதால் முகத்தில் மேக்அப் போட்டிருந்தால் அதுவும் நீங்கிவிடும். எனவே பால் அல்லது கிளன்சரைக் கொண்டு பஞ்சு மூலம் முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

    * முகத்திற்கான ப்ளீச் கிரீம் மற்றும் கால் ஸ்பூன் ஆக்டிவேட்டர் பவுடரை போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ப்ளீச் கிரீமுடன் ஆக்டிவேட்டர் பவுடர் கலந்து உள்ள பேக்குகளை பயன்படுத்தலாம்.

    * பின் அதனை நன்கு கட்டி இல்லாதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். புருவம் மற்றும் தலைமுடியில் படாதவாறு முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.

    * பின்னர் ரோஸ் வாட்டரில் காட்டன் துண்டுகளில் எடுத்து கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

    * பின்னர் மெல்லிய துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

    * அடுத்து ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பழங்கள் அல்லது ஆப்பிள் பழத்தை குழைத்து பேஸ் பேக் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து மெல்லிய காட்டன் துணியில் துடைத்து எடுக்க வேண்டும்.

    * இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ளநச்சுகள் நீங்கி சருமம் நல்ல நிறத்துடன் காணப்படும்.
    முக‌த்‌தி‌ல்தா‌ன் எ‌த்தனை எ‌த்தனை ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌‌கி‌ன்றன. அத‌ற்கான ‌தீ‌ர்வுகளை தேடி பெ‌ண்க‌ள் அ‌லு‌த்து‌ப் போ‌ய்‌விடு‌கிறா‌ர்க‌ள். முக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளையு‌ம், அத‌ற்கான ‌தீ‌ர்வையு‌ம் பார்க்கலாம்.
    முக‌ம்தா‌ன் அழகு‌க்கு ‌பிரதானமாகு‌ம். அழகான, அமை‌தியான முகமே ‌சிற‌ந்த அழகை எடு‌த்து‌க் கா‌ட்டு‌ம். ஆனா‌ல் அ‌ந்த முக‌த்‌தி‌ல்தா‌ன் எ‌த்தனை எ‌த்தனை ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌‌கி‌ன்றன. அத‌ற்கான ‌தீ‌ர்வுகளை தேடி பெ‌ண்க‌ள் அ‌லு‌த்து‌ப் போ‌ய்‌விடு‌கிறா‌ர்க‌ள். இ‌ப்படி முக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளையு‌ம், அத‌ற்கான ‌தீ‌ர்வையு‌ம் கூறுவதே இ‌ந்த க‌ட்டுரை‌யி‌ன் நோ‌க்க‌ம்.

    முக‌ம் எ‌ன்பது எ‌ப்போது‌ம் ப‌ளி‌ச்செ‌ன்று இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக பலரு‌ம் அ‌திக‌ப்படியான மே‌க்க‌ப்பை போடு‌கிறா‌ர்க‌ள். இதனா‌ல் நமது சரும‌ம் அ‌திகமாக பா‌தி‌ப்படை‌ந்து சோ‌ர்வடை‌கிறது. இதுபோ‌ன்றவ‌ர்களது முக‌த்தை மே‌க்க‌ப் இ‌ன்‌றி பா‌ர்‌க்கவே முடியாத அள‌வி‌ற்கு மோசமடைவது பலரு‌ம் அ‌றி‌ந்த உ‌ண்மை.

    எனவே, மே‌க்க‌ப் போடுவது தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் சரும‌த்தை பா‌தி‌க்காத மே‌க்க‌ப் சாதன‌ங்களை வா‌ங்‌கி அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ள நேர‌த்‌தி‌ற்கு ம‌ட்டு‌ம் பய‌ன்படு‌த்தவு‌ம். இர‌வி‌ல் தூ‌ங்க‌ச் செ‌ல்லு‌ம் போது முக‌த்தை ந‌ன்கு சு‌த்த‌ப்படு‌த்‌தி‌வி‌‌ட்டு தூ‌ங்குவது சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்லது.

    மேலு‌ம், அ‌திகமாக மே‌க்க‌ப் போ‌ட்டதா‌ல் சரும‌ம் இழ‌ந்த ஈர‌ப்பத‌த்தை‌ப் பெற தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌ முக‌ம் முழுவது‌ம் மசா‌ஜ் செ‌ய்து‌வி‌ட்டு தூ‌ங்குவது சரும‌த்‌தி‌ற்கு‌ம் ந‌ல்லது.

    அடு‌த்ததாக முக‌ப்பரு. இது டீ‌‌ன் ஏ‌ஜ் பெ‌ண்க‌ளி‌ன் பெரு‌ம் கவலை. பொதுவாக முக‌ப்பரு எ‌ன்பது உட‌ல் த‌ன்மையை‌ப் பொரு‌த்து ஏ‌ற்படுவது. இதனை சமா‌ளி‌க்க பல வ‌ழிக‌ள் உ‌ள்ளன.

    எலு‌ம்‌பி‌ச்சை சாறு, பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து இர‌வி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் பருக்கள் நீங்கும்.

    பரு‌க்க‌ள் வ‌ந்தது‌ம் கை ‌விர‌ல் நக‌ங்களா‌ல் பருவை ‌கி‌ள்ளவதை‌த் த‌வி‌ர்‌ப்பது ‌மிகவு‌ம் ந‌ல்லது. ‌விர‌ல்களா‌ல் ‌கி‌ள்ளு‌ம் போதுதா‌ன் முக‌ப்பரு வ‌ந்த இட‌த்‌தி‌ல் அடையாள‌ம் ‌விழு‌கிறது. மேலு‌ம் சரும‌த்‌தி‌ன் பல இட‌ங்களு‌க்கு‌ம் பரவு‌கிறது.
    சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.
    தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.

    கண்கள்:


    முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும். சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக்கொள்ளலாம். நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கரு வளையங்கள் மறையும்.

    உதடுகள்:

    தினமும் சிறிதளவு ‘வேசலின்’ எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.

    பாதம்:

    நாள்தோறும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு சோர்வா வருவீங்க இல்லையா? வந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நல்ல நறுமணமுள்ள குளியல் உப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, உங்கள் பாதங்களை அதில் ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். சும்மா இருப்பது போரடித்தால், நல்ல ஸ்க்ரப்பர் கொண்டு குதிகாலைத் தேய்க்கலாம். ஆரஞ்சு ஸ்டிக் கொண்டு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றலாம். பின்னர், கால்களை தண்ணீர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு, ‘கோல்ட் க்ரீம்’ அல்லது ‘மாய்சரைசர்’ போட வேண்டும். இதனால் உங்கள் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

    முகம்:

    இரவு உறங்கச் செல்லும்முன் நாள் முழுதும் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாக இருக்க வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமத்தை ‘வால்நட் ஸ்க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான ‘பேபி ஆயில்’ கொண்டும் துடைக்கலாம். அவ்வாறு துடைக்கும்போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான ‘நைட் க்ரீம்’களை உபயோகப்படுத்த வேண்டும். எளிதான மாய்சரைசரும் உபயோகப்படுத்தலாம். இது, உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த மாய்சரைசரை முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்கு கீழேயும் உபயோகிக்கலாம்.

    தலைமுடி:

    இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெயை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக் கொண்டு சூடு படுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். கால்களைப் பராமரிக்க அமரும் அந்த நேரத்தில் இதையும் செய்து முடித்தால் உங்கள் நேரம் மிச்சமாகும்.

    இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!
    சருமத்தை பராமரிக்க பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் தீர்ந்து போய்விட்டு, வெறும் கோல்டு கிரீம் மட்டும் இருந்தால், அவற்றை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.
    கோடைகாலத்தில் இருந்த நமது சருமத்தின் பளபளப்பு, மென்மைத் தன்மை இந்த குளிர்காலத்தில் இருக்காது. அவ்வாறு இருக்க வேண்டுமெனில் நாம் நமது சருமத்தை நன்கு பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இந்த காலத்தில் பெரும்பாலும் உடல் பெரும் சோர்வுடன் இருக்கும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதற்கு கூட ஒரு வித சோம்பேறித்தனம் இருக்கும். அந்த நேரத்தில் உடலை பராமரிக்க பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் தீர்ந்து போய்விட்டு, வெறும் கோல்டு கிரீம் மட்டும் இருந்தால், அவற்றை பலவிதங்களில் பயன்படுத்தலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!

    * குளிர்காலத்தில் கிரீம்களை காலை வேளையில் பயன்படுத்தினால், அவற்றால் சருமம் நன்கு ஈரப்பசையுடன் இருப்பதோடு, அழுக்குகளை எளிதில் உறிஞ்சிவிடும். இறுதியில் சருமத்தில் பிம்பிள் ஏற்பட்டு, பெரும் வலி உண்டாகும். ஆகவே இவற்றிற்கு பதிலாக கோல்டு கிரீம்களை இரவில் படுக்கும் முன்பு சருமத்தில் ஃபேஸ் மாஸ்க் போன்று தடவி, இரவு முழுவதும் ஊற வைத்தால், மறுநாள் சருமம் நன்கு மென்மையோடு பொலிவாக காணப்படும்.

    * உதடு அடிக்கடி வறட்சியடையும் என்பதற்காக பயன்படுத்தும் லிப் பாம் போன்றும், கோல்டு கிரீம்களை பயன்படுத்தலாம். இதனால் உதட்டில் வறட்சியின் காரணமாக ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் போய்விடும்.

    * அதிக குளிர்ச்சியின் காரணமாக, முழங்கால் மற்றும் முழங்கைகளில் ஒருவித சுருக்கங்கள் போன்று காணப்படும். இத்தகைய பிரச்சனை ஏற்படாமல் தடுக்க, கோல்டு கிரீம்களை தடவி வந்தால், தடுக்கலாம்.

    * அதிக களைப்பின் காரணமாக முகத்திற்கு போட்ட மேக்-கப்பை பொறுமையாக நீக்க முடியவில்லையெனில் அல்லது எங்கேனும் வெளியே செல்லும் போது மேக்-கப் ரிமூவரை எடுத்து செல்லவில்லை என்றால், அப்போது அவசரத்திற்கு கோல்டு கிரீம்களை பயன்படுத்தி நீக்கலாம். அதற்காக இவற்றை பயன்படுத்தி அடிக்கடி நீக்கக் கூடாது. இது வெறும் அவசரத்திற்கு மட்டும் தான்.

    * குளிர்காலத்தில் குதிகால்களில் வெடிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே வெடிப்புகள் வர ஆரம்பிக்கும் போதே கோல்டு கிரீம்களை பயன்படுத்தினால், வெடிப்புகள் வராமல் தடுக்கலாம். ஆனால் அந்த வெடிப்புகள் பெரியதாக இருந்தால், அப்போது அவற்றிற்கு நிச்சயம் வெடிப்பை சரிசெய்ய விற்கும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.

    * நிறைய பெண்கள் முகத்திற்கு கிரீம்கள் மற்றும் மற்ற உறுப்புகளுக்கு லோசன் என்று பயன்படுத்துவார்கள். ஒரு வேளை அவை இல்லாவிட்டால், அப்போது இந்த கோல்டு கிரீம்களை எல்லா இடங்களுக்குமே பயன்படுத்தலாம்.

    * வேக்ஸ் செய்த பின்னர் எப்போதும் அதிக வலி இருக்கும். அதிலும் குளிர்காலத்தில் என்றால் அது பெரும் தொல்லையாக இருக்கும். ஆகவே அந்த மாதிரி வேக்ஸ் செய்த பின்னர் ஏற்படும் வலியை குறைக்க, கோல்டு கிரீம்களை பயன்படுத்தினால், வேக்ஸினால் ஏற்படும் வலியானது தடுக்கப்படும்.
    பேபி வைப்ஸ் போலவே தற்போது பெரும்பாலானோர் ஸ்கின் கேர் வைப்ஸ் பயன்படுத்துகிறார்கள். இதனை முகத்திற்கு அடிக்கடி பயன்படுத்தலாமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பேபி வைப்ஸ் போலவே தற்போது பெரும்பாலானோர் ஸ்கின் கேர் வைப்ஸ் பயன்படுத்துகிறார்கள். காற்று புகாத வண்ணம் டைட்டான பாக்ஸில் ஈரப்பசையுடன் வைப்ஸ் இருக்கும்.

    இதனை நாம் எளிதாக பயன்படுத்தலாம். தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ முடியாத சமயங்களில் இதனைப் பயன்படுத்தலாம். மேக்கப் ரீமூவ் செய்வதற்கு சருமம் வறண்டு காணப்பட்டால் இதனைப் பயன்படுத்தி முகத்தை துடைக்கலாம்.

    இதனைப் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் இதனால் ஏராளமான தீமைகள் ஏற்படுகிறது.

    ஸ்கின் கேர் வைப்ஸில் ஏராளமான கெமிக்கல்ஸ் இருக்கும். எப்போதும் அவை ஈரப்பதத்துடன் இருப்பதற்காக அவற்றில் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இவற்றால் சென்ஸிட்டிவ் ஸ்கின் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமம் வரண்டு போகும். இதனால் பல்வேறு சரும பாதிப்புகள் உண்டாகும்.

    தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளில் தான் அதிகமாக இதனை பயன்படுத்துகிறார்கள் ஆனால் இதனை பயன்படுத்துவதால் முகம் முழுவதுமாக சுத்தம் ஆகாது. சில நுண்ணிய துகள்கள் முகத்தில் ஒட்டியபடியிருக்கும். இப்படியே அடிக்கடி செய்து வந்தால் அது சருமத்திற்கு பாதிப்பையே உண்டாக்கும்.

    வைப்ஸில் இருக்கும் ஆல்கஹால் நம் சருமத்தை வறட்சியாக்கிடும். இது சீக்கிரத்திலேயே சருமத்தில் சுருக்கம் விழுவதற்கு காரணமாக அமைந்திடும். இதனால் பருக்கள், கரும்புள்ளி தோன்றும்.
    பெட்ரோலியம் ஜெல்லியை பெரும்பாலும் மாய்ஸ்சுரைசராக மட்டும் தான் பயன்படுத்துவோம். சரும பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப்பு, சரும பிரச்சனைகளை போக்க என பலவாறு பயன்படுத்தலாம்.
    பொதுவாக பெட்ரோலியம் ஜெல்லியானது அனைவரது வீட்டிலுமே இருக்கும். இத்தகைய பெட்ரோலியம் ஜெல்லியை பெரும்பாலும் மாய்ஸ்சுரைசராக மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த பெட்ரோலியம் ஜெல்லியை பலவாறு பயன்படுத்தலாம். அதிலும் சரும பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப்பு, சரும பிரச்சனைகளை போக்க என பலவாறு பயன்படுத்தலாம். இங்கு அழகைப் பராமரிக்கும் போது பெட்ரோலியம் ஜெல்லியை எதற்கெல்லாம், எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, வீட்டில் பெட்ரோலியம் ஜெல்லி இருந்தால் தவறாமல் பயன்படுத்தி, அதன் நன்மையைப் பெறுங்கள்.

    தினமும் பெட்ரோலியம் ஜெல்லியை இரவில் படுக்கும் போது கண் இமைகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து வாருங்கள். இதனால் கண் இமைகள் நீளமாக வளர்வதோடு, நன்கு அடர்த்தியாகவும் இருக்கும்.

    சிலருக்கு கூந்தல் வறண்டு அசிங்கமாக காணப்படும். அப்போது பெட்ரோலியம் ஜெல்லியை சிறிது எடுத்து கூந்தலின் மேல் தடவினால், கூந்தலானது அடங்கி, வறட்சியில்லாமல் காணப்படும். குறிப்பாக அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால், அது கூந்தலில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பது போல் வெளிப்படுத்தும்.

    வியர்வை நாற்றம் வராமல் இருக்க, அனைவரும் நிச்சயம் டியோடரண்ட் பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்தும் போது, அதில் இருக்கும் நறுமணம் உடலில் நாள் முழுவதும் இருக்க வேண்டுமானால், டியோடரண்ட் அடிக்கும் முன்பு, அதனை உடலில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் நறுமணம் நாள் முழுவதும் இருக்கும்.

    கூந்தலுக்கு ஹேர் டை அடிக்கும் முன், கூந்தல் படும் இடங்களில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக் கொண்டால், ஹேர் டையினால் சருமத்தில் ஏற்படும் கறைகளைத் தடுக்கலாம்.

    கன்னங்களின் மீது பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவினால், அது கன்னங்களை அழகாக ஹை லைட் செய்து காண்பிக்கும். அதேப் போல் இதனை கண்களுக்கு மேக் அப் போடும் முன், கண் இமைகளுக்கு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தி, பின் ஐ ஷேடோவைப் பயன்படுத்தினால், கண்கள் அழகாக காணப்படும்.

    உதடுகள் அடிக்கடி வறட்சி அடைந்தால், அப்போது பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளுக்கு தடவிக் கொண்டால், நீண்ட நேரம் உதடுகள் ஈரப்பசையுடன் இருக்கும்.
    உண்மையான வயதைவிட பத்து வயது குறைவாகத் தெரிய, மேக்கப்பை தவிர்த்து வேறு என்னெவெல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    தன் உண்மையான வயதைவிட இளமையாகத் தெரிய வேண்டும் என்கிற ஆசை எல்லோரின் ஆழ்மனதிலும் இருப்பதுதான். ஆசை மட்டும் இருந்தால் போதுமா? உண்மையான வயதைவிட பத்து வயது குறைவாகத் தெரிய, மேக்கப்பை தவிர்த்து வேறு என்னெவெல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    1. உங்கள் கூந்தல் இளமையாக இருந்தால், நீங்களும் இளமையாகத் தெரிவீர்கள். இதற்கு வாரம் இருமுறையோ அல்லது ஒருமுறையாவது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கூந்தலின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரைத் தடவவும். அரை மணி நேரம் கழித்து ஹேர்வாஷ் செய்யவும். எண்ணெய்ப் பசை குறைவான ஹேர்க்ரீம்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இவற்றையும் பயன்படுத்தலாம். எண்ணெய்க் குளியலும் ஹேர்க்ரீமும் தலைமுடியை லேசான ஈரப்பதத்துடனே வைத்திருக்கும். இந்த ஈரப்பதம், கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் உங்களை இளமையாகக் காண்பிக்கும்.

    2. ஆஃபீஸுக்குப் போகும் அவசத்தில் தலைமுடியைச் சரியாக வாரிக்கொள்ளாமல் அள்ளிமுடிந்து போகாதீர்கள். கலைந்த கூந்தல்தான் உங்கள் வயதை அப்பட்டமாகக் காட்டும் முதல் எதிரி.

    3. மாதம் ஒருமுறை கூந்தலின் நுனியை டிரிம் பண்ணிவிடுங்கள். அடியில் சமமாக இருக்கிற தலைமுடியும் உங்களுக்கு நீட் லுக் கொடுக்கும்.

    4. ஓப்பன் ஹேர் விடுபவர்கள், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது கிளிப்ஸை மாற்றி மாற்றி யூஸ் பண்ணுங்கள்.

    5. தொப்பை இருப்பவர்கள், இன்றைய டிரெண்ட்படி இறுக்கமாக ஆடை அணிந்தால், தொப்பை அசிங்கமாகக் காட்டிவிடும். தொளதொள டிரெஸ்ஸிங்கும் செய்யாதீர்கள். உங்கள் உடல்வாகுக்கு ஏற்றபடி ஆடை அணியுங்கள். முப்பது வயதுகளில் உடம்பு வெயிட் போட்டுவிடும் என்பதால், லாங் டாப் – லெகின் என்று மேட்ச் செய்தால் உடல் மெலிவாகவும் இளமையாகவும் தெரிவீர்கள்.



    6. சில பெண்களுக்கு வயது ஏற ஏற, மேல் கை வெயிட் போட ஆரம்பிக்கும். அது அவர்களுடைய ஜீன். அதை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், அதை மறைக்கும் வகையில் முட்டி வரை ஸ்லீவ் டிரெஸ் செய்தால், உண்மையான வயது வெளியில் தெரியாது.

    7. மாதத்துக்கு ஒருமுறை புருவங்களை திருத்திக்கொள்ளுங்கள். இது முகத்தை பளிச்சென்றுக் காண்பித்து, இளமையைக் கூட்டும்.

    8. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பார்லருக்குப் போய் ஃபேஷியல் செய்துகொள்ளுங்கள். மரு, மாசு, பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் இல்லாமல் ஈவன் டோனாக இருக்கும். உதட்டுக்கு மேலே பூனை முடிகள் இருந்தால், பார்லரில் திரெட்டிங் செய்துகொள்ளுங்கள். மாசு மருவற்ற சருமம் இளமையின் அடையாளம். பார்லருக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே கடலை மாவு, பயித்தம் மாவு, முல்தானி மிட்டி, பால், தேன், தக்காளிச்சாறு எனப் பயன்படுத்தி சருமத்தில் டெட் செல்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சுத்தமான சருமம், லேசான எண்ணெய் பளபளப்புடன் மின்னுவது உங்களை யூத்ஃபுல்லாக காட்டும்.

    9. உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற கலரில் ஆடை அணியுங்கள். இதைக் கண்டறிவது வெகு சுலபம். உங்கள் முகத்தின் ஒரு பக்கத்தில் தங்க கம்மலையும், இன்னொரு பக்கத்தில் ஒயிட் மெட்டல் கம்மலையும் வைத்துப் பாருங்கள். தங்க நிறம் பொருத்தமாக இருந்தால் மெரூன், கிரீன், ரெட், பிங்க், பிரவுன் போன்ற ஷேட்ஸ் பொருத்தமாக இருக்கும். ஒயிட் மெட்டல் பொருத்தமாக இருந்தால், ஸ்கை ஃப்ளூ, பேபி பிங்க், லேவண்டர், பர்பிள், லெமன் யெல்லோ போன்றவை உங்கள் ஸ்கின்னுக்கு ஒகே. ஸ்கின் டோனுக்குப் பொருத்தமான கலர் டிரெஸ்ஸை அணிவதும் இளமையாகக் காட்டும் சீக்ரெட் வழிதான்.

    10. நிறையப் பெண்கள் முகத்துக்கும் ஆடைக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, பாதங்களை உலர்வாகவும் பித்தவெடிப்புடனும் ஈரப்பதமே இல்லாமல் வைத்திருப்பார்கள். கைகளும் கால்களும் நம் உண்மை வயதைக் காட்டிக்கொடுக்கும் எட்டப்பன்கள். எனவே, நகங்களைச் சீராக வெட்டி, லேசாக ஆயில் தடவி ஈரப்பதத்துடன் மெயின்டெய்ன் பண்ணுங்கள். ஸ்லிப்பர், ஹேண்ட்பேக் போன்றவற்றை இரண்டு, மூன்று என வைத்துக்கொண்டு டிரெஸ்ஸுக்கு மேட்சாக அணியுங்கள். வருஷம் முழுக்க ஒன்றையே பயன்படுத்தாதீர்கள்.

    பத்து டிப்ஸையும் பிராக்டிகளாக செய்துபாருங்கள். இதில், பெரிதாகச் செலவு இல்லை. அதேநேரம் இளமையாகவும் தன்னம்பிக்கையாகவும் உணர்வீர்கள்.

    கிரீன் டீ நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அழகை பாதுகாக்கவும் எந்தெந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.
    கிரீன் டீ நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அழகை பாதுகாக்கவும் எந்தெந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

    சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதா கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கதிர்கள் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை போன்றவற்றை ஏற்படுத்தும். கிரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்யலாம்.

    முகப்பருக்கள் வலியைத் தரக்கூடியவை. முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள், முகத்திற்கு கிரீம் உடன் 2 % மட்டும் கிரீன் டீயை கலந்து 6 வாரங்களுக்கு அப்ளை செய்து வந்தால், பருக்கள் குறைவதை பார்க்கலாம்.

    டீயில் ஆன்டி - மைக்ரோபயல் மூலக்கூறுகள் உள்ளன. இவை கொசுக்கள், மற்றும் பூச்சிக்கடிகளால் உண்டான வீக்கங்கள் மற்றும் காயங்களை குணமாக்க உதவுகிறது. டீ பேக்கை வைத்து காயம் உள்ள இடத்தில் ஒத்திடம் கொடுத்தால் காயம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

    கிரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறையும். மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறைக்கப்படுகின்றன.

    இரவு தாமதமாக தூங்குவதாலும், அதிக வேலையினாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகக்கூடும். இதனை போக்க கண்களுக்கு மேல் டீ பேக்குகளை வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண்களில் உள்ள வீக்கங்கள் குறைவதோடு சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.

    கிரீன் டீ ஆனது சருமத்தை இறுக செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. டீ பேக்கை சருமத்திற்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பானாகவும் பயன்படுகிறது.

    பயன்படுத்திய டீ பேக்குகளை செடிகளுக்கு உரமாகவும் போடலாம். இதனால் செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே அவை ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் வளர உதவியாக இருக்கும்.
    பனிக்காலத்தில் முகத்தில் ஆரம்பித்து கால் பாதம் வரை சருமம் வறண்டு காணப்படும். இந்த பிரச்சனையை போக்க தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
    பனிக்காலத்தில் ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். வாயைச் சுற்றி இழுப்பது மாதிரி இருக்கும். முகத்தில் ஆரம்பித்து கால் பாதம் வரை சருமம் வறண்டு காணப்படும். சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கம் தெரியும். தலை ஸ்காப்பும் வறண்டு பொடுகு வர ஆரம்பித்துவிடும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சரிசெய்து கொள்ள முடியும்.

    பனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், நம்முடைய சருமத்தின் எண்ணெய்ப்பசையை  உலரச் செய்துவிடும். அதனால்தான், சருமம்  வறண்டு சுருங்கி விடுகிறது. தினமும் குளிப்பதற்கு முன்பு, முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெயைத் தடவி சூடு பறக்கத் தேயுங்கள். 10 நிமிடம் ஊறவிட்டு, பிறகு குளியுங்கள்.  இப்படிச் செய்தால் குளித்தப் பிறகு சருமத்தில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படாது.

    தினமும் இதைச் செய்யமுடியாதவர்கள், வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய்யைத்  தலை முதல் கால் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிட்டு, பச்சைப்பயிறு மாவால் தேய்த்துக் குளியுங்கள். கடலைப்பருப்பு மாவு சருமத்தின் எண்ணெய்ப்பசையை உறிஞ்சிவிடும் என்பதால், அதைப் பயன்படுத்தாதீர்கள். அதேபோல, எண்ணெய் தடவாமலும், பாசிப்பருப்பு மாவை  சருமத்தில் தேய்த்துக் குளிக்காதீர்கள்.  சருமம் இன்னும் உலர்ந்துவிடும்.

    குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், உடம்பில் இருக்கும் ஈரத்தை முழுமையாகத் துடைக்காமல், தேங்காய் எண்ணெய்யை இரண்டு விரல்களால் தொட்டு எடுத்து, உடல் முழுக்க தடவுங்கள்.  'எண்ணெய் வேண்டாம்' என்பவர்கள், பாடிலோஷன் பயன்படுத்தலாம்.

    நீங்கள் என்னென்ன பழங்களைச் சாப்பிடுகிறீர்களோ, அவற்றின் சில துண்டுகளை அரைத்து, பால் ஏடுடன் கலந்து, முகம், கை கால் என வெளியே தெரியக்கூடிய பகுதிகளில் அடிக்கடி தடவிவந்தால், பனிக்காலத்திலும் உங்கள் சருமம் வறண்டுபோகாமல் இருக்கும். 
    சருமம், கூந்தல் பிரச்சனைகளுக்கு தயிர் நல்ல தீர்வை தருகிறது. இன்று தயிரை எந்த முறையில் பயன்படுத்தி சருமம், கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று பார்க்கலாம்.
    உங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது  குறையும்.

    எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாறும். தயிரை முகம் மற்றும் உடம்பில்  தடவி வந்தால் வெயினால் ஏற்பட்ட சரும கருப்பு நீங்கும். மேலும் சருமம் மென்மையாகும்.

    டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும் முகப்பருக்களை சரி செய்ய தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் முகப்பருக்கள்  மறையும்.

    தயிருடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியில் தடவி காய்ந்ததும் கழுவினால் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதை வாரம் இருமுறை  செய்தாலே போதுமானது.

    1 ஸ்பூன் தேனை 2 ஸ்பூன் தயிருடன் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். தொடர்ந்து இதனை செய்யும்போது உங்கள் வறண்ட, டல்லாகியிருக்கிற சருமத்தை, பளிச்சின்னு மாற வைக்கும் என்பது உறுதி 
    ‘டாட்டூ’ மீது மோகம் கொண்டிருக்கும் பெண்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் முழுமையாக தெரிந்துகொண்ட பின்பே, அதனை உடலில் தீட்டிக்கொள்ளவேண்டும்.
    ‘டாட்டூ’ மீது மோகம் கொண்டிருக்கும் பெண்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் முழுமையாக தெரிந்துகொண்ட பின்பே, அதனை உடலில் தீட்டிக்கொள்ளவேண்டும். டாட்டூ பதிக்கும்போது வலி ஏற்படும். சுகாதாரமற்ற முறையில் அதை மேற்கொண்டால் தொற்றுவியாதிகள் ஏற்படக்கூடும்.

    விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாரா?

    இன்றைய டீன்ஏஜ் பெண்களுக்கு டாட்டூஸ் ரொம்ப பிடித்தமானதாக இருக்கிறது. ஆனால் அதை பிடிக்காதவர்களும் நிறைய இருக்கிறார்கள். இளம் வயதினர் டாட்டூஸ் பதித்துக்கொள்வதை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ‘பணம் செலவு செய்து இப்படி எல்லாம் படம் வரைந்து உன் உடலை கெடுத்துக்கொள்ள வேண்டுமா?’ என்று சிலர் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பலாம். அதை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ‘எனக்கு பிடித்ததால் இதை செய்திருக்கிறேன். நீங்கள் இதை பற்றி கவலைப்படவேண்டாம்’ என்றோ, ‘என் உடலை பற்றிய விஷயத்தில் நான் முடிவெடுக்க அனுமதியுங்கள்’ என்றோ, பதில் சொல்ல நீங்கள் தயாராக இருக்கவேண்டும் அல்லது இப்படிப்பட்ட விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாதது போல் நடிக்கவாவது தெரிந்திருக்கவேண்டும்.

    டாட்டூ உங்களுக்கு மிக அவசியமா?

    இந்த கேள்வியை உங்களுக்குள்ளே நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். பொழுதுபோக்குக்காக அதை நீங்கள் பதித்துக்கொள்ளப்போகிறீர்களா? அல்லது அதற்கு வேறு விசேஷ காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் டாட்டூ பதித்துக்கொள்கிறார்கள். மனதில் இருக்கும் பிரியமானவரின் பெயர், பிடித்தமான வாழ்வியல் தத்துவம், நம்பிக்கைக்குரிய சின்னங்கள்.. போன்ற பலவற்றை பெண்கள் விரும்பி பொறிக்கிறார்கள். அதை பொறிப்பதற்கு முன்னால், ‘காலங்கடந்தும் அது நமக்கு தேவையா?’ என்பதை கவனத்தில் கொண்டு, ஆழ்ந்து யோசித்து முடிவெடுங்கள்.

    தற்காலிக டாட்டூ போதுமானதா?


    சிலர் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒன்றை டாட்டூவாக பதிக்க விரும்புவார்கள். ஆனால் ஆழ்ந்து யோசித்து அது தமக்கு தேவையில்லை என்ற முடிவை அவர்கள் எடுக்கலாம். அல்லது அதை பதித்து, டாட்டூ தரும் சுகத்தை அனுபவிக்கவும் அவர்கள் ஆசைப்படலாம். அப் படிப்பட்ட இருவேறு சிந்தனை கொண்டவர்கள் நிரந்தர டாட்டூவை உடலில் பதித்துக்கொள்ளவேண்டாம். முதலில் தற்காலிக முறையை பரீட்சித்துப்பாருங்கள். ஹென்னா டிசைனிங், டெம்பரரி டாட்டூயிங் போன்றவற்றை தேர்ந்தெடுத்து முதலில் பயன்படுத்தவேண்டும். கால இடைவெளிவிட்டு பின்பு அடுத்தகட்டமாக நிரந்தரம் பற்றி அவர்கள் சிந்திக்கவேண்டும்.

    டாட்டூ மங்கும் என்பது தெரியுமா?

    இவை பொறிக்கும்போது தோன்றுவதுபோல் எப்போதும் ஜொலிக்காது. வருடங்கள் கடக்கும்போது நிறம் மங்கலாம், அதன் ஒரு பகுதி சிதைந்து போகலாம். மிக நுட்பமாக பொறிக்கப்பட்டவை அழிந்தும்போகலாம். அப்படிப்பட்ட தருணங்களில் டாட்டூ கலைஞர் மூலம் ‘ரீடச்’ செய்துகொள்ள வேண்டியதிருக்கும். கறுப்பு நிறம்தான் அதிக காலம் அழியாமல் இருக்கும்.

    அவசர முடிவெடுப்பது சரியா?


    இல்லை. இது பற்றி நிதானமாக முடிவெடுக்கவேண்டும். தோழிகளுக்காக அல்லது இன்னொருவருக்காக அவசரமாக டாட்டூ பதித்துக்கொண்டேன் என்பது சரியல்ல. எதற்காக டாட்டூ பொறிக்கப் போகிறீர்கள்? எந்த கலைஞர் மூலம் அதை பொறிக்கப்போகிறீர்கள்? அதற்காக எடுக்கப்பட்ட முன்னேற் பாடுகள் என்ன? உடலில் எந்த இடத்தில் பொறிக்கப்போகிறீர்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடிவிட்டு, முடிவெடுங்கள்.



    எந்த ‘டிசைன்’ தேவை?

    பெண்கள் பொதுவாக ஒரு உடை தேர்ந்தெடுக்கவே அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் தங்கள் உடலில் டாட்டூ பதிப்பதில் அதிக கவனம் கொள்வார்கள். எந்த டிசைனை பொறிக்கப் போகிறீர்கள் என்பதில் தெளிவான முடிவெடுங்கள். அது பற்றி உங்கள் டாட்டூ கலைஞரிடம் பேசுங்கள். அதற்கு எவ்வளவு நேரமாகும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நிரந்தர டாட்டூ பதிப்பவராக இருந்தால், காலம் முழுக்க அது உங்கள் உடலோடு ஒட்டியிருக்கும். அதனால் கவனமாக டிசைனை தேர்ந்தெடுங்கள்.

    சில பெண்கள் தங்கள் தோழிகள் டாட்டூ பொறிப்பதற்கு செல்லும்போது உடன் செல்வார்கள். அங்கு சென்றதும் தங்களுக்கும் டாட்டூ பொறிக்கவேண்டும் என்ற ஆசை வந்துவிடும். சிலர், தானும் இந்த காலத்து பெண்தான் என்பதை காட்டிக்கொள்ள டாட்டூ பொறிப்பார்கள். அப்படி அவசரப்பட்டு செய்துகொண்டால், அடுத்த சில மாதங் களிலே ‘ஏன் இதை பதித்துக்கொண்டோம்’ என்று நினைத்து, அதை எப்படி அழிப்பது என்று ஆலோசனை கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    சரி.. இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் தீர ஆராய்ந்து, டாட்டூ பொறித்துக்கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டால், அடுத்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவைகளை தொடர்ந்து படியுங்கள்:

    உங்களுக்குத் தெரிந்த, ஏற்கனவே அதில் அனுபவமுள்ள டாட்டூ மையத்தை தேர்ந்தெடுங்கள். தோழிகள் யாருக்காவது அறிமுகமுள்ள டாட்டூ ஸ்டூடியோவாக இருந்தால் நல்லது.

    அந்த டாட்டூ கலைஞர் எங்கே படித்தார், எத்தனை வருடங்களாக இந்த துறையில் இருக்கிறார் என்பதையும் கண்டறியுங்கள். முறையான பயிற்சியும், அனுபவமும் இல்லாதவர் ஆழமாக ஊசியை பயன்படுத்தி குத்தும்போது தடுமாறிவிடுவார். அது சருமத்தை கடுமையாக பாதிக்கும்.

    அந்த ஸ்டூடியோவில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் எல்லாம் சுகாதாரமாக இருப்பதையும், அங்கே சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் உறுதிசெய்யுங்கள். ஊசி, இங்க், இங்க் கேப், கிளவுஸ், கன் போன்றவை அதில் பயன்படுத்தப்படுகின்றன.

    டாட்டூ செய்வதற்கு முன்னால் சருமமும், உபகரணங்களும் அணுத்தொற்று எதுவும் இல்லாமல் இருக்கவேண்டும்.
    ×