search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skin Problem"

    • பெண்கள் அதிகமாகக் கவலைப்படுவது முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நினைத்துதான்.
    • முகத்தில் வளரும் முடிகளை நீக்குவதற்கு இயற்கையான வழிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

    முகப்பரு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அடுத்து பெண்கள் அதிகமாகக் கவலைப்படுவது முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நினைத்துதான். இதற்கான காரணம் மற்றும் முடிகளை நீக்குவதற்கு இயற்கையான வழிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

    ஹார்மோன்கள்: அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஹார்மோன்கள் சீரற்று சுரக்கும். இதனால் 'ஆன்ட்ரோஜன்' எனும் ஆண்களுக்கான ஹார்மோன் சுரப்பு பெண்கள் உடலில் அதிகரிக்கும். இது முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சி, குரல் கரகரப்பாக மாறுதல், எடை அதிகரித்தல், கருப்பை நீர்கட்டிகள், தைராய்டு பாதிப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

    மரபியல்: ஆரோக்கியமான பெண்களுக்கு முகத்தில் முடிகள் அதிகமாக வளர்வதற்கு மரபு வழியும் காரணமாக இருக்கலாம். பாட்டி, அம்மா அல்லது பரம்பரையில் உள்ள பிற பெண்களுக்கு முகத்தில் முடி அதிகமாக இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் இவ்வாறு ஏற்பட வாய்ப்பு உண்டு.

    தவிர்க்க வேண்டியவை:

    ஷேவிங்: முகத்தில் வளரும் முடிகளை நீக்குவதற்காக பிளக்கிங், வேக்ஸிங், ஷேவிங் போன்ற பல முறைகளை பெண்கள் கையாள்கின்றனர். இவை உடனடி தீர்வாக இருந்தாலும், இவற்றால் சருமம் சேதமடைவது, கடினமாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆகையால் முடிந்தவரை இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

    செயற்கை கிரீம்: முடிகளை நீக்க கடைகளில் கிடைக்கும் செயற்கை கிரீம்களைப் பயன்படுத்துவதால், அதிலுள்ள ரசாயனம் முகத்தில் அரிப்பு, தோல் தடிப்பு, பருக்கள் அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை உருவாக்கும்.

    மேற்கொள்ளவேண்டிய இயற்கை வழிகள்: சிறிதளவு சர்க்கரையுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் தண்ணீர் கலந்து, பசை போல தயாரிக்கவும். இந்தக் கலவையை, முகத்தில் முடி வளர்ச்சி இருக்கும் இடங்களில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால், முகத்தில் வளர்ந்திருக்கும் தேவையற்ற முடிகள் எளிதில் நீங்கும்.

    மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், சிறிதளவு உப்பு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பால் ஆகியவற்றை நன்றாகக் கலந்து, முகத்தில் தடவ வேண்டும். இதை முடி வளர்ச்சிக்கு எதிர்புறமாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பதுடன், முடிகளும் உதிர்ந்து விடும்.

    ஒரு கிண்ணத்தில் கடலைமாவு, மஞ்சள்தூள், சிறிதளவு கடுகு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பசை போல தயாரிக்கவும். இதை முகத்தில் முடி வளர்ச்சி உள்ள இடங்களில் தடவி, மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால், முடி உதிர்வதுடன், வளர்ச்சியும் கட்டுக்குள் வரும்.

    • தினமும் குளிப்பது மிக மிக முக்கியம்.
    • ஹார்மோன் மாறுதல்களாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம்.

    உணவு கருவுற்ற பெண் மூன்று 'G' நிறைய சாப்பிட வேண்டும்.

    Green leaves - கீரை வகைகள்

    Green vegetables - பச்சைக் காய்கறிகள்

    Grains - முழு தானியங்கள்

    முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். அன்னாசி, பப்பாளி போன்றவை உடலுக்கு நல்லது.

    கருவுற்ற தாயின் தோல் வறண்டு அல்லது அதிக எண்ணெய்ப் பசையாக மாறலாம். இதற்குத் தேவையான மாய்ஸ்சரைஸர்கள் அல்லது லோஷன் பயன்படுத்தலாம். சாதாரண தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. நிறைய கெமிக்கல் அடங்கிய மேல் பூச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. அவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டி வந்தால் வீணான மன உளைச்சல்தானே! சிலருக்கு தோலில் ஏற்படும் மாற்றங்கள் பிரசவம் ஆன பிறகு தானாக சரியாகிவிடும். ஹார்மோன் மாறுதல்களாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம்.

    தினமும் குளிப்பது மிக மிக முக்கியம். தண்ணீர் கிடைத்தால் தினம் இரண்டு முறை! தன் சுத்தம் பேணுதல், தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

    புத்துணர்ச்சியையும் தரும்.

    அந்தக் காலத்தில் விசாலமான வீடு, முற்றம், கொல்லை என்று நல்ல காற்றோட்ட வசதி இருந்தது. வெந்நீர் போட வீட்டுக்கு வெளியில் அடுப்பு இருக்கும். அதிலிருந்து வரும் புகை வீட்டுக்குள் அதிகம் வராது. யாருக்கும் பாதிப்பு இருக்காது. இந்தச் சின்ன வீட்டில் புகைமூட்டம் இருந்தால் எல்லோருக்கும் சுவாசக் கோளாறு வரும். அதிலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிக பாதிப்பு இருக்கும்.

    • மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும்.
    • எக்காரணம்கொண்டும் எலுமிச்சைப்பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது.

    எந்த வகையினால் முகப்பரு ஏற்பட்டிருந்தாலும் எளிமையான முறையில் அதை எப்படி நீக்குவது என்பதுபற்றி இங்கே பார்க்கலாம்.

    - திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும். திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவிவந்தாலும் பருக்கள் நீங்கும்.

    - குங்குமாதி லேபத்தைப் பருக்களின்மீது தடவி வர, பருக்கள் மறைவதோடு தழும்புகளும் விரைவில் நீங்கும்.

    - பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும்.

    - 50 மில்லி நல்லெண்ணெயுடன் மிளகை ஊற வைக்க வேண்டும். 20 நாள்கள் கழித்துப் பயன்படுத்த வேண்டும். இதை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும்.

    - அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் இது நீங்கும்.

    - வெங்காரத்தைப் பொரித்தால் (போரக்ஸ்) அது மாவாகக் கரையும். அதைத் தண்ணீருடன் கலந்து பரு பழுத்திருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவில் பழுத்து உடையும்.

    - வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.

    - மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும். வெட்பாலை தைலத்தைப் பயன்படுத்தி வர மலச்சிக்கல் நீங்குவதோடு, முகப்பருவும் மறையும்.

    - பொடுகால் ஏற்படும் முகப்பருவுக்குப் பொடுதலை இலைச்சாற்றைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்குவதோடு, முகப்பருக்கள் சீக்கிரம் மறையும்.

    - எலுமிச்சைப்பழச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாள்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைப்பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.

    - வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும்.

    • சிலர் எண்ணெய் வழிந்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள்.
    • எண்ணெய் சருமத்திற்கு தயிரும் சிறந்த தீர்வாக அமையும்.

    சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகள் சீரற்ற நிலையில் இருக்கும்போது எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால் முகத்தில் எப்போதும் எண்ணெய் தன்மை பிரதிபலித்துக்கொண்டிருக்கும். எண்ணெய் வழிந்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள்.

    அத்தகைய எண்ணெய் தன்மையை போக்குவதற்கு கடலை மாவு மற்றும் பச்சை பயறு மாவுவை பயன்படுத்தலாம். இவை இரண்டும் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது. கடலை மாவு, பச்சை பயறு மாவுடன் பன்னீர் கலந்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் எண்ணெய் சருமம் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிடும்.

    பன்னீர், சந்தனத்தூள் மற்றும் முல்தானிமெட்டி ஆகியவற்றை சம அளவு பசை போல் குழைத்து முகத்தில் தடவவும். பன்னீர் முகத்தை சுத்தமாக்கும். சந்தனம் சருமத்தை குளிர்ச்சி அடைய செய்யும். முல்தானி மெட்டி முகத்தில் உள்ள அழுக்கை போக்குவதோடு அதிகப்படியான எண்ணெய் தன்மையை அகற்றிவிடும். வாரம் இருமுறை இந்த பேஸ் பேக்கை பயன் படுத்தி வரலாம்.

    எண்ணெய் சருமத்திற்கு தயிரும் சிறந்த தீர்வாக அமையும். தயிரை முகத்தில் தடவிவிட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். எண்ணெய்ப்பசை தன்மை நீங்குவதுடன் சோர்வையும் போக்கி புத்துணர்ச்சியை தரும்.

    • தோல் அழகாகவும், மாசு மருவின்றி சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
    • சில தோல் மற்றும் முடி பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.

    உடலின் தோல் பகுதி, உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் கவசமாக இருப்பதுடன், உடலின் அழகை காட்டும் ஆடையாகவும் உள்ளது. சுத்தமாக சலவை செய்யப்பட்ட ஆடை போல் தோல் அழகாகவும், மாசு மருவின்றி சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் தோலில் பரு, தழும்பு, புழுவெட்டு, பொடுகு என்று பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இன்றைக்கு தோலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நவீன சிகிச்சைகள் இருப்பதால், அவற்றை எளிதில் குணப்படுத்திக் கொள்ள முடியும். பரவலாக காணப்படும் சில தோல் மற்றும் முடி பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.

    முகப்பரு

    பள்ளி, கல்லூரி மாணவிகள் பலரின் முக்கிய பிரச்சினையாக இருப்பது முகப்பரு. இந்த பருக்கள் முகத்தின் அழகை கெடுத்து அவர்களுக்கு கவலையை உருவாக்கி விடுகிறது. கடந்த காலங்களில் முகப்பரு பாதிப்பை போக்க சரியான மருந்து, மாத்திரைகள் இல்லை. சரியில்லாத மருத்துவ சிகிச்சையால் தழும்புகளும் ஏற்பட்டு விடும். கண்ட ஆலோசனைகளை எல்லாம் கேட்டு முகத்தில் கண்ட களிம்புகளையும் பூசி கடைசியில் முகத்தில் குழி, தழும்புகளை உண்டாக்கி முக அழகை நிரந்தரமாக கெடுத்துக் கொண்டு மன உளைச்சலால் அவதிப்படுவோர் நிறையவே உண்டு. இப்போது, முகப்பருக்களை நிரந்தரமாக போக்கும் ஐசோட்ரெடினாயின் மாத்திரை, மருந்துகள் வந்து விட்டன. இவை முகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் முகப்பருக்களை போக்கும். இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். 20 வார தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டால் முகப்பருக்களை முற்றிலும் கட்டுப்படுத்த இயலும்.

    பருத்தழும்பு

    பருக்கள் ஏற்பட்டு சரியான சிகிச்சை பெறாத போது பருத்தழும்புகள் முகத்தில் தங்கி விடும். பருத்தழும்புகளால் சீர் கெட்டு போன முகத்தை லேசர் மற்றும் இதர நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பொலிவுள்ள அழகான முகமாக மாற்ற முடியும்.

    முடி கொட்டுதல்

    அன்றாடம் கொத்து கொத்தாக முடி கொட்டுதல் பெண்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். இன்றைக்கு நீண்ட கூந்தல் இருப்பது அரிது. தற்கால உணவு, மன அழுத்தம், மருத்துவரின் ஆலோசனையின்றி கண்ட எண்ணெய்கள், குளியல் பூச்சுகளை பயன்படுத்துவது ஒரு காரணம். அம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் கழித்து மிக அதிக அளவில் முடி கொட்டும். பொதுவாக, முடி தொடர்பாக எந்த பிரச்சினை இருந்தாலும் அதற்கான அனைத்து தீர்வுகளையும் ஒரு தோல் மருத்துவரால் மட்டுமே தீர்வு காண முடியும். தற்போது, அனைத்து வகையான முடி கொட்டுதல் பிரச்சினைக்கும் உலகத்தரம் வாய்ந்த யூ.எஸ்.எப்.டி.ஏ. அங்கீகரித்த மருந்துகள் வந்துள்ளன. தற்போது புதியதாக அறிமுகமாகியுள்ள மருந்துகளால் 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் வழுக்கையும் சரி செய்ய முடியும். இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். முடி சிகிச்சைக்கு என தனியாகப் படிப்போ, டாக்டரோ கிடையாது.

    வெண்படை நோய்

    புதியதாக அறிமுகமாகியுள்ள மருந்துகளால் நாள்பட்ட வெண்படை நோய்க்கும் விரைவாகத் தீர்பு கான முடியும்.

    இளநரை

    முடியின் வேரில் இருந்து முடி வளர தொடங்கும்போது, அதில் உள்ள நிற அணுக்களில் இருந்து மெலானின் என்ற நிறத்தை உருவாக்கும் பொருள் கலக்கப்படும். இதனால், முடி கருமையடைகிறது. இந்த மெலானின் சுரப்பி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் போது இளநரை ஏற்படுகிறது. இளநரை ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு. எந்த காரணத்தால் இளநரை தோன்றுகிறது என்பதை சரியாக கண்டறிந்து தகுந்த மாத்திரை, மருந்துகளை எடுத்துக்கொள்வதால் இளநரையை நீக்கி முடியை கருமையடைய செய்யலாம்.

    பரம்பரை வழுக்கை

    பரம்பரை வழுக்கைக்கு தீர்வு இல்லை என்பது பழைய நம்பிக்கை. இப்போது பக்க விளைவுகள் இல்லாத மிகச்சிறந்த மருந்து மாத்திரைகள் அமெரிக்க மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தற்போது இந்தியாவிலும் சுலபமாக கிடைக்கின்றன. இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பரம்பரை வழுக்கையை, பாதிப்பு ஏற்படும் முன் தடுத்து கொள்ளலாம். மேலும் இழந்த முடியையும் திரும்ப வளர வைக்கலாம். தற்போது இந்த மருந்துகளின் வருகையால் தலையில் வழுக்கையை மறைக்கும் முடி மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பொடுகு தொல்லை

    பொடுகு என்பது, பல வகை தோல் வியாதிகளால் ஏற்படும் செதில் உதிர்தலை குறிக்கும். சாதாரண பொடுகு, சொரியாசிஸ், தலை தோல் அலர்ஜி, தலை தோல் வறட்சி போன்ற காரணங்களால் பொடுகு உருவாகலாம். ஒருவருக்கு பொடுகு தொல்லை இருந்தால் அதற்கான காரணத்தை துல்லியமாக கண்டறிந்து அதற்கு தகுந்த மருந்துகளை தர வேண்டும். அதை விடுத்து, கண்ட எண்ணெய்களை தேய்ப்பது, கை வைத்தியம் பார்ப்பது சரிவராது. தலையில் பொடுகு பிரச்சினையை அசட்டையாக விட்டு விட்டால் முடியின் ஆரோக்கியம் கெட்டு முடி கொட்டுவதையும் நிறுத்த முடியாது.

    புழு வெட்டு

    தலையில் ஆங்காங்கே செதுக்கியது போல் சொட்டை விழுவது புழுவெட்டு. தலையில் திடீரென்று வட்ட வடிவில் முடி உதிர்ந்து முடி இல்லாமல் போகும் பாதிப்பை புழுவெட்டு என்கிறோம். இது தலையில் மட்டும் அல்லாமல் புருவம், தாடி, மீசை போன்ற இடங்களிலும் வரலாம். சிலருக்கு சில இடங்களிலும், சிலருக்கு ஒட்டுமொத்தமாக தலைப்பகுதி முழுவதும் கூட பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு புழுவோ, பூச்சியோ காரணம் இல்லை. நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களின் தவறான செயல்பாடே காரணம். வெங்காயம் தேய்ப்பது, கண்ட எண்ணெய்களை தேய்ப்பதால் புழுவெட்டு நீங்காது. தோல் மருத்துவர் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். இதற்கு சமீபத்தில் மிகச் சிறந்த புது மருந்துகள் வந்துள்ளன.

    சொரியாசிஸ்

    சொரியாசிஸ் நோய்க்கும் தற்போது மிக சிறப்பான மருந்துகள் வந்துவிட்டன. இவற்றால் மிகக்குறுகிய காலத்தில் சிறந்த பலன் கிடைக்கும்.

    படர்தாமரை

    நவீன மருந்து மாத்திரைகள் மூலம் நாள்பட்ட படர்தாமரையும் நிரந்தரமாக சரிசெய்ய முடியும்.

    ஆண் முகத்தில் முடி இல்லாமை

    ஆண்களுக்கு முகத்தில் நல்ல ரோம வளர்ச்சி இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. தற்போது, தாடி வளர்த்து விதவிதமாக ட்ரிம் செய்வது பேஷனாகவும் இருக்கிறது. பொதுவாக, ஆண்கள் முகத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு பரம்பரைத் தன்மை மற்றும் ஹார்மோன் குறைபாடு காரணமாகும். இதற்கு முறைப்படி காரணத்தை கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் முகத்தில் நன்கு முடி வளரச் செய்யலாம்.

    பெண்களுக்கு தேவையற்ற முடி வளர்ச்சி

    சில பெண்களுக்கு முகத் தாடை, உதட்டின் மேல் பகுதி போன்ற இடங்களில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கும். இந்த முடிகளை வேக்சிங் அல்லது திரெடிங் முறையில் அகற்றினால் அது இன்னும் அதிகமாக வளரும். தற்போது, இந்த தேவையற்ற முடிகளை அகற்ற உலகத்தரம் வாய்ந்த டையோடு லேசர், லாங் பல்ஸ் என்டியாக் லேசர் மற்றும் ட்ரிபிள் வேவ்லென்த் லேசர் கருவிகள் இங்கு இருக்கின்றன. இவற்றின் மூலம் மிக எளிதாக நிரந்தரமாக முகத்தில் உள்ள தேவையற்ற முடி வளர்ச்சியை நீக்க முடியும். இந்த லேசர் கருவிகளை முறையாக தெரிந்த தோல் நோய் மருத்துவர் மட்டுமே பயன்படுத்த முடியும். திருநங்கைகளுக்கு இந்த சிகிச்சை மிகப்பெரிய வரப்பிரசாதம். எங்கள் மருத்துவமனையில் இந்த கருவிகள் மூலம் நிறைய பேர் பயன்பெற்று மகிழ்வுடன் செல்கின்றனர்.

    பச்சை அகற்றுதல்

    சிறுவயதில் பேஷன் என்ற பெயரில் உடம்பில் பச்சை குத்துவது அதிகரித்து வருகிறது. உடம்பில் பச்சை குத்திக் கொண்டவர்கள் ராணுவம், காவல் துறை உள்ளிட்ட அரசு சீருடை பணிகளில் சேர முடியாது. தொடர்பில்லாத பெயர்களை பச்சை குத்தி வைத்திருக்கும் சிலருக்கு இது திருமண வாழ்க்கையில் பிளவைக் கூட ஏற்படுத்தி விடுகிறது. தற்போது, எங்கள் மருத்துவமனையில் உள்ள பைகோ செகண்ட் க்யூ ஸ்விட்ச்டு லேசர் மூலம் இந்த பச்சை அடையாளங்களை துல்லியமாக தோலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நீக்கி விடுகிறோம்.

    இதர பாதிப்புகள்

    மேற்சொன்ன தோல் பிரச்சினைகள் மட்டுமின்றி தோல் அலர்ஜி, வெண்படை, குஷ்டம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் உள்ளன. எந்த தோல் வியாதியையும் எளிதாக இவற்றால் சரி செய்ய முடியும். எனவே, உடலின் அழகை வெளிக்காட்டும் தோல் பகுதியை பொலிவாக வைத்து தன்னம்பிக்கையுடன் வாழ வழி செய்வோம்.

    குறிப்பு: பெண்களுக்கு பெண்களாலேயே பரிசோதனை செய்யப்படும்.

    தொடர்புக்கு, ஆதித்தன் தோல் முடி லேசர் மருத்துவமனை, ஆண்டாள்புரம், மதுரை.

    செல்போன்-81110 00000,

    73731 41111, 73731 42222

    • ஆட்டுப்பாலை நேரடியாக சருமத்தில் பூசும்போது இறந்த செல்கள் நீங்கும்.
    • சருமத்தின் இளமையை பாதுகாக்கும்.

    சருமத்தின் அழகையும், மிருதுவான தன்மையையும், பொலிவையும் பராமரிப்பதற்கு உதவும் இயற்கையான பொருள் ஆட்டுப்பால். சருமத்தின் ஆரோக்கியத்தை காக்கும் ஆட்டுப்பாலை முகத்தில் பூசி வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

    சத்துக்கள்: ஆட்டுப்பாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம், ஒமேகா-6, வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

    சருமத்தை மிருதுவாக்கும்: சென்சிடிவ் மற்றும் வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் எளிதாக பொலிவை இழக்கும். இவர்களுக்கு ஆட்டுப்பால் சிறந்த தீர்வாக அமையும். இது தோல் அழற்சி, அரிப்பு ஆகியவற்றை குணப்படுத்தும். இதில் இருக்கும், லாக்டிக் அமிலம் சருமத்துக்குள் எளிதாக ஊடுருவி தோலை மிருதுவாகவும், மென்மையாகவும் மாற்றும். வறண்ட மற்றும் சேதமடைந்த சருமத்தை சீராக்கும். சருமத்தின் அடுக்குகள் கொழுப்பு மற்றும் செலினியம் மூலக்கூறுகளைக் கொண்டவை. இவற்றில் குறைபாடு ஏற்பட்டால், சருமம் விரைவில் வறட்சி அடையும். ஆட்டுப்பாலில் இருக்கும் கொழுப்பு மற்றும் செலினியம் சத்துக்கள் இந்தப் பிரச்சினையை தீர்க்கின்றன.

    ஆழமாகப் பரவும்: சருமத்துக்கு அவசியமான கொழுப்பு அமிலங்கள் ஆட்டுப் பாலில் உள்ளன. இதனை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும், சருமத்தில் ஆழமாக ஊடுருவி செயல்படும். ஆட்டுப் பாலில் உள்ள புரோட்டீன், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது முகப்பருவை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தருகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் ஆன்டிஆக்சிடன்டுகள் சருமத்திற்கு ஊட்டம் அளித்து சருமத்தின் இளமையை பாதுகாக்கின்றன.

    ஆட்டுப் பாலில் இருக்கும் ஆல்பா ஹைடிராக்சில் அமில மூலக்கூறுகள், தோலில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்கி அமில-கார சமநிலையை சீராக்குகிறது. அதிகமான எண்ணெய்ச் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. ஆட்டுப்பாலை நேரடியாக சருமத்தில் பூசும்போது இறந்த செல்கள் நீங்கும். தளர்ந்த சருமம் இறுக்கமாகும். ஆட்டுப்பாலை பயன்படுத்துவதற்கு முன்பு, சிறிது சருமத்தில் தடவி எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

    • காஃபி தூள் நம்ம முகத்தை அழகாக காட்டவும் பயன்படுகிறது.
    • காஃபி தூளை சரும அழகிற்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

    காஃபி இல்லாமல் அன்றைய நாளே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நாம் அனைவரும் காஃபியை குடித்த பின் தான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறோம். சிலருக்கு காஃபி குடிக்கவில்லை என்றால் தலை வலியே வந்துவிடும்.

    எனவே காஃபி தூள் நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருளாகும். இந்த காஃபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது.

    என்னடா நம்ம காஃபி குடிக்க மட்டும் தான் பயன்படுத்துவோம் இது என்ன புதுசா இருக்குனு நீங்க யோசிக்கலாம். ஆமாங்க காஃபி தூள் நம்ம முகத்த அழகாக காட்டவும் பயன்படுகிறது.

    காஃபி தூள் ஒரு கப், ஏலக்காய் பொடி 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும்.

    ஒரு கப் காஃபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும்.

    கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காஃபி பொடி ஒரு கப் கலந்து முகத்தில் 10 - 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    4 ஸ்பூன் காஃபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

    4 ஸ்பூன் காஃபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை, கால், கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 - 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.

    • வறண்ட உதடுகள் எப்சம் உப்பால் சரியாகும்.
    • எப்சம் உப்பு முகப்பருவை போக்க சிறந்த மருந்து.

    எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் சல்பேட் உள்ளடங்கி இருக்கும் இயற்கையான தாது உப்பாகும். இது சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பில் இருந்து வித்தியாசமானது. சற்று கசப்புத்தன்மை கொண்டது. பல வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது.

    தசை வலி, மன அழுத்தம், அஜீரணம், மன அழுத்தம், வீக்கம் போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதாக நம்பப்படுகிறது. எப்சம் உப்பை நீரில் கரைக்கும்போது இதிலிருக்கும் சல்பேட், மெக்னீசியம் போன்றவை வெளிப்படும். இந்த தாதுக்கள் பல்வேறு உடல் அமைப்புகளின் செயல்பாட்டிற்கு அவசியமானவை. எப்சம் உப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

    முகப்பரு, கரும்புள்ளிகள், சரும பொலிவின்மை உள்பட அனைத்துவிதமான சரும பிரச்சினைகளையும் போக்கும் தன்மை எப்சம் உப்புக்கு உண்டு. எப்சம் உப்பைப் பயன்படுத்துவது முகப்பரு மற்றும் தழும்புகள் ஏற்படுவதை தடுக்க உதவும். கரும்புள்ளிகளுடன் சேர்ந்து தூசி, அழுக்கு போன்ற சரும பாதிப்பை அனுபவிப்பவர்கள் எப்சம் உப்பை பயன்படுத்துவது நல்லது.

    ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் எப்சம் உப்பை எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிதளவு பாதாம் எண்ணெய் சேர்க்கவும். இரண்டையும் நன்றாக குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

    நமது முகத்தில் மிகச் சிறிய துளைகள் உள்ளன. இவற்றில் சேர்ந்திருக்கும் அழுக்கை அகற்ற, எப்சம் உப்பு பயன்படும். அரை டீஸ்பூன் எப்சம் உப்பை முகத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் க்ரீமில் கலந்து முகத்தில் தேய்க்கவேண்டும். பிறகு இதைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது, முகப்பரு போக்க சிறந்த மருந்து. அதுமட்டுமல்லாமல் அரை கப் எப்சம் உப்பை இளஞ்சூடான ஒரு பக்கெட் நீரில் கலந்துகொள்ள வேண்டும். இதில் பத்து நிமிடங்கள் காலை முக்கி வைத்திருந்தால், கால் அரிப்பு, கால் துர்நாற்றம், கால் வெடிப்பு போன்றவை நீங்கும்.

    • தினமும் வெளியே செல்லும் முன் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.
    • சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க நீர் சத்து மிகவும் இன்றியமையாதது.

    அழகை கெடுக்கும் வகையில் சரும பிரச்சனைகளான முகப்பரு, வறட்சியான சருமம், கரும்புள்ளிகள், பொலிவிழந்த முகம், சரும சுருக்கம் மற்றும் முடி கொட்டுதல், வழுக்கை விழுதல், நக சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண நவீன சிகிச்சை முறைகளை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.

    * முகச்சுருக்கம்:

    முதலில் கண்கள் மற்றும் வாய்ப்பகுதியை சுற்றி தான் சுருக்கங்கள் விரைவில் வர ஆரம்பிக்கும். இதனை தவிர்க்க தோல் மருத்துவரின் ஆலோசனைபடி தினமும் இரவில் முகத்தில் ரெட்டினால் எனும் கிரீமை மென்மையாக மசாஜ் செய்து வர வேண்டும்.

    * நீர்ச்சத்து:

    சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க நீர் சத்து மிகவும் இன்றியமையாதது. சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தான் முகம் பொலிவோடு இருக்கும். அதற்கு தினமும் போதுமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு சருமத்தின் வெளிப்புறம் வறட்சி அடையாமல் இருக்க மாய்ஸ்ரைசர் லோசன் போன்றவற்றை தினமும் பயன்படுத்த வேண்டும்.

    * சன் ஸ்கிரீன்:

    தினமும் வெளியே செல்லும் முன் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் கருமை அடைவதை தடுக்கப்படுவதோடு, தோல் வயதாகும் செயல்முறையை மெதுவாக்கும்.

    * கண் விளிம்பு:

    கண் விளிம்புகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்க வேண்டும். அதற்கு வெளியே வெயிலில் செல்லும்போது சன் கிளாஸ் அணிந்து செல்வதோடு, கண்களை கடுமையாக தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். கண்களை அதிகமாக தேய்த்தால் கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் வர வாய்ப்புகள் அதிகம்.

    * உணவை கவனியுங்கள்:

    சருமம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால் ஸ்டார்ச் உணவுகள், எண்ணெய் பசை அதிகமுள்ள உணவுகளை தவிர்த்துவிட்டு Omega-3 Fattily Acid மற்றும் புரோட்டின் நிறைந்த உணவுகளை அன்றாடம் உட்கொள்ள வேண்டும்.

    *நகங்கள்

    நகத்தை பற்களால் கடிக்க கூடாது வீட்டு வேலையை முடித்ததும் கைகளை கழுவி சிறிது நேரம் கழித்து கிரீம் தடவுங்கள். இதனால் நகங்கள் வறண்டு உடைவதை தடுக்கலாம்.

    இரும்பு சத்து குறைவாக இருப்பதால் நகங்கள் எளிதில் உடையும். பட்டை, பட்டையாக பிரியும். எனவே இரும்பு சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

    எனவே சரும பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை பயன்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

    Dr. TAMILARASI SHANMUGANATHANMBBS., MD (Derm), Aesthetic medicine (AAAM-USA) Consultant Dermatologist, Dr. Tamil's A+SKIN AND HAIR CENTRE Thoothukudi - Cell: 908027729

    • வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய் வறண்ட முகத்துக்கு ஈரப்பதம் அளிக்கும்.
    • தளர்வு அடைந்த சருமங்கள் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.

    சரும பராமரிப்புக்காக தயாரிக்கப்படும் பொருட்களில் வைட்டமின் ஈ சேர்க்கப்படுகிறது. சருமம் முதிர்ச்சி அடைவதை தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆன்டிஆக்சிடெண்டுகள் வைட்டமின் ஈயில் அதிகமாக உள்ளது. வைட்டமின் ஈ சத்து போதுமான அளவு இருந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக தடுக்கலாம்.

    உணவின் மூலம் வைட்டமின் ஈ சத்தை நேரடியாக பெற்று இயற்கையான வழியில் அழகை பாதுகாக்க முடியும். சூரியகாந்தி விதைகள், பாதாம், வேர்க்கடலை, அரிசி தவிடு மற்றும் கோதுமை தவிடுகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பசலைக்கீரை போன்றவற்றில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது.

    நகங்கள் பராமரிப்பு

    கைகளுக்கு தொடர்ந்து வேலை கொடுப்பவர்களின் நகங்கள் வலிமை குறைந்து அழகின்றி நிறம் மங்கி காணப்படும். நகங்களை சுற்றிலும் தோல் உரிதல், சருமம் கருமை அடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இரவில் தூங்குவதற்கு முன்பு வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய்யை நகங்களை சுற்றியும், விரல்களிலும் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நகங்கள் இயற்கையான வெளிர் சிவப்பு நிறத்தோடும் வலிமையோடும் காணப்படும்.

    கருவளையம் மறைவதற்கு

    கருவளையம் முகத்தின் பொலிவை குறைப்பதோடு வயது முதிர்ந்த தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. சிலருக்கு கருவளையத்தோடு கண்களை சுற்றியுள்ள சருமத்தில் சுருக்கங்களும் ஏற்படும். இவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெயை கண்களை சுற்றிலும் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் கருவளையமும் சுருக்கங்களும் நீங்கி கண்களில் பொலிவு ஏற்படும்.

    இரவு நேர சரும பராமரிப்பு

    குறைந்த அளவிலான மேக்-அப் போட்டிருந்தாலும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு அதை முழுவதுமாக கலைத்து முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும. மேக் அப் பொருட்களில் உள்ள வேதி மூலக்கூறுகள் சருமத்தை சேதடைய செய்து பருக்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெயை சில துளிகள் எடுத்து முகம் மற்றும் கழுத்துபகுதியில் தடவலாம். இதனால் முகத்தில் எண்ணெய் வடியும் சிரமம் ஏற்படாது. வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய் வறண்ட முகத்துக்கு ஈரப்பதம் அளிக்கும்.

    இளமையான சருமம்

    தளர்வு அடைந்த சருமங்கள் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். சருமத்தை சரியாக பராமரிக்காவிட்டால் நெற்றி பகுதியில் சுருக்கங்களும், கோடுகளும் விழத்தொடங்கும். இவை மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய் உதவுகிறது. இது சருமத்தை இறுக்கமாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரித்து இளமையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

    • பீட்ரூட் ஃபேஸ் பேக் கருவளையத்தை போக்கிட உதவுகிறது.
    • இந்த பேஸ் பேக் சருமத்திலிருக்கும் அழுக்களை எல்லாம் நீக்கிடும்.

    அழுக்கு சேர்வது தான் சருமத்தில் ஏற்படுகிற பெரும்பாலான பிரச்சனைகளின் துவக்கப்புள்ளியாக இருக்கிறது. இது தீவிரமானால் இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை கொடுக்கும்.

    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

    கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    முதலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைமாவு தனியாக ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், /ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கடைசியாக இரண்டு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறு கலந்து கொள்ளுங்கள். பேஸ்ட் பதம் வரும் வரையில் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

    இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்னால் முதலில் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். க்ளின்சிங் மில்க் இருந்தால் அதனை தடவியும் முகத்தை சுத்தமாக துடைத்துக் கொள்ளலாம். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும். அதன் பிறகு இந்த கலவையை முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். எப்போதும் கீழிருந்து மேலாக அப்ளை செய்வது நல்லது.

    முகம் முழுவதும் அப்ளை செய்து முடித்ததும் கழுத்துக்கும் அப்படியே தடவுங்கள். முகத்திற்கு தருகிற முக்கியத்துவத்தை கழுத்துக்கு யாரும் கொடுப்பதில்லை. இதனால் முகம் ஒரு நிறமாகவும் கழுத்து வேறொரு நிறமாகவும் தெரியும். இதனை தவிர்க்க கழுத்துக்கும் சேர்த்தே ஃபேஸ் பேக் போடுவது நல்லது. இதனை கழுத்துக்கும் சேர்த்து போட்டபிறகு சுமார் பதினைந்து நிமிடம் கழித்து நீங்கள் கழுவிடலாம்.

    கழுவியதும் இது கூலிங் எஃபக்டை கொடுக்கும். அதோடு சருமத்திலிருக்கும் அழுக்களை எல்லாம் நீக்கிடும். பீட்ரூட்டில் அதிகப்படியான ஃபாலிக் அமிலம் மற்றும் அத்தியவசியமான விட்டமின்கள் இருக்கிறது. இவை சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுப்பதுடன் சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது. இதனை நீங்கள் வாரம் ஒரு முறை என இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து முயற்சித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

    எண்ணெய் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் என்றால் உங்களுக்கு அடிக்கடி பரு மற்றும் கரும்புள்ளி பிரச்சனைகள் ஏற்படும்.இவர்களுக்கு பீட்ரூட் சாறு ஃபேஸ்பேக் மிகச் சிறந்த தீர்வாக அமையும். சருமத்தில் பேக் போடுவது மட்டுமின்றி தொடர்ந்து பீட்ரூட் ஜூஸ் குடிக்கவும் செய்திடலாம். பீட்ரூட்டின் சுவை பிடிக்காதவர்கள் அதில் வெள்ளரி மற்றும் கேரட்டையும் சேர்த்து அரைத்து ஜூஸ் தயாரித்துக் கொள்ளுங்கள். இவற்றை சருமத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தழும்புகளையும் போக்கிடும்.

    இதனை சருமத்தில் தடவுவதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை எல்லாம் நீக்குவதுடன் ரத்த ஓட்டத்தையும் துரிதப்படுத்துவதால் பொலிவான சருமம் உண்டாகும். ஃபேர்னஸ் க்ரீம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சிலருக்கு அதிலிருக்கும் கெமிக்கல்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.இதனை தவிர்க்க பீட்ரூட் சாறு பயன்படும்.

    இன்றைக்கு பலரது கவலையாக இருப்பது கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையம் தான். அதனை போக்கவும் இந்த பீட்ரூட் ஃபேஸ்பேக் பயன்படும். அதோடு இவை உங்களது ரத்த ஓட்டத்தையும் சீர்படுத்துவதால் இவை கருவளையத்தை போக்கிட உதவுகிறது. அதோடு முகத்தில் இருக்கிற கருந்திட்டுக்கள் எல்லாம் போக்கிடும்.

    உங்களுக்கு 30 வயதை தாண்டி விட்டாலே சருமத்தை இன்னும் சிரத்தையாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த ஃபேஸ்பேக் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் சுருக்கங்கள் வராமல் தவிர்க்கவும் உதவுகிறது. இதனை வாரம் இரண்டு முறை நீங்கள் பயன்படுத்தினால் விரைவில் சிறந்த பலனை பார்க்கலாம்.

    • மழைக்காலத்தில் முகத்தில் எண்ணெய் பசை அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன,
    • இந்த பேஸ் பேக்குகளை பயன்படுத்தினால் உங்கள் சருமம் பட்டுப்போல் மென்மையாகிவிடும்.

    பொதுவாக, வறண்ட சருமமாக இருந்தாலும், எண்ணெய் பசையாக இருந்தாலும் அல்லது கலவையான சருமமாக இருந்தாலும் (Skin Health), பருவமழையின் போது சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். மழைக்காலத்தில் முகத்தில் எண்ணெய் பசை அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று ஈரப்பதம். மழைக்காலம், சருமத்தின் மீது கூடுதல் அன்பையும் கவனிப்பையும் கோருகிறது.

    சருமத்தை சீர் செய்ய நீங்கள் பல்வேறு தயாரிப்புகளில் பணத்தை செலவழித்து, தோல் பராமரிப்பு முறைகளை பின்பற்றலாம் அல்லது உங்கள் சருமத்தின் அமைப்பையும் பளபளப்பையும் மேம்படுத்த உங்கள் நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு உதவலாம்.

    வறண்ட சருமத்திற்கு மான்சூன் ஃபேஸ் பேக்:

    10 பாதாம் எடுத்து, அதை அரைத்துக் கொள்ளவும். அதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இந்தக் கலவையை நன்கு கலக்கவும். பிறகுக் முகத்தில் பூசி, 5 முதல் 7 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

    1 டீஸ்பூன் தேனை 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் ஜோஜோபா எண்ணெயுடன் (jojoba oil) கலக்கவும். இதை உங்கள் முகத்தில் வட்ட இயக்கத்தில் தடவவும். அதை 10 நிமிடங்கள் அப்படியே உலர விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    எண்ணெய் பசை சருமத்திற்கு மான்சூன் ஃபேஸ் பேக்:

    எண்ணெய் சருமத்தை சுத்தப்படுத்த ஒரு தூய ஓட்ஸ் ஸ்க்ரப் பயன்படுத்தவும். 2 தேக்கரண்டி ஓட்மீலை சிறிது ஆரஞ்சு சாறு அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து ஸ்க்ரப் செய்யவும். இதை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.

    பழுத்த பப்பாளி கூழை முகத்தில் பூசி, அது நன்றாக உலர்ந்த பிறகு முகத்தைக் கழுவவும். முகம் அழகாக மாறுவதோடு, சருமம் பொலிவு பெறும்.

    கலவையான சருமத்திற்கு மான்சூன் ஃபேஸ் பேக்:

    2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 2 சொட்டு ஸ்ட்ராபெரி எண்ணெய் மற்றும் ஆரஞ்சு எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடம் உலர விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    எந்த பேஸ் பேக்கை பயன்படுத்தினாலும், முகத்தை கழுவிய பிறகு, உங்கள் தோல் வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.

    ×