search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiva vishnu"

    • சபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பது சாஸ்திரம்.
    • பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டால், கலிதோஷங்களிலிருந்து விடுபடலாம்.

    சபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பது சாஸ்திரம்.

    ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் இது எப்படி வந்தது?

    மொத்த நட்சத்திரங்கள் 27.

    அவற்றுக்குரிய ராசிகள் 12, கிரகங்களின் எண்ணிக்கை 9, இவை மொத்தம் 48.

    இந்த 48 தினங்களுக்கு ஒருவர் பகவானிடம் பக்தி வைத்து தரிசித்தால், எந்தவித கலிதோஷங்களும் பிடிக்காது.

    நட்சத்திரங்கள், ராசிகள், கிரகங்களால் உண்டாகும் தொல்லைகளில் இருந்து விடுபட்டு,

    பகவானுடைய பாதங்களில் சரணாகதி அடைந்து உலக துன்பங்களிலிருந்து மீண்டு வருவதற்காகவே

    பக்தர்கள் ஒரு மண்டலமான 48 நாட்கள் காலம் விரதம் மேற்கொள்கின்றனர்.

    • ஐயப்பனுக்குரிய நட்சத்திரம் உத்திர நட்சத்திரமாகும்.
    • தோஷங்கள், தடைகள், பாவங்கள் தீர்ந்து நலம் பெற ஐயப்பனுக்குரிய உத்திர விரதம் உறுதி தருகிறது.

    ஐயப்பனுக்குரிய நட்சத்திரம் உத்திர நட்சத்திரமாகும்.

    அந்த நட்சத்திர நாளில் ஐயப்பனுக்குரிய விரதம் இருக்கலாம்.

    அன்று காலை முதல் இரவு வரை, முறையான விரதம் அனுஷ்டித்து

    மாதம் ஒரு நாள் ஸ்ரீ ஐயப்ப சுவாமியை மனதில் எண்ணி வணங்கலாம்.

    தீபம் ஏற்றி, சரண கோஷம் இட்டு பானகம் நிவேதனம் செய்து, கற்பூர தீபம் ஏற்றிய பின் வணங்கி,

    அருகில் உள்ள ஐயப்பன் அல்லது மற்ற ஆலயங்களுக்குச் சென்று வரலாம்.

    பூரணா, புஷ்கலாம்பிகையுடன் உள்ள ஹரிஹரபுத்ர சுவாமி படத்தை வீட்டில் பூஜை செய்து,

    10 முதல் 50 வயதுவரை உள்ள பெண்களும் விரதம் இருக்கலாம்.

    தோஷங்கள், தடைகள், பாவங்கள் தீர்ந்து நலம் பெற ஐயப்பனுக்குரிய உத்திர விரதம் உறுதி தருகிறது.

    • சபரிமலையில் இந்த ஏழு அம்சங்களும் பொருந்தியுள்ளது.
    • இத்தகைய இடத்திற்குப் போய் தரிசனம் செய்வதால் ஒருவருடைய அனைத்து பாவங்களும் நீங்கும்.

    ஒரு தலம் மிகவும் சிறப்பான புண்ணிய தலம் என்ற சிறப்பை பெற வேண்டுமானால் கீழே உள்ள ஏழு அம்சங்களில் ஏதாவது ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

    1. சுயம்பு லிங்க பூமி - சுயமாக உண்டானதோ அல்லது இறைவனுடைய ஜீயோதிர்லிங்கம் உள்ளவை.

    2. யாக பூமி - மகா யாகம் நடந்த தலம்.

    3. பலி பூமி - பக்தி மார்க்க யுத்தம் நடந்த இடம்.

    4. யோக பூமி - ரிஷி தவமிருந்த தலம்.

    5. தபோ பூமி - யோகிமார் வாழ்ந்த தலம்.

    6. தேவ பூமி - தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பூமி.

    7. சங்கம பூமி - நதி சங்கமிக்கும் தலம்.

    இந்த ஏழில் ஒன்று இருந்தாலும் அது தீர்த்த பூமியாகும்.

    இத்தகைய இடத்திற்குப் போவதாலும் தரிசனம் செய்வதாலும் ஒருவருடைய அனைத்துப் பாவங்களும் நீங்கி

    கோடி புண்ணியம் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    சபரிமலையில் மேற்கண்ட ஏழு அம்சங்களும் பொருந்தியுள்ளதால் சபரிமலை வருபவர்களுக்கும்

    ஐயப்பனை தரிசிப்பவர்களுக்கும் கோடி புண்ணியம் கிடைக்கிறது.

    அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி மோட்சமடைய தகுதி பெறுகிறார்கள்.

    இது சபரிமலைக்கு மட்டுமே இருக்கும் தனித்தன்மையாகும்.

    ×