search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஏழு அம்சங்களும் பொருந்திய சபரிமலை
    X

    ஏழு அம்சங்களும் பொருந்திய சபரிமலை

    • சபரிமலையில் இந்த ஏழு அம்சங்களும் பொருந்தியுள்ளது.
    • இத்தகைய இடத்திற்குப் போய் தரிசனம் செய்வதால் ஒருவருடைய அனைத்து பாவங்களும் நீங்கும்.

    ஒரு தலம் மிகவும் சிறப்பான புண்ணிய தலம் என்ற சிறப்பை பெற வேண்டுமானால் கீழே உள்ள ஏழு அம்சங்களில் ஏதாவது ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

    1. சுயம்பு லிங்க பூமி - சுயமாக உண்டானதோ அல்லது இறைவனுடைய ஜீயோதிர்லிங்கம் உள்ளவை.

    2. யாக பூமி - மகா யாகம் நடந்த தலம்.

    3. பலி பூமி - பக்தி மார்க்க யுத்தம் நடந்த இடம்.

    4. யோக பூமி - ரிஷி தவமிருந்த தலம்.

    5. தபோ பூமி - யோகிமார் வாழ்ந்த தலம்.

    6. தேவ பூமி - தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பூமி.

    7. சங்கம பூமி - நதி சங்கமிக்கும் தலம்.

    இந்த ஏழில் ஒன்று இருந்தாலும் அது தீர்த்த பூமியாகும்.

    இத்தகைய இடத்திற்குப் போவதாலும் தரிசனம் செய்வதாலும் ஒருவருடைய அனைத்துப் பாவங்களும் நீங்கி

    கோடி புண்ணியம் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    சபரிமலையில் மேற்கண்ட ஏழு அம்சங்களும் பொருந்தியுள்ளதால் சபரிமலை வருபவர்களுக்கும்

    ஐயப்பனை தரிசிப்பவர்களுக்கும் கோடி புண்ணியம் கிடைக்கிறது.

    அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி மோட்சமடைய தகுதி பெறுகிறார்கள்.

    இது சபரிமலைக்கு மட்டுமே இருக்கும் தனித்தன்மையாகும்.

    Next Story
    ×