search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "santhanakoodu"

    • சந்தன குட ஊர்வலம், சந்தனம் பூசுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • முடிவில் பொதுமக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.

    கோபால்பட்டி அருகே கணவாய்பட்டியில் பக்கீர் செய்யது சாயுபு தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா தர்காவில் கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சந்தன குட ஊர்வலம், சந்தனம் பூசுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கந்தூரி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முடிவில் பொதுமக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தர்மராஜன், நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக்சிக்கந்தர் பாட்ஷா, கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், கணவாய்பட்டி ஜமாத் தலைவர் ராஜ்கபூர், செயலாளர் பாட்ஷா, பொருளாளர் ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • துதிபாடும் நிகழ்ச்சி தினமும் நடந்து வருகிறது.
    • பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    தாராவியில் 57-வது சந்தன கூடு திருவிழா கடந்த 2-ந் தேதி முதல் வருகிற 13-ந் தேதி வரை தாராவி 90 அடி சாலை சங்கம் கல்லியில் உள்ள அஸ்தானா தர்கா மற்றும் சன்னி ஜிலானி மசூதியில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி நீராட்டு விழாவும், மறுநாள் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதனை தொடர்ந்து துதிபாடும் நிகழ்ச்சி தினமும் மாலை 6 மணி அளவில் நடந்து வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.பி, ராகுல் செவாலே, சயான் கோலிவாடா பா.ஜனதா எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூடு ஊர்வலமாக சங்கம் கல்லி, 90 அடிசாலை, கும்பர்வாடா, ஷாகுநகர், ஜாஸ்மின் மில் ரோடு, மாகி பாடக், படி மஸ்ஜித், ஹோலி மைதானம், காலக்கில்லா எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சங்கம் கல்லி வந்தடைந்தது.

    அதன்பின்னர் சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்றது. தொழுகைக்கு பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • நாள்தோறும் இரவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • தர்கா முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் தர்காவில் சந்தனக்கூடு விழாவானது கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் இரவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    இதற்காக மின் விளக்குகளால் கப்பல் போன்று அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதமானது, ஊர்வலமாக சிலம்பாட்டம், மேளதாள வாத்தியங்கள் முழங்க, தெற்குமாரட் வீதி, காஜிமார்தெரு, நேதாஜி ரோடு, சிம்மக்கல், நெல்பேட்டை வழியாக கொண்டு செல்லப்பட்டது.

    இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்தனர். சந்தனகூடுவிழாவினை முன்னிட்டு தர்கா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    • தினமும் மஹபூபே சுபஹானி பயான் வரலாறு படிக்கப்பட்டது.
    • ஏராளமான முஸ்லிம்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு மஜித் தெருவில் உள்ள ஹஜ்ரத் மஹபூபே சுபஹானி தர்காவில் 140-ம் ஆண்டு சந்தனக்குட உரூஸ் கந்தூரி விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தர்காவில் தினமும் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மஹபூபே சுபஹானி பயான் வரலாறு படிக்கப்பட்டது. இதில் இந்து, முஸ்லிம்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சந்தனக்குட உரூஸ் கந்தூரி விழா முஸ்லிம் மஜீத் முத்தவல்லி முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது. நிர்வாக கமிட்டியினர் முன்னிலை வகித்தனர். கவுஸ் மைதீன் கொடியேற்றி சந்தனக்கூடு விழாவை தொடங்கி வைத்தார். ஷேக் உசேன் சந்தனக்குடத்தை தலையில் தாங்கி கொண்டு ஊர்வலமாக சென்றார்.

    சந்தனக்குடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 4 ரத வீதிகளில் ஊர்வலமாக சென்று தர்கா வந்தடைந்தது. விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் பாபு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன் மற்றும் திருச்செங்கோடு, சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மேலும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.

    • சுல்தான் கலிபா சாஹிப் சமாதிக்கு பலர் சந்தனம் பூசினர்.
    • இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    நாகூர் யூசுப் நெய்னா தெருவில் சுல்தான் கலிபா சாஹிப் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்று மாலை நேர தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. தொடர்ந்து சுல்தான் கலிபா சாஹிப் சமாதிக்கு, தர்கா டிரஸ்டி ஷேக் ஹஸன் சாஹிப் உள்ளிட்ட பலர் சந்தனம் பூசினர்.

    இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    • அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது.
    • நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    அய்யம்பேட்டை அருகே வழுத்தூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில், நாலு கொடி கந்தூரி விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு பக்கீர்மார்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக புறப்பட்டு இரவு முழுவதும் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர்.

    அப்போது உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்கீர்மார்கள், பொது மக்கள் சிலம்பாட்டம், வீர விளையாட்டுகள் விளையாடி ஆன்மிக பாடல்கள் பாடி மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தனர். நிகழ்ச்சியில் வழுத்தூர், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை தொழிலதிபர் அப்துல் ரவூப் முன்னிலையில் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஹாஜா மைதீன், ஓ.பி.பசீர் அகமது, கமாலுதீன் பைஜி, முகம்மது நஜீர், ராஜம்மா மற்றும் ஜமாத்தார்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

    • 5-ந்தேதி அரண்மனை கொடி ஊர்வலம் வந்து கொடியேற்றம் நடைபெறுகிறது.
    • 8-ந்தேதி 14-வது இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற தர்காக்களில் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்று. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கந்தூரி விழாவிற்கு வருவது வழக்கம்.

    கந்தூரி விழாவையொட்டி நேற்று கீழூர் ஜமாத்தின் நிறைபிறை கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி பச்சை களை ஊர்வலம், 5-ந்தேதி அரண்மனை கொடி ஊர்வலம் வந்து கொடியேற்றம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து மேலூர் ஜமாத்தின் பத்தாம் இரவு கொடி ஊர்வலம் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் ரவண சமுத்திரத்தில் இருந்து புறப்பட்டு, 6-ந் தேதி அதிகாலையில் பள்ளிவாசல் வந்தடைகிறது.

    இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகுவார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீப அலங்கார திடலில் தீப அலங்காரம் நடைபெறும். 8-ந் தேதி 14-வது இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இனாம்தார் எஸ்.பி.ஷா, வக்கீல் முகமது ரபி, முகமது சலீம் மற்றும் பள்ளிவாசல் மேலாண்மை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • 23-ந்தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நடக்கிறது.
    • 24-ந்தேதி சிறப்பு துவா மற்றும் நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.

    நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி) தர்கா கந்தூரி ஆண்டு விழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது.

    ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), கணவர் ஹசரத் சேகு முகம்மது (ஒலி) பெயரால் நடைபெறும் இந்த விழாவில் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் மறுநாள் (திங்கட்கிழமை) வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    23-ந்தேதி காலை 5.30 மணிக்கு கத்முல் குர்ஆன் தொடக்கம், 7 மணிக்கு குர்ஆன் தமாம் செய்தல் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு இமாம் முகம்மது யூசுப் ஆலிம் தலைமை தாங்குகிறார். காலை 8 மணிக்கு அரண்மனை புலிமான்குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனக்குடம் தர்காவுக்கு கொண்டு வருதல், 9 மணிக்கு கொடியேற்றுதல் நடக்கிறது.

    10 மணிக்கு சந்தனம் மெழுகுதல் நடைபெறுகிறது. இதில் பரம்பரை டிரஸ்டிகள் வ.நயாஸ் அஹ்மத் பிஜிலி, எச்.ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    மாலை 3.30 மணிக்கு மவ்லூது ஹரீப் ஓதுதல், 5.30 மணிக்கு ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்ரு மஜ்லிசில் காயல்பட்டினம் எஸ்.ஏ.எம்.சலாஹூத்தீன் பங்கேற்கிறார். இரவு 7.30 மணிக்கு ஹதீஸ் தொடங்குகிறது. இதில் பெட்டைக்குளம் காதர் மீரா சாகிப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி ஹபீலுல் காதர், சென்னை கோடம்பாக்கம் மஸ்ஜிதே ரஹூமா தலைமை இமாம் சதக்கத்துல்லாஹ் பாகவி, மேலப்பாளையம் அலிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர் சேக் அப்துல் காதர், நெல்லை மேலச்செவல் சேக் மதார் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் காஜா ஹூசைன் ஆலிம் உஸ்மானி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    இரவு 12 மணி முதல் டாக்டர் நெல்லை ஜி.எஸ்.அபுபக்கர், டாக்டர் ஏ.ரகிமா பேகம் குழுவினரின் இஸ்லாமிய கச்சேரி நடக்கிறது. 24-ந்தேதி காலை 5.45 மணிக்கு சிறப்பு துவா மற்றும் நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் வ.நயாஸ் அஹ்மத் பிஜிலி, எச்.ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் செய்துள்ளனர்.

    • விழாவில் தினமும் இரவு நேரத்தில் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது.
    • திருவிழா நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது.

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குத்துபுல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்காவில் இந்த ஆண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா நேற்று தொடங்கி நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.

    அதை தொடர்ந்து இரவு 11.55 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கியது. மின்சார விளக்குகள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை நாட்டிய குதிரையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை வந்தடைந்தது. இந்த விழாவில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் திரளாக கலந்து கொண்டனர்.

    விழாவில் தினமும் இரவு நேரத்தில் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சையது சமசுதீன், சையது ரசூல், சம்சூதீன் மற்றும் பரம்பரை தர்கா ஹக்தார்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • தர்கா முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
    • சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா நாளை நடக்கிறது.

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குத்துபுல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்காவில் இந்த ஆண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு திருவிழாவிற்கான கொடி ஏற்றப்படுகிறது.

    விழாவில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் அன்று இரவு நடக்கிறது. அப்போது மின்சார விளக்குகள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை, நாட்டிய குதிரையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை வந்தடையும்.

    இந்த விழாவை காண உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பெருமளவில் கலந்து கொள்வார்கள். இதையொட்டி தர்கா முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சையது சமசுதீன், சையது ரசூல், சம்சூதீன் மற்றும் பரம்பரை தர்கா ஹக்தார்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • சந்தனம், மகானின் சமாதியில் பூசப்பட்டது.
    • இவ்விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மலர்கள் வழங்கி வழிபட்டனர்.

    விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் உள்ள மகான் செய்யது சமசுதீன் ஷஹீது வலியுல்லாஹ் தர்காவில், சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை முதல் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று வாத்தியம் மேளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் எடுத்து வரப்பட்ட சந்தனக்கூடு பாரம்பரிய முறைப்படி கிராமத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞா்கள், பெரியவா்கள் ஒன்றுகூடி பாட்டுபாடி களிகம்பு ஆட்டம் ஆடி ஊா்வலமாக சென்றனா். பின்னர் சந்தனம், மகானின் சமாதியில் பூசப்பட்டது. அங்கு உலக நன்மைக்காக சிறப்புத் தொழுகை நடந்தது. இந்த விழாவில் வைப்பாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மலா்கள் வழங்கி வழிபட்டனா்.

    விழா நாட்களில் ஊர்வலமாக எடுத்து வரப்படும் சந்தனக்கூட்டின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு சமூகத்தினரும் செய்து அலங்கரித்து எடுத்து வருவதால், அனைத்து மதத்தினரும் கொண்டாடும் மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. முதலில் பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இப்பந்தயத்தில் 31 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இந்த போட்டியை சுற்றுவட்டார கிராமமக்கள் திரண்டிருந்து கண்டுகளித்தனர்.

    • சந்தனம் பூசி தப்ரூக் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம் தாலுகா, வடக்கு மாங்குடியில் உள்ள ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சையது முகமது இனாயத்துல்லா கந்தூரி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஷ்ஷெய்கு பதர் மலங்கு சாஹிபு வலியுல்லாவுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி தப்ரூக் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

    மேலும் தர்காவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கொடி மற்றும் சந்தனக்குடம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி பாத்திஹா ஓதி மீண்டும் தர்காவை வந்தடைந்தது. விழாவில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாங்குடி ஜமாத்தலைவர் அப்துல்நாசர் மற்றும் பசீர்அகமது, ராஜ்முகமது, செயலாளர் அப்துல்மாலிக், ஜமாத் ஆலோசகர் ஜபுருல்லா மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், முனாபிக்கத்துல் அனாம் சங்கம், காயிதே மில்லத் படிப்பகம் ஆகியோர் செய்து இருந்தனர். பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×