search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand abduction"

    ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்த பயன்படுத்திய மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    மயிலாடும்பாறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சிறார் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் மாட்டு வண்டியில் மணல் கடத்திக் கொண்டு இருந்தனர்.

    போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் குமணன் தொழுவைச் சேர்ந்த ராஜ் (வயது 35), செல்வக்குமார் (34) என தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்து மாட்டு வண்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆம்பூர் அருகே பாலாற்றங்கரையில் சுடுகாட்டில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள சோமலாபுரம் பாலாற்றில் உள்ள சுடுகாட்டில் இருந்து மணல் கடத்தப்படுகிறது. இங்கு மணல் அள்ளுவதால் உடல்களை அடக்கம் செய்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

    மணல் கடத்தல் கும்பலை கைது செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ஆம்பூர் தாலுகா போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய ஏ.கஸ்பா பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 29), கோவிந்தன் (24), ராஜா (37), கார்த்திகேயன் (28), கோவிந்தராஜ் (56), கேசவராஜ் (38) ஆகியோரை கைது செய்தனர்.

    மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கூடலூர் அருகே 18-ம் கால்வாயில் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு 18-ம் கால்வாய் பகுதியில் அதிக அளவு மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

    இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டதால் பொது மக்கள் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காலிக் குடங்களுடன் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்களை போலீசார் பிடித்து நடவடிக்கை எடுத்த போதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. கூடலூர் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் கூடலூர் - லோயர் கேம்ப் தேசிய நெடுஞ் சாலையில் ரோந்து சென்றனர். அரசு ஆஸ்பத்திரி அருகே வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 18-ம் கால்வாய் ஓடைப்பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. டிராக்டரை பறிமுதல் செய்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.விடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து கூடலூர் கருணாநிதி காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன், டிரைவர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தபோதும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு மணல் கடத்தலே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வைகைஆறு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் அதிகளவு மணல் கொள்ளை நடந்து வருகிறது.

    போலீசார் அவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்த போதும் மணல் திருட்டை தடுக்கமுடியவில்லை.

    ராஜதானி சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டி தலைமையிலான போலீசார் கணேசபுரம் ஓடைப் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக செல்லப்பாண்டி என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்டுமன்னார்கோவில் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் அருகே வீரசோழபுரத்தில் கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் டிராக்டர்களில் அனுமதி பெறாமல் மணல் கடத்தி செல்வதாக காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் மற்றும் போலீசார் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    அனுமதி பெறாமல் மணல் ஏற்றப்பட்ட டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடி வாலிபரை தேடி வருகின்றனர்.

    பரமத்திவேலூர் அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கு.அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 46). இவர் டிராக்டரில் பிளிக்கல் பாளையம் காவிரி ஆற்றில் நள்ளிரவு மணல் அள்ளிக் கொண்டு அய்யம்பாளையம் பகுதியை நோக்கி சென்றார்.

    அப்போது கரட்டூர் முருகன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஜேடர் பாளையம் போலீசார் டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். இந்த மணலை அரசு அனுமதி இல்லாமல் அள்ளி, திருட்டு தனமாக கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுப்பிரமணி கைது செய்யப்பட்டார்.

    அவருடைய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் நள்ளிரவு நேரங்களில் காவிரி ஆற்றில் திருட்டு தனமாக வாகனங்களில் மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறினர்.

    ×