என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
Byமாலை மலர்29 Sep 2018 10:56 AM GMT (Updated: 29 Sep 2018 10:56 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தபோதும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு மணல் கடத்தலே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வைகைஆறு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் அதிகளவு மணல் கொள்ளை நடந்து வருகிறது.
போலீசார் அவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்த போதும் மணல் திருட்டை தடுக்கமுடியவில்லை.
ராஜதானி சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டி தலைமையிலான போலீசார் கணேசபுரம் ஓடைப் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக செல்லப்பாண்டி என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X