search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rs 2 lakh"

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #sterliteprotest #MKStalin #DMK
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

    இந்நிலையில், போராட்டக் களத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பிலும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுவரை 5 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



    முன்னதாக துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #sterliteprotest #MKStalin #DMK
    ×