search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 2000 note"

    • 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது எளிதானது அல்ல.
    • ஆர்.பி.ஐ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுள்ளது.

    புதுடெல்லி :

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    எதிர்பார்த்தது போலவே மத்திய அரசு, ஆர்.பி.ஐ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது எளிதானது அல்ல என 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் சொன்னோம். தற்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    எளிதாக பரிமாற்றம் செய்வதற்கு வசதியாக இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவின் மூலம் செல்லாததாக்கி விட்டு அதனை மறைக்க ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன.

    பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு அரசும், ஆர்.பி.ஐ.யும் ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    1,000 ரூபாய் நோட்டை அரசும், ஆர்.பி.ஐ.யும் மீண்டும் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாஜகவின் கொள்கைகள் பற்றி அவர்களுக்கே தெளிவு இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
    • மக்கள் கவனத்தை திசை திருப்பவே ரூ.2 ஆயிரம் நோட்டுக்கு தடை முயற்சி.

    இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரூ.2000 நோட்டுகள் நிறுத்தம் குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியாதாவது:-

    பிரதமர் மோடியால் மீண்டும் ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கொள்கைகள் பற்றி அவர்களுக்கே தெளிவு இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

    ரூ.2000 நோட்டுகளை தடை செய்யும் திட்டம் இருந்தால் ஏன் அதனை அறிமுகப்படுத்த வேண்டும் ? பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×