search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radhika Apte"

    ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே இனி மறைக்க என்னிடம் ஒன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார். #RadhikaApte
    ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 

    சமீபத்தில் தென்னிந்திய மொழி படமொன்றில் நடித்தபோது அந்த படத்தின் கதாநாயகன் தனது கால்களை உரசி செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும் அவரை நான் அறைந்து விட்டேன் என்றும் அதிர்ச்சி தகவலை கூறி இருந்தார். அந்த நடிகர் யார் என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது. ராதிகா ஆப்தேவிடம் அடி வாங்கியது தெலுங்கு நடிகர் என்று கூறப்படுகிறது. சினிமா வாய்ப்பு தேடும் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருப்பதாகவும் ராதிகா ஆப்தே தெரிவித்தார். இந்தி படங்களில் அரைகுறை உடையில் ஆபாசமாகவும் நடித்து வருகிறார்.

    என்ன நடந்தாலும் சரி இனி தெலுங்கு படங்களில் மட்டும் நடிக்கவே கூடாது என்ற முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் அந்த முடிவுக்கு வந்துவிட்டார்.

    2015-ஆம் ஆண்டில் ராதிகா ஆப்தே அனுராக் கஷ்யப் இயக்கிய மேட்லி குறும்படத்தில் நிர்வாணமாக நடித்த புகைப்படம் ஆன்லைனில் கசிந்து சமூக வலைதளங்களில் வைரலானது. வாட்ஸ்ஆப்பில் அந்த புகைப்படம் தீயாக பரவியது. அதன் பிறகு 2016-ஆம் ஆண்டில் பார்ச்ட் படத்தில் ராதிகா ஆப்தே அதில் ஹுசைனுடன் நடித்த படுக்கையறை காட்சிகள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின.
     
    நிர்வாண புகைப்படம், படுக்கையறை காட்சி என்று அடுத்தடுத்து லீக்காகி சர்ச்சையில் சிக்கினார் ராதிகா ஆப்தே. வெளிநாடுகளில் எல்லாம் நிர்வாணமாக நடிப்பது சகஜம். கலையை பாருங்கள், உடையை பார்க்காதீர்கள் என்று விளக்கம் அளித்தார் ராதிகா.



    இன்டர்நெட்டில் கசிந்த புகைப்படங்கள் குறித்து ராதிகா ஆப்தே தற்போது மீண்டும் பேட்டி அளித்துள்ளார். பேட்டியின்போது அவர் கூறியதாவது:-

    என் நிர்வாண புகைப்படங்கள் கசிந்துவிட்டதாக என் அம்மா முதலில் கூறினார். அந்த புகைப்படங்களை அவருக்கு யாரோ வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளனர். இரண்டாவது முறை என் கார் டிரைவர் கூறினார். இதற்கு நான் ஒன்று செய்ய முடியாது. 
    என் நிர்வாண புகைப்படங்கள் ஏற்கனவே கசிந்து வைரலாகிவிட்டன. இனி மறைப்பதற்கு  என்னிடம் எதுவும் இல்லை. நான் எது வேண்டுமானாலும் செய்யலாம். அதை வைத்து யாராலும் செய்தி வெளியிட முடியாது என்று கூறி சிரித்தார் ராதிகா.

    ஆங்கில படம் ஒன்றில் நடித்து முடித்துள்ள ராதிகா தற்போது இந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RadhikaApte

    தமிழ், தெலுங்கு, இந்தி என பிரபலமான நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் வைத்து நடிகர் ஒருவர் அத்துமீறியதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். #RadhikaApte
    பிரகாஷ்ராஜ் நடித்த தோணி படத்தின் மூலம் தமிழில் அறிமுமான ராதிகா ஆப்தே, ரஜினி ஜோடியாக கபாலி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரலமானார். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

    நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி இருந்தார். அதில், தென்னிந்திய மொழி படமொன்றில் நடித்தேன். அந்த படத்தின் கதாநாயகனை அதற்கு முன்பு நான் பார்த்ததுகூட இல்லை. படப்பிடிப்பின் முதல் நாளே அந்த நடிகர் என்னிடம் சில்மிஷங்கள் செய்தார். எனது பாதங்களை வருடினார். இதனால் கோபத்தில் அவரை அறைந்து விட்டேன். செருப்பையும் காட்டினேன்” என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில், புதிதாக மற்றொரு நடிகர் மீது ராதிகா ஆப்தே புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,

    “எனக்கு சமீபத்தில் நடந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோது எனது முதுகில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்பினேன். எனது அறைக்கு செல்வதற்காக ஓட்டல் லிப்டில் ஏறினேன்.



    அதே லிப்டில் என்னுடன் நடித்த நடிகரும் வந்தார். நாங்கள் இருவர் மட்டுமே லிப்டில் இருந்தோம். சேர்ந்து நடித்தாலும் அவரோடு நான் பேசியது இல்லை. அந்த நடிகர் லிப்டுக்குள் திடீரென்று என்னிடம் அத்துமீறி பேசினார். உங்களுக்கு நள்ளிரவில் ஏதேனும் உதவி தேவை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் வந்து உங்கள் முதுகை தடவி விடுகிறேன் என்றார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த நடிகரை பற்றி தயாரிப்பாளரிடம் புகார் செய்தேன். பிறகு அந்த நடிகர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியுள்ளார். #RadhikaApte

    தோணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, கபாலி படத்தின் மூலம் பிரபலமான ராதிகா ஆப்தே தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். #RadhikaApte
    இந்தி நடிகை ராதிகா ஆப்தே தோணி, தமிழில் வெற்றி செல்வன், அழகு ராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார். கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்தது வெகுவாக பாராட்டப்பட்டது. வெறும் நடிப்பதோடு அல்லாமல் சமூக விழிப்புணர்வு வி‌ஷயங்களிலும் ராதிகா ஈடுபட்டு வருகிறார்.

    மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அடுத்ததாக இறப்புக்குப் பிறகு மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

    உடல் உறுப்பு தானத்திற்கு பதிவிட்ட கொடையாளி என்பதற்கான அடையாள அட்டையை டுவிட்டரில் பதிவிட்டு இதை செய்வதற்கு இரண்டு நிமிடங்கள்தான் ஆனது என பகிர்ந்துள்ளார். கமல்ஹாசன் உள்ளிட்ட சில தமிழ் திரை பிரபலங்களும் தங்கள் உடலை தானம் செய்துள்ளனர். #RadhikaApte

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி என்று கூறியிருக்கிறார். #RadhikaApte
    இந்தி நடிகை ராதிகா ஆப்தே சமூக அவலங்களுக்கு எதிராக எப்போதுமே தைரியமாக தன்னுடைய குரலை உயர்த்தி வருபவர்.

    இவர் தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ராதிகாவுக்கு அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான இணைய தொடர் ஸ்கேர்டு கேம்ஸ் நல்ல வரவேற்பை கொடுத்தது.

    பெண்கள் சுகாதாரம் தொடர்பாகப் பேசியுள்ள ராதிகா ஆப்தே ‘இன்னும் நம் நாட்டில் மாதவிடாய் என்பது மிகப்பெரிய மூட நம்பிக்கைகள் பிண்ணப்பட்ட வி‌ஷயமாக உள்ளது. மாதவிடாய் காலங்களில் எப்படி சுகாதாரமாக இருக்க வேண்டும் என கற்பிக்க வேண்டும்.



    நம் நாட்டு மக்கள் மாதவிடாய் மற்றும் பெண்களின் சுகாதாரம் குறித்துப் பேச தயக்கம் காட்டுகின்றனர். ஒரே நாளில் மாற்றம் நிகழாது. படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்களின் சுகாதாரம் மற்றும் மாதவிடாய் பற்றி தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி’ என்று கூறி இருக்கிறார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, தான் சினிமா துறைக்கு வந்த புதிதில் பணத்திற்காக மோசமான படங்களில் நடித்ததாக கூறியிருக்கிறார். #RadikaApte
    ராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படப்பிடிப்பில் தனது காலை அந்த நடிகர் உரசி தொல்லை கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இந்தி படங்களில் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார். அவரது ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:-

    “சினிமா துறையில் பின்புலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றன. உறவினர்கள் இல்லாதவர்கள் கஷ்டப்பட வேண்டி உள்ளது. பட வாய்ப்புக்கு அவர்கள் போராடும் நிலை இருக்கிறது. பின்புலம் உள்ளவர்கள் உறவினர்கள் உதவியால் வாய்ப்புகள் பெற்றாலும் திறமை இருந்தால்தான் அவர்களால் நிலைக்க முடியும். நான் எந்த பின்னணியும் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சினிமா துறைக்கு வந்தபோது எந்த மாதிரி கதைகளில் நடிக்க கூடாது என்று நினைத்து இருந்தேனோ அந்த படங்களில்தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.



    என் பிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்கு பெயர் புகழ் கிடைத்து விட்டது. நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் எல்லா கதைகளுக்கும் ஒப்புக்கொள்ளாமல் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.”

    இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார். 
    ×