search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quota system"

    • பொதுமக்களும் பலமுறை அலைந்த பின்னரே வரன்முறை சான்று பெற முடிகிறது.
    • உரிய கட்டணத்தை செலுத்தி வரன்முறை செய்து கொண்டும் வருகின்றனர்.

    மடத்துக்குளம்:

    தமிழ்நாடு அரசின் நகர் ஊரமைப்புத்துறை உத்தரவுப்படி 2016ம் ஆண்டுக்கு முன் கிரயம் செய்த, அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் வாங்கியவர்கள், அதற்கான வளர்ச்சி கட்டணம், மேம்பாட்டு கட்டணங்களை செலுத்தி மனையை வரன்முறை செய்து கொள்ளலாம்.

    பொதுமக்கள் வாங்கி உள்ள மனைப்பிரிவில், யாராவது ஒரு தனிமனையை அங்கீகாரம் செய்து, அங்கீகார எண் பெற்றிருந்தால் மற்ற மனைகளை எளிதாக வரன்முறை செய்யலாம். அதற்கான பட்டியல், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளன.இதனால் திருப்பூர் மாவட்டத்தில் பல பகுதிகளில், அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறை செய்ய மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இருப்பினும், பொதுமக்களும் பலமுறை அலைந்த பின்னரே வரன்முறை சான்று பெற முடிகிறது.

    இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில்சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட சில ஒன்றியங்களில் மட்டுமே வீட்டுமனை அங்கீகாரம் வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் அதற்கான தேவை கிடையாது.ஏற்கனவே அங்கீகாரமற்ற மனைகள், வரன்முறை செய்யப்பட்டுள்ளது. சிலர் அங்கீகார அனுமதி எண் பெற்ற மனைப்பிரிவுகளில் உள்ள, மனை உரிமையாளர், உரிய கட்டணத்தை செலுத்தி வரன்முறை செய்து கொண்டும் வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருப்பதியில் ஒரே நாளில் இலவச தரிசனம் செய்வதற்கு ஆதார் கட்டாயம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. #tirupati
    திருப்பதி:

    திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சிறப்பு தரிசனம், திவ்ய தரிசனம் (மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு), சர்வ தரிசனம் (இலவச தரிசனம்) என பல வகையான தரிசன முறை அமலில் உள்ளது.

    இதில் இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், காத்திருப்பு அறைகளில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் தரிசன முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், ஒரே நாளில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில், தரிசன டோக்கன் வழங்கப்படும். இதற்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் கூறியதாவது:

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட டோக்கன் மூலம் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியும். இந்த டோக்கன் முறை தரிசன அட்டை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

    இலவச தரிசனத்திற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் 15 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.

    இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    தரிசன நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் முறையானது, 300 ரூபாய் சிறப்பு தரிசனம் மற்றும் திவ்ய தரிசனத்திற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #tirupati
    ×