search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prema latha"

    • அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், ஊடகம், திரைத்துறை, அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இன்று சாதனைகளைப் படைத்து வருகின்றனர்
    • தேமுதிக சார்பில் பெண்களுக்கும் கேப்டன் அவர்கள் நிறைய தொண்டுகளை செய்திருக்கிறார்.

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

    அதில், "ஒவ்வொரு நாளும் எத்தனையோ சாதனைகளை படைத்து வரும் பெண்களுக்கு மென்மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் உலக மகளிர் தின நாள் கொண்டாட்டங்கள் அமைவதோடு, பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு, வாழ்வில் சோதனைகளை வாய்ப்பாக கருதி உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும்.

    ஆணும் பெண்ணும் நட்புணர்வோடு, நல்ல புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய வழி. தோழியாக தாயாக சகோதரியாக, தாரமாக என நம் அனைவரின் வாழ்விலும் ஓர் அங்கமாக இருந்துக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை பெண்கள் அர்ப்பணித்துக் கொண்டு வருகிறார்கள்.

    அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், ஊடகம், திரைத்துறை, அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இன்று சாதனைகளைப் படைத்து வருகின்றனர். உலகத்தில் உள்ள அனைவருக்கும் தாய் தான் அவர்களின் வளர்ச்சிக்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் முதல் படியாக இருப்பார்கள். அப்படியான தாய்மார்களை, ஒருவரின் வளர்ச்சிக்கு எப்போதும் துணையாக நிற்கும் பெண்களைப் போற்றுவதற்காமவே இந்த உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

    தேமுதிக சார்பில் பெண்களுக்கும் கேப்டன் அவர்கள் நிறைய தொண்டுகளை செய்திருக்கிறார். பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் வகையில் சிறு கடைகள் வைத்து தருவது, தையற்பயிற்சியை ஊக்குவிக்க தையல் இயந்திரங்களை இலவசமாக வழங்குவது, ஊனமுற்றவர்களுக்கு ஏற்ற உபகரணங்களை வழங்குவது, கல்வி உதவி ஏற்படுத்தித் தருவது, கணினி பயிற்சி மையங்களை ஏற்படுத்தித் தருவது போன்றவைகளோடு, பெண்களுக்கான திருமண உதவிகளைச் செய்து தருவது, மருத்துவ உதவிகள் போன்றவைகளையும் கேப்டன் செய்து கொடுத்திருக்கிறார்.

    இந்திய அரசியலிலேயே மகளிருக்கு அரசியலில் சமபங்கு அளித்துள்ள ஒரே இயக்கம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மட்டுமே. தேமுதிகவில் மகளிர் அணிக்கென்று தனிச் சீருடையை உருவாக்கி ஆண்களுக்கு நிகராகப் பெண்களையும் அரசியலில் மதிக்க வேண்டும் என்பதை மற்றக் கட்சிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் கேப்டன் அவர்கள் செய்த மாற்றங்கள் தான். இன்றைக்கு பல்வேறு கட்சிகளில் மகளிருக்கு சம உரிமைகள் வழங்கப்பட காரணமாக இருந்து வருகிறது.

    பெண்களை என்றைக்குமே தேசிய முற்போக்கு திராவிட கழகம் போற்றி, கெளரவித்துக் கொண்டே நான் இருக்கிறது. கேப்டன் வழியில் அவருடைய அனைத்து விதமான உதவிகளையும், நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து வழங்கி பெண்களைப் போற்றி கௌரவிப்போம்.

    இந்த நன்னாளில், கேப்டன் மீது அன்பு கொண்ட தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களும், எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ் தேமுதிக சார்பில் எனது இதயம் கனிந்த உலக மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    தேமுதிக கட்சியை யாராலும் அசைக்க முடியாது எனவும் விரைவில் நாங்கள் ஆட்சியை பிடிப்போம் எனவும் விஜயகாந்த் மகனான விஜய் பிரபாகரன் கூறியுள்ளார். #vijayprabhakaran #vijayakanth #DMDK
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அரசியலில் குதித்து வெற்றியை ருசித்தார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் அவர் எட்டி பிடித்தார்.

    விஜயகாந்தின் அரசியல் பயணத்தில் அவரது மனைவி பிரேமலதா கட்சி தொடங்கிய நாளில் இருந்தே உடன் இருக்கிறார். விஜயகாந்த் பங்கேற்கும் கூட்டங்களில் தவறாமல் அவரும் கலந்து கொள்வார்.

    விஜயகாந்த் பங்கேற்க முடியாத நிகழ்ச்சிகளில் பிரேமலதா தனியாகவும் கலந்து கொண்டு உள்ளார்.

    விஜயகாந்தின் மகன்களான விஜய் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் அரசியல் வாடை இன்றியே இதுநாள் வரையில் இருந்து வந்தனர். இதனால் அவர்கள் அரசியல் பக்கம் தலைவைத்து படுக்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதனை பொய்யாக்கும் வகையில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் திடீரென அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ளார்.

    விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் தே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் விஜய் பிரபாகரன் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அவரது பேச்சு வருமாறு:-

    சிறு வயதில் இருந்தே அப்பாவுடன் காஞ்சீபுரத்துக்கு அடிக்கடி சென்றுள்ளேன். எனக்கு பிடித்தமான ஊர் காஞ்சீபுரம்தான். ஏன் என்றால் சங்கர் படத்தை போல காஞ்சீபுரம் பிரமாண்டமாக காட்சி அளிக்கும்.

    இங்கு ஏராளமான மாணவ- மாணவிகள் வந்துள்ளீர்கள். எப்போதுமே ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. பல்வேறு துறைகளில் நமது கவனம் இருக்க வேண்டும். அப்போதுதான் எல்லா வி‌ஷயங்களையும் தெரிந்து கொண்டு ஜெயிக்க முடியும்.



    நான் படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு வேலையில் சேர்த்து விடட்டுமா? என்று அப்பா கேட்டார். இதற்கு பதில் அளித்த நான், “விஜயகாந்த் மகனாக வெற்றி பெற விரும்பவில்லை. பிரபாகரனாகவே வெற்றி பெற விரும்புகிறேன் என்று கூறினேன்.

    எனது விருப்பப்படியே நான் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க அனுமதி அளித்தார். எதுவாக இருந்தாலும் அடிப்படையில் இருந்தே செய்ய வேண்டும் என்று அப்பா கூறுவார். அதன்படி நான் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளேன்.

    எனது தொழில் வி‌ஷயமாக அருகில் உள்ள பெங்களூருக்கு அடிக்கடி சென்று உள்ளேன். ஆனால் அங்குள்ள வளர்ச்சி சென்னையில் இல்லை. இது போன்ற வி‌ஷயங்கள் எல்லாம் மாற்ற வேண்டும்.

    எனக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். அது புனிதமான பெயர். எப்போதுமே மனதுக்கு பிடித்த வி‌ஷயங்களை விரும்பி செய்வேன்.

    இப்போது நான் எந்த நாட்டுக்கு சென்றாலும் எனக்காக 100 பேர் அங்கு நிற்பார்கள். பேட்மிண்டன் போட்டிக்கான அணியை வாங்கி இருந்தேன். அதில் தான் பி.சி.சிந்து சாதித்து காட்டினார். எப்போதுமே ஒரே மாதிரி சிந்தனை இல்லாமல் மாற்றி மாற்றி யோசிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். பிடித்த வி‌ஷயத்தை செய்தால் அதில் எளிதாக வெற்றி பெற முடியும்.

    இப்போது தெரிந்தோ தெரியாமலோ எனக்கு பிடித்த இடத்தில் (அரசியல் மேடை) நின்று கொண்டு இருக்கிறேன். இதிலும் எனக்கு வெற்றி கிடைக்கும். எனக்கு வைத்துள்ள பிரபாகரன் என்ற பெயரை காப்பாற்றும் வகையில் செயல்படுவேன்.

    கூட்டத்துக்கு புறப்படும் போது அப்பா 2 வி‌ஷயங்களை என்னிடம் சொல்லி அனுப்பினார். கட்சியினரிடம் சீக்கிரம் வருவேன் என்று சொல்லு. கூட்டத்தை சீக்கிரம் முடிக்க சொல். மழை வருவது போல் இருக்கிறது. பெண்கள் எல்லாம் சீக்கிரம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.

    நான் அவரிடம், “நமது கட்சி பெண்கள் எல்லாம் மிகவும் தைரியமானவர்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள்” என்று சொன்னேன்.



    10 ஆயிரம் பேர் என்ன? ஒரு லட்சம் பேர் வந்தாலும் தே.மு.தி.க.வை அசைக்க முடியாது. அதில் இருந்து ஒரு செங்கலைகூட உருவ முடியாது. என்னோடு இணைந்து செயல்பட இளைஞர்கள் பலர் கைகோர்ப்பார்கள்.

    கண்டிப்பாக நான் சாதித்து காட்டுவேன். அதற்கு நீங்களும் கை கொடுக்க வேண்டும்.

    எனக்கு எப்போதுமே திமிரு அதிகம். அந்த திமிரோடு சொல்லிக் கொள்கிறேன். சத்தியமாக தே.மு. தி.க. ஆட்சியை பிடிக்கும். நீங்கள் எல்லோரும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அனகை முருகேசன் அங்கிளை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் விரைவில் காலில் செருப்பு அணிவீர்கள். தாடியையும் எடுப்பீர்கள். இது நிச்சயம் நடக்கும்.

    இவ்வாறு விஜய் பிரபாகரன் பேசினார்.

    காஞ்சீபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளரான அனகை முருகேசன் விஜயகாந்த் முதலமைச்சர் ஆகும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக விழா மேடையில் தே.மு.தி.க. நிர்வாகிளும், தொண்டர்களும் விஜய் பிரபாகரனுக்கு மாலைகள், சால்வைகளை அணிவித்து மலர் கிரீடம் சூட்டினார்கள். “தே.மு.தி.க.வின் எதிர் காலமே”, “இளைஞர்களின் எழுச்சி தளபதியே”, கேப்டனின் தளபதியே” என்பது போன்ற கோ‌ஷங்களையும் தொண்டர்கள் எழுப்பினர்.

    பின்னர் விஜய் பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட போகிறேன். எனக்கு இளைஞர் அணி பொறுப்பு கொடுக்கப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பொறுப்பை தேடிப்போவது அரசியல் இல்லை, சேவையை தேடி வருவதுதான் அரசியல். மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்.

    அதற்காக நான் நிறைய திட்டங்களை வைத்துள்ளேன். அதை அனைத்தையும் செயல்படுத்தப்போகிறேன். கட்சியில் பொறுப்பு வகிப்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.

    இது ஒருநாள் கூத்து இல்லை. என் அப்பா செய்யாததை நான் ஒன்றும் செய்து விடப்போவதில்லை. அவர் கட்சியில் செய்ததைத்தான் நானும் செய்யப்போகிறேன்.

    இதற்காக இளைஞர்கள் என்னுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #vijayprabhakaran #vijayakanth #DMDK
    ×