search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pongal party"

    சென்னையில் இன்று மாலை 3 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு பொங்கல் விருந்து அளிக்கப்படுகிறது. இதில் மோகன் பகவத் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். #mohanbhagwat #pongal #rss

    சென்னை:

    ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் முக்கிய தலைவர்களின் கூட்டம் மகாபலிபுரம் அருகே உள்ள உத்தண்டியில் நேற்று தொடங்கியது. தேசிய அளவிலான மிக முக்கிய தலைவர்கள் 50 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

    சங் பரிவார் அமைப்புகளின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், அயோத்தி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு மற்றும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு விசயங்கள் பற்றி விவாதிக்கிறார்கள்.

    வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) வரை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலைமையில் கூட்டம் நடந்து வருகிறது.

    இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “வருடம் தோறும் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் வழக்கமான கூட்டம்தான். இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் பற்றி தலைவர்கள் விவாதிப்பார்கள்” என்றார்.

    பொங்கல் நெருங்கி வருவதால் தமிழக ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு பொங்கல் விருந்து அளிக்கப்படுகிறது.

    இந்த விருந்து நிகழ்ச்சி திருவான்மியூரில் இன்று மாலை நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக தொண்டர்கள் மத்தியில் மோகன் பகவத் உரையாற்றுகிறார். #mohanbhagwat #pongal #rss

    ×