என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Persons with disabilities"
- சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 30-ந் தேதி நடக்கிறது.
- சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவா்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.
வருகிற 30-ந் தேதி(புதன்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வளா்ச்சி மன்ற கூட்ட அரங்கில் (தரைதளத்தில்) மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், UDID பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதலமை ச்சாின் விரிவான மருத்துவ க்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, பிறதுறைகளில் செயல்படுத்தப்படும் திட்ட ங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பராமரிப்பு உதவித்தொகை வழ ங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், 18-வயது குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.
மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்்ட் அளவு புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகிய வற்றுடன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன காதொலிக் கருவியை கலெக்டர் வழங்கினார்.
- மேலும் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு யூ.டி.ஐ.டி. பதிவு, 59 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு பதிவு செய்யப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி கலந்து கொண்டு ரூ.30 ஆயிரம் மதிப்பில் 6 மாற்றுதிறனாளிகளுக்கு காதுக்கு பின்னால் அணியும் நவீன காதொலிக் கருவிகள், 33 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை ஆகியவைகளை வழங்கினார். மேலும் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு யூ.டி.ஐ.டி. பதிவு, 59 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு பதிவு செய்யப்பட்டன.
இந்த முகாமில் வங்கி கடனுதவி, உதவி உபகரணம், பராமரிப்பு உதவித்தொகை, உயர் ஆதரவு தேவைபடுவோருக்கான உதவித்தொகை மற்றும் பிற துறைகளின் மூலம் வழங்கப்படும் உதவி களுக்கென மாற்றுதிறனாளிகளி டமிருந்து 88 மனுக்கள் பெறப்பட்டது.
முன்னதாக இளை யான்குடி வட்டத்திற்கு ட்பட்ட தன்னார்வலர் அப்துல்மாலிக் ஏற்பாடு செய்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்து கொண்டு பனைவிதை மற்றும் மரக்க ன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேல், வட்டாட்சியர் அசோக்கு மார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கள்ளக்குறிச்சியில் 21,240 மாற்றுத்திறானாளிகளுக்கு அடையாள அட்டைகள் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
- நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாமில் 279 பேர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத் திறானாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடை பெற்றது.
முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பேசிய தாவது:-
கடந்த 01.08.2021 முதல் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வட்டார அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு 8,435 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருங்கிணைந்த விழுப்புரம் அலுவலகம் மூலமாக 12,541 மாற்றுத் திறானாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடை யாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 279 ேபர் கலந்து கொண்டனர்.
இதில் ஒற்றை சாளர முறையில் நேற்று 264 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 21,240 மாற்றுத்தி–றனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் பெற்றிடவும், மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து சலுகை கட்டணம், மாதாந்திர உதவித்தொகை, கல்விக்கடன், அரசின் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் பல்வேறு சலுகைகளை பெற்றிட மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பயண்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன், திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரி உதவி மருத்துவ அலுவலர் (எலும்பு அறுவை சிகிச்சை) பிரவீன் பால் மற்றும் மாற்றுத்திறனாளி கள் பலர் கலந்து கொண்ட னர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்