search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Identity cards"

    • கள்ளக்குறிச்சியில் 21,240 மாற்றுத்திறானாளிகளுக்கு அடையாள அட்டைகள் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
    • நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாமில் 279 பேர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத் திறானாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடை பெற்றது.

    முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பேசிய தாவது:-

    கடந்த 01.08.2021 முதல் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வட்டார அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு 8,435 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒருங்கிணைந்த விழுப்புரம் அலுவலகம் மூலமாக 12,541 மாற்றுத் திறானாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடை யாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 279 ேபர் கலந்து கொண்டனர்.

    இதில் ஒற்றை சாளர முறையில் நேற்று 264 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 21,240 மாற்றுத்தி–றனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் பெற்றிடவும், மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து சலுகை கட்டணம், மாதாந்திர உதவித்தொகை, கல்விக்கடன், அரசின் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் பல்வேறு சலுகைகளை பெற்றிட மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பயண்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன், திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரி உதவி மருத்துவ அலுவலர் (எலும்பு அறுவை சிகிச்சை) பிரவீன் பால் மற்றும் மாற்றுத்திறனாளி கள் பலர் கலந்து கொண்ட னர்.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் பயன்படுத்தும் 11 ஆவணங்களை தேர்தல் கமி‌ஷன் வெளியிட்டுள்ளது. #ElectionCommission #Parliamentelection #LSPolls

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் பயன்படுத்தும் 11 ஆவணங்களை தேர்தல் கமி‌ஷன் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    1. பாஸ்போர்ட்

    2. ஓட்டுநர் உரிமம்

    3. மத்திய -மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் - வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாளஅட்டை

    4.புகைப்படத்துடன் கூடிய வங்கி - அஞ்சலக கணக்குப் புத்தகம்

    5.பான்கார்டு

    6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு


    7.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணிஅட்டை

    8.தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட்கார்டு

    9.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியஆவணம்

    10. பாராளுமன்ற- சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை

    11.ஆதார் கார்டு

    வாக்களிக்கும்போது இந்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு வாக்காளர் வேறொரு சட்ட மன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் தேர்தல்ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்கு உரியவாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionCommission #Parliamentelection #LSPolls

    ×