search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Persons with disabilities"

    • வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்.
    • வருகிற 8-ந் தேதி நடக்கிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டஅளவில் நடைபெற உள்ளது.

    வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ''மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்புகுறைதீர்க்கும் நாள் கூட்டம்'' நடைபெற உள்ளது.

    ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதால் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை பெறாதவர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்தஅடையாளஅட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்வும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் மற்றும் இதரஅனைத்து வித உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
    • இதரஅனைத்து வித உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டஅளவில் நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ''மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்புகுறைதீர்க்கும் நாள் கூட்டம்'' நடைபெற உள்ளது. ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதால் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை பெறாதவர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்தஅடையாளஅட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்வும், 

    • அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் 3 இடங்களில் நடைபெறுகிறது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திற னாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதுவரை மாற்று த்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் 3 இடங்களில் நடைபெறுகிறது.

    அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) தஞ்சை கோட்டத்தில் தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியிலும், 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் பஸ் நிலையம் அருகில் உள்ள கே.எம்.எஸ்.எஸ். வளாகத்திலும், 23-ந்தேதி பட்டுக்கோட்டை கோட்டத்தில் பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரில் உள்ள கிராமசேவை கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

    இதில் எலும்பு முறிவு டாக்டர், காதுமூக்குதொண்டை பிரிவு டாக்டர், மனநல டாக்டர், கண் டாக்டர் ஆகிய அரசு டாக்டர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளனர். மேற்படி டாக்டர்கள் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல்கள் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அடடைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் கூறிய ஆவணங்களுடன் மாற்று த்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • பிள்ளையார்பட்டியில் அம்சம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அம்சம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் அண்ணாமலை தலைமை தாங்கினார். திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி, பிள்ளையார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொண்டு நிறுவன கூட்டமைப்பு தலைமை அறிவுரையாளர் பெருமாள் கலந்து கொண்டார். பிள்ளையார்பட்டியில் கோடைகாலம் முழுவதும் செயல்படும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பலசரக்கு, காய்கறிகள், வேட்டி, சேலை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆட்டோ வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர வாகனமும், வறுமையில் உள்ள பெண்களுக்கு மகளிர் மேம்பாட்டு விழிப்புணர்ச்சி முகாம் அமைத்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்பட்டது. ஒரு மாணவிக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இதில் மீனாள் ஆதீனமிளகி, பால சரசுவதி முத்துகிருஷ்ணன், நிருபா அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் கடனுதவி பெற்று தொழில் முனைவோர்களாக விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனை வோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 வயது நிரம்பிய மாற்றுதிற னாளிகள் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதிகள் பெற்றி ருந்தால் உற்பத்தி பிரிவு மற்றும் சேவைப் பிரிவு ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.75 லட்சம் மானியத்துடன் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவித் தொகையினை திரும்ப செலுத்திடும் தவணைத் தொகைகளில் விதிக்கப்படும் வட்டியில் 3 விழுக்காடு வட்டித் தொகையை பின்னேற்பு மானியமாக அரசு வழங்கி வருகிறது.

    பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மாற்றுத்தி றனாளிகள் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைத் தொழில் பிரிவின் கீழ் ரூ. 5 லட்சம் வரையிலும் கடனு தவி பெறுவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவை யில்லை.

    மேற்கண்ட கடன் வரம்பிற்கு மேல் கடனுதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.500 லட்சம் வரை மேலும் சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் கடனுதவி பெறலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில் வகைகளுக்கு 35 விழுக்காடு வரையில் அதிகபட்சமாக ரூ.17.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் செலுத்தும் 5 விழுக்காடு பங்களிப்புத் தொகையானது, மாற்றுத்திறனாளி நலத்துறையினரால் மான்யமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் மேற்கண்ட கடனுதவி திட்டங்களில் தங்களுக்குத் தகுதியான கடனுதவி திட்டத்தை தேர்வு செய்து www.msmeonline.tn.gov.in/uyegp/needs மற்றும் www.kviconline.gov.in Agency DICஎன்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை வருவாய் கோட்டாட்சியரின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை
    (6-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    இதில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி, போன்ற உதவி உபகரணங்கள், மாதாந்திர உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு உதவிகள் பெறும் வகையில் விண்ணப்பங்கள் வழங்கலாம்.

    இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மதுரை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மதுரை மேற்கு வட்டம், வடக்கு வட்டம் மற்றும் வாடிப்பட்டி வருவாய் வட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத் திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் புகைப்படம்-1 ஆகியவற்றுடன் மதுரை வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கி பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    • 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
    • கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்படும் கிராமிய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    கணினி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

    கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்பட உள்ளது.

    பயிற்சிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்து பயிற்சி நிறுவனம் வரை பயிற்சி காலத்திற்கு இலவச பேருந்து பயண சலுகை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பெற்று தரப்படும். மேற்படி பயிற்சி கும்பகோணம் மற்றும் பட்டுகோட்டையில் நடத்தப்பட உள்ளது.

    மேற்படி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் பட்டுக்கோட்டை அல்லது கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நேரில் வந்து 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்கள் பெற 04362-236791 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பட்டுகோட்டை மற்றும் கும்பகோணம் வருவாய் கோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய ஆவணங்களுடன் கணினி பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார்.
    • 3 சக்கர வாகனம், தையல் எந்திரம் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.

    திருப்பரங்குன்றம்

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு மற்றும் பல சரக்கு பொருட்களை மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், தையல் எந்திரம் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன. இதில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் விமல், பெருங்குடி வசந்த், பிரபு, கார்த்தி, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் பழனிகுமார் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 27-ந் தேதிக்குள் பராமரிப்பு தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை 3,790 மாற்றுத்திறனாளிகள் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, மாதம் ரூ. 2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை வழங்க ப்பட்டு வருகிறது.

    அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளின் ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திற னாளிகள், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிக ளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார், வங்கிக்கணக்கு, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி புகைப்படம், மாற்றுத்திறனாளியின் பாதுகாவ லர் புகைப்படம் ஆவ ணங்களில் அசல் மற்றும் நகலை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வருகிற 27-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே மாற்றுத் திறனாளியின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம், மேற்காணும் விவரங்களை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.
    • தேசிய அடையாள அட்டை மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 59 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 89 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்தததாவது, தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

    அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் 31824 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்களில் தனித்துவம் வாய்ந்த 19439 நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில்புரிய மானியத்துடன் கூடிய கடனுதவிகளும் வங்கி பங்களிப்புடன் வழங்கப்பட்டு வருகிறது.

    மன வளர்ச்சி குன்றியோர், கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    18 வயதிற்கு மேற்பட்ட பார்வைதிறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தின்கீழ் பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்டு செல்போன் வழங்கப்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொது பிரிவு திட்டத்தின்கீழ், ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், 9ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயிலும் குறைகண் பார்வையுடைய மாணவ, மாணவியர்களுக்கு எழுத்தை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கிகள் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் லதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 15 முதல் 17 வயதுடைய ஆண், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி.
    • மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் இத்தகைய நிகழ்வின் மூலம் கொண்டு செல்ல இயலும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்று த்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்ப ரிசுகள் மற்றும் சான்றிதழினை வழங்கி பாராட்டினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகள் ( உதவி உபகரணங்களுடன்) 12 முதல் 14 வயதுடைய ஆண், பெண் காலிபர் மற்றும் கால் தாங்கி உதவியுடன் நடப்பவர்களுக்கான 50 மீ நடைபோட்டி , 17 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சக்கர நாற்காலி ஓட்டப் போட்டி, 15 முதல் 17 வயதுடைய ஆண், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி, செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டி, நீளம் தாண்டுதல் போட்டி, 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் போட்டி, குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டி, பார்வைத் திறன் குறையுடையோருக்கான நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல்மா நடைபெற்றது.

    மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் விதமாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவித்தது. இதனை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு அந்நாளில் ஊதா நிறத்தில் முக்கிய கட்டிடங்களில் ஒளியூட்டி பிற நாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் இத்தகைய நிகழ்வின் மூலம் கொண்டு செல்ல இயலும்.

    இந்தியாவில் முதல் முறையாக நமது தமிழ்நாட்டிலும் இவ்விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2 நாட்கள் தமிழ்நாடு அரசின் அனைத்து முக்கிய அலுவலகங்களையும் ஊதா நிறத்தில் ஒளியூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆட்சியர் அலுவலக பணியாளர்களையும் ஊதா நிறப்பட்டை அணிந்து, மாற்றுத்தி றனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்ரெங்கராஜன், எமாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்சாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.
    • தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    சீர்காழி நகர தி.மு.க. சார்பில்இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, பிறந்தநாளை யொட்டி, நகராட்சி 18-வது வார்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக நகர செயலாளர் ம.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.

    நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், சாமிநாதன், ஜி.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலை, இலக்கிய பிரிவு மாவட்ட அமைப்பாளர் செல்வ முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா.முருகன், சீர்காழி எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஆகியோர் பொதுமக்கள், மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராமு, திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, தி.மு.க. நிர்வாகிகள் முத்துகுபேரன், முருகன், ஜெ.கே.செந்தில், கோடங்குடி.சங்கர், மற்றும் பலர் பங்கேற்றனர்.

    முடிவில் தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றிக்கூறினார்.

    ×