search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliamentary Election work"

    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து நாளை மாலை 4 மணிக்கு மகாராஜ நகரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டியினர் தவறாமல் கலந்து கொள்ளுமாறு எம்.எல்.ஏ. அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்தும், நாங்குநேரி சட்டமன்றத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு மகாராஜ நகரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டியின் வட்டார, நகர, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ளு மாறு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    ×