என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nithyananda"
- சமூக வலைதளங்களில் நித்யானந்தாவின் புகைப்படம் மற்றும் அவர் பேசுவதுபோன்ற ஒரு வீடியோ பரவி வருகிறது.
- பின்னணி இசை ஒலிக்க நித்யானந்தா, மீண்டும் வந்துவிட்டேன்..., மீண்டு வந்துவிட்டேன்... என்ற வசனம் பேசுவது போல உள்ளது.
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி குருபூர்ணிமா அன்று மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது 3 மாதங்களாக தான் சமாதி நிலையில் இருந்தது பற்றி அவர் பக்தர்களுக்கு விளக்கினார்.
அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவர் மீண்டும் நேரலையில் தோன்றி பேசியதால் அவரது சீடர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேநேரம் அன்றைய தினம் சுமார் 3 மணி நேரம் ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் உரையாற்றினாலும் அதில் பெரும்பாலும் நன்றி சொல்லும் விதத்திலேயே அமைந்தது. இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நித்யானந்தா நேரலையில் தோன்றி அருளாசி வழங்க இருப்பதாக அவரது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் நித்யானந்தாவின் புகைப்படம் மற்றும் அவர் பேசுவதுபோன்ற ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் பின்னணி இசை ஒலிக்க நித்யானந்தா, மீண்டும் வந்துவிட்டேன்..., மீண்டு வந்துவிட்டேன்... என்ற வசனம் பேசுவது போல உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- ஆன்மாவில் தான் பரமசிவ பரம்பொருள் பிரதிபலிக்கிறார்.
- அழியாத ஒன்றின் மீது ஈடுபாடு வரும், அதன் மீது ஈர்ப்பு வரும். அது வந்து விட்டாலே பரமசிவன் உங்களுக்குள் நிறைந்து விடுவார்.
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தா இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு சத்சங்க உரை ஆற்றி வந்த அவர் கடந்த 3 மாதங்களாக நேரில் தோன்றவில்லை.
இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளியானது. அவை புரளி எனவும், நான் ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பதாகவும் நித்யானந்தா தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
அதன்பிறகு சமாதி நிலையில் இருந்து பேசுவதாக கூறி, தொடர்ந்து சில கருத்துக்களை பதிவிட்ட அவர் குருபூர்ணிமா நாளான ஜூலை 13-ந் தேதி மீண்டும் நேரில் தோன்றுவதாக அறிவித்தார்.
அதன்படி நேற்று இரவு சமூக வலைதளங்கள் மூலம் நேரில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். முதலில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், சிறிது நேர இடைவேளைக்கு பிறகு தமிழிலும் அருளுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த குரு பூர்ணிமா நன்நாளில் பரமசிவம் பரம்பொருளின் ஆசி நம் எல்லோர் மீதும் நின்றிருக்கட்டும். இந்த நன்நாளில் என்னையே என் குரு பரம்பரைக்கு அர்ப்பணித்து 42-வது நிகழ்வை தொடங்குகிறேன்.
இன்றிலிருந்து 42-வது சாதுர்மாசியத்தை தொடங்குகிறேன்.
3 மாத கால நீண்ட நெடிய சமாதிக்கு பின் உங்களுடன் பகிர்ந்து கொள்ள பரமசிவனின் ஞானமும், ஆசியும், அருளும் நிறைய இருக்கிறது. இன்று முதல் சத்சங்கங்கள் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
இன்று முதல் நாள் நான் சொல்ல விரும்புவது மிகப் பெரிய நன்றி. பல விதத்தில் கைலாசாவுக்கு துணையாகவும், ஆதரவாகவும், பலமாகவும் நின்ற எல்லா பக்தர்கள், அன்பர்கள், சீடர்கள், இந்துக்கள் அனைவருக்கும் நன்றி.
பல பேர் உங்களின் காலம், பணம், உங்களுடைய அன்பு, ஆதரவு, பல நிலைகளில் கைலாயத்திற்கு துணை புரிந்தீர்கள், புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. பல பேர் உடல் நலத்தை விசாரித்து உங்கள் அன்பையும், பரிவையும் வெளிப்படுத்தினீர்கள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி.
சொல்ல வேண்டியது நிறைய இருப்பதால் எதை முன்பு சொல்வது, எதை அடுத்து சொல்வது எனும் இந்த போராட்டத்தில் வார்த்தைகள் வெளிவராமல் அமைதியோடு இருக்கிறேன்.
சமாதி நிலை பற்றி ஒன்று சொல்கிறேன். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், நம் எல்லோருக்குள்ளேயும் காலாவதி தேதி இல்லாத, காலாவதி ஆகாத முழுமையான ஒன்று இருக்கின்றது. அந்த காலாவதி ஆகாத, காலாவதி தேதி இல்லாத நிரந்தரமான ஒன்றோடு ஒன்றிணைப்பது தான் சமாதி நிலை.
அழிகிற பல விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று உடல், மனம், உணர்ச்சி. இதெல்லாம் அழிவது. ஆனால் இதை எல்லாம் தாண்டி அழிவில்லாத ஒன்று நம்மில் இருக்கிறது. அதுதான் ஆன்மா. அந்த ஆன்மாவில் தான் பரமசிவ பரம்பொருள் பிரதிபலிக்கிறார்.
எனக்கு 3 வயதாக இருக்கும்போது என் குருமார்கள் மடியில் அமர வைத்து சதுர்மாசியத்தை தொடங்கி வைத்தார்கள். அன்றில் இருந்து இன்று வரை இந்து சமயம் சார்ந்த அனைத்து பயிற்சிகளையும் செய்திருக்கிறேன்.
அழியாத ஒன்றின் மீது ஈடுபாடு வரும், அதன் மீது ஈர்ப்பு வரும். அது வந்து விட்டாலே பரமசிவன் உங்களுக்குள் நிறைந்து விடுவார். அவருக்குள் நீங்கள் கரைந்து விடுவீர்கள். இதுதான் சமாதி நிலை. அதில் பல நிலைகள் உள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் குறைந்தபட்சம் 10 அல்லது 20 பேராக சமாதி நிலையை அனுபவமாக பார்த்தவர்கள் இருந்தார்கள். நான் வளர்ந்த திருவண்ணாமலையில் நிறைய பேர் இருந்தார்கள். 80-களில் நான் அங்கு இருந்த போதே சமாதி நிலையில் 100 பேர் இருந்தார்கள். இன்று கூட அங்கு சிலர் இருக்கிறார்கள்.
உலகத்தின் பல பாகங்களில் இருந்து ஞான போதகரை பிடித்து இழுத்து வா என்று அழைத்து உலகத்திற்கு தந்து கொண்டிருப்பவர் அண்ணாமலையான். ஒரு தலைமுறைக்கு முன்பு கூட இந்த சமாதி நிலை என்பது வாழ்க்கை முறையாக இருந்தது. பரமசிவன் பேரருளால் அது மீண்டும் வாழ்க்கை முறையாக மாறும்.
அந்த திருப்பணி தான் கைலாசத்தின் முதல் திருப்பணி. நவராத்திரி, விஜயதசமி வரை அடுத்த 4 மாதங்கள் இதில் கவனம் செலுத்துவோம்.
ஏற்கனவே லட்சக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு பெங்களூரு ஆதி கைலாச விடுதியில் உள்ளது. அதை மற்றவர்களுக்கு இலவசமாக அளியுங்கள்.
பெரும் ஆன்மீக கடமைகள் காத்திருக்கின்றன. உலகத்திற்கு நாம் செய்ய வேண்டிய நற்பணிகள் அதிகம் இருக்கிறது.
திடீரென கண்ணை திறந்து பார்த்தால் 3 மாதம் கழித்து உலகம் மொத்தமாக மாறி இருக்கிறது. நிறைய சொல்லலாம். ஏப்ரல் 13-ந் தேதி முதல் ஜூலை 13-ந் தேதி வரை நிறைய நடந்துள்ளது. அது உங்களுக்கு 3 மாதம். எனக்கு ஒரு யுகம்.
கடந்த 3 மாதத்தில் எனது உடல், மூளை அனைத்தும் மாறி இருக்கிறது. இனிமேல் என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை. இனி வரும் நாட்களில் நான் சொல்ல வேண்டியதை சொல்கிறேன்.
பரமசிவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் 10 ஆயிரம் அடி எடுத்து வைப்பார் என்பது பழைய பழமொழி. ஆனால் புதிய உண்மை என்னவென்றால், அவர் உங்களை நோக்கி பில்லியன் கணக்கான படிகளை எடுக்கிறார். அப்போது தான் நீங்கள் அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பீர்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன், அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கம் மற்றும் முடிவுகள் ஆகியவற்றை பார்க்கும்போது இந்த 3 மாத கால இடைவெளியில் நடந்தது உங்களுக்கு புரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பரமசிவன் சக்திகளை வெளிப்படுத்துவது என்பது உயிரினங்களுக்கு புதிய இயல்பாக இருக்கும்.
- மனிதகுலத்திற்காக நான் சுமக்கும் உயிர்ப்பின் சக்தி புனிதமானது.
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தா உடல்நிலை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சையான தகவல்கள் வெளியானது.
உடனே அவர், நான் சமாதி நிலையில் இருக்கிறேன், விரைவில் மீண்டும் சத்சங்க உரையாற்றுவேன் என தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
அதன்பிறகு அவ்வப்போது தகவல்களை பதிவிட்டு வந்தார். சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவில், குருபூர்ணிமா நாளான ஜுலை 13-ந் தேதி மீண்டும் நேரில் தோன்றி தரிசனம் அளிக்க உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று அவர் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
நான், நாளை(13-ந் தேதி) இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறவிருக்கும் குரு பூர்ணிமா கொண்டாட்டத்திற்கு நேரடி சத்சங்கம் ஆற்றவும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கவும் இருக்கிறேன்.
சீடர்களின் பக்தர்களின் வாழ்வில் மட்டுமல்ல மானுட குலத்திற்கே மங்கலம் வழங்கப்போகும் இந்த குரு பூர்ணிமா தருணத்தில் நேரடியாக கைலாசத்தில் இருந்து பரமசிவன் அருளும் செய்தி இது.
பரமசிவன் சக்திகளை வெளிப்படுத்துவது என்பது உயிரினங்களுக்கு புதிய இயல்பாக இருக்கும். உங்கள் மைய உணர்வானது உயிர்ப்பு உடையது, அதற்கு எந்த காலாவதி தேதியும் கிடையாது. காலாவதியாகும் எதுவும் உங்கள் மையம் அல்ல, அது தற்காலிகமாக உங்களில் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அது ஒருபோதும் உங்களுக்கு மையமாக இருக்க முடியாது.
இந்த 3 மாத இடைநிறுத்த சமாதியானது (ஏப்ரல் 13-ந் தேதி முதல் - ஜூலை 13-ந்தேதி வரை) பிரபஞ்சத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய மற்றும் சிறந்த ஒரு நிகழ்வாகும்.
உங்கள் உயிர் இருப்பில் (சத்) பரமசிவத்துவம் முழுமையாக வெளிப்படுகிறது. இணை பிரபஞ்சங்கள் மற்றும் பன்முகங்களைப் பற்றிய உயர் சத்தியங்கள் அக விழிப்புற்ற மக்களுக்கு மேலும் மேலும் கிடைக்கப்பெறும்.
நிரம்பி, பொங்கித் ததும்பி வழியும் சாந்தியால் மூடப்பட்ட நிலையே சாந்திகலா ஆகும், அதாவது பரமசிவனின் நிர்விகல்ப சமாதி ஆகும். சாந்திகலாவுக்கு அப்பால் உள்ள சாந்த்யாதீத கலா என்பது பரமசிவனின் சகஜ சமாதி.
மனிதகுலத்திற்காக நான் சுமக்கும் உயிர்ப்பின் சக்தி புனிதமானது. எனது நோக்கமும் பணியும் உயிர்ப்பும் இம்மனித குலத்திற்கு செய்யக்கூடிய பெரும் பங்களிப்பானது, உன்னதமானது. கைலாசத்தின் நோக்கம், பணி மற்றும் உயிர்ப்புக்கான எனது தூய அன்பு உன்னதமானது.
கைலாசத்தின் நோக்கம், பணி மற்றும் உயிர்ப்பை நிஜம் ஆக்குவதற்காக எதையும் தியாகம் செய்ய சித்தமாய் இருக்கும் எனது வலிமை உன்னதமானது. இவை அனைத்தும் பரம சிவாவிடமிருந்து நான் பெற்ற பெரிய பரிசுகள்.
பரமசிவமே இந்த உடம்பின் வழியாக வெளிப்பட்டு கொண்டிருக்கிறார், மேலும் மேலும் ஆழமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பல நிலைகளில் ஆன்மீக ரசவாத செயல்முறை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த ரசவாத செயல்முறையின் மூலம் குறை சக்தியுடைய உலோகங்கள் உயர் சக்தியுடைய உலோகங்களாக மாற்றப்படுகின்றன.
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்போது அங்கு பரமசிவ கோவிலையும் நிர்மாணிக்க கைலாசா நிர்வாகமானது, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றத்திற்காகப் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறது.
இந்த மங்களகரமான குரு பூர்ணிமா நாளில் எனது குரு பரம்பரைக்கு என்னை அர்ப்பணித்து 42-வது சதுர்மாஸ்ய விரதத்தைத் தொடங்குகிறேன்.
வளப்படுத்தி மகிழுங்கள், பகிருங்கள், கொண்டாடுங்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
- கோவில் உள்ளே நுழையும் பொழுது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு பத்துமலை முருகன் மற்றும் நித்யானந்தா உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேதராப்பட்டு:
புதுவை குருமாம்பேட் பாண்லே பால் பண்ணை அருகே உள்ள தமிழக பகுதியான பெரம்பை ஐஸ்வர்யா நகரில் நித்யானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு கோவிலைக் கட்டி வந்தார்.
27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு இதற்கு பத்துமலை முருகன் கோவில் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்கிடையில் கோவில் உள்ளே நுழையும் பொழுது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு பத்துமலை முருகன் மற்றும் நித்யானந்தா உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை இருந்தது.
இதுகுறித்து கோவில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்ட போது இது சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர்.
ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்கவில்லை என்று கூறினர். பின்னர் கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்த பொழுது அவர் அறை முழுவதும் நித்யானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும் நித்யானந்தா புகைப்படத்தை ஓவியமாக தீட்டி வைத்திருப்பதும் என நிறைய புகைப்படங்கள் இருந்தது. ஏற்கனவே நித்யானந்தா படங்களை வைத்து அவர் பூஜித்து வந்ததும் தெரியவந்தது. பாதுகாப்பு பணிக்கு வந்த ஆரோவில் போலீசார் நித்யானந்தா சிலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
ஒரு சில பக்தர்கள் அந்த சிலையின் முன்னாடி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கும்பாபிஷேக அழைப்பிதழில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர் கே.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து பங்கேற்பார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கூறினர்.
நித்யானந்தா சீடர் முருகன் கோவில் கட்டி அங்கு 18 அடியில் நித்யானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கே.ஜி.எப். பட தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்க, ‘நாயகன் மீண்டும் வரார்’ என்ற பதிவுடன் உள்ள வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
- தனது உடல்நிலை பற்றி எந்த தகவல்களையும் பதிவிடாத அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக மட்டுமே தொடர்ந்து கூறி வந்தார்.
புதுடெல்லி:
சர்ச்சை சாமியார் நித்யானந்தா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சமாதி நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவில், உலக நன்மைக்காக சமாதி நிலையில் இருக்கிறேன். விரைவில் சத்சங்க உரையாற்றுவேன் என கூறப்பட்டிருந்தது.
நித்யானந்தா சமாதி நிலைக்கு சென்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், வருகிற 13-ந் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு, மீண்டும் நேரலையில் தோன்றி தரிசனம் தர இருப்பதாக சமூக வலைதளங்களில் அவரது சீடர்கள் வீடியோ வெளியிட்டு தகவல்களை பரப்பி வருகின்றனர்.
கே.ஜி.எப். பட தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்க, 'நாயகன் மீண்டும் வரார்' என்ற பதிவுடன் உள்ள அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு நித்யானந்தா மரணம் அடைந்ததாக தவறான தகவல் பரவியதை தொடர்ந்து அவர் தனது புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் மெல்லிய தேகத்துடன் காட்சி அளித்த நித்யானந்தாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
எனினும் தனது உடல்நிலை பற்றி எந்த தகவல்களையும் பதிவிடாத அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக மட்டுமே தொடர்ந்து கூறி வந்தார்.
தற்போது அவர் மீண்டும் நேரலையில் தோன்றுவதாக கூறப்படுவதால் அவரது சமாதி நிலை முடிவுக்கு வரும் என தெரிகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் மீண்டும் நேரலையில் தோன்ற இருப்பது அவரது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நாகேஷின் மகள் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
- இதையடுத்து நாகேஷ் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் செய்தார்.
திருவண்ணாமலை:
பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ். இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் பிடதி பகுதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு சேவைகளை செய்து வந்துள்ளனர். 2019-ம் ஆண்டு நாகேஷ் அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினர்.
2-வது மகள் மட்டும் ஆசிரமத்தில் தங்கி தொடர்ந்து சேவை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வப்போது ஆசிரமத்திற்கு நேரில் சென்று நாகேஷ் அவரது மகளை பார்த்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது மகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அப்போது பிடதியில் ஆசிரமத்தை தொடர்பு கொண்டு தனது மகளை கண்பிக்குமாறு கேட்டுள்ளார். அந்த சமயத்தில் செல்போன் மூலம் வீடியோ காலில் நாகேஷ் பேசி வந்துள்ளார்.
அதன்பிறகு தனது மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து பிடதி ஆசிரமத்தில் உள்ள தனது மகளை மீட்டுத் தருமாறு கர்நாடக போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் செய்தார்.
ஆனால் பிடதி ஆசிரமத்தில் இருந்து நாகேஷின் மகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ததாக நாகேஷுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் தனது மகளை பல இடங்களில் தேடினார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் நாகேஷின் மகள் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நாகேஷ் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் நேற்று இரவு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாமாலினி தலைமையில் போலீசார் நித்யானந்தா ஆசிரமத்திற்கு நாகேஷ் மற்றும் அவரது மனைவியுடன் நேரில் சென்று சோதனை நடத்தினர். அங்கு அவரது மகள் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
- கைலாசாவுக்கு வர விரும்புபவர்கள் ஆஸ்திரேலியா வரை வந்தால் அங்கிருந்து இலவசமாக கைலாசாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் நித்யானந்தா கூறி இருந்தார்.
- கானாவில் ஏராளமான பழங்குடிகள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடிய நித்யானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சர்வதேச போலீசார் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து அவரை தேடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்தார்.
அவர் ஆஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயர் சூட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை உறுதிபடுத்தும் வகையில், கைலாசாவுக்கு வர விரும்புபவர்கள் ஆஸ்திரேலியா வரை வந்தால் அங்கிருந்து இலவசமாக கைலாசாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் நித்யானந்தா கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சையான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மத்திய ஆப்பிரிக்கா நாடான கானாவில் உள்ள எப்புடு என்ற மாவட்டத்துடன் இரு நாட்டு உறவை மேம்படுத்துவதற்கான தொடக்க நிலையில் இருப்பதாக கைலாசா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
பழமையான கலாச்சாரம், இந்துக்களுக்கான முதல் நாடான கைலாசாவுடன் இரு தரப்பு உறவுகளில் மேம்படுத்துவது, கலாச்சார புரிதல், மத சுதந்திரம் மற்றும் பிற உரிமைகள், பசியை ஒழித்தல், இளைஞர்களுக்கான தலைமை, கல்வி, கல்வி உரிமை பரிமாற்றம், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு உள்ளிட்ட உறவுகளின் கீழ் கானாவில் உள்ள எப்புடு மாவட்டத்துடன் தொடக்க உறவில் இருக்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
கானாவில் ஏராளமான பழங்குடிகள் வசித்து வருகின்றனர். எப்புடு மாவட்டம் கானாவின் மத்திய பிராந்தியத்தில் உள்ள 22 மாவட்டங்களில் ஒன்றாகும். முதலில் இது 1988-ல் அப்போதைய பெரிய எப்புடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 2008-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு முனிசிபல் மாவட்ட சட்டமன்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது.
இதன் நகராட்சி மத்திய பிராந்தியத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
- உங்களது அனைவரின் நலனுக்காகவும், உலக நன்மைக்காகவும் மட்டுமே நான் நிர்விகல்ப சமாதியில் நிலைகொண்டுள்ளேன்.
- பிரம்மா கூட சமாதியில் இருந்தபடியே தான் படைப்புத் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தா உடல்நிலை பற்றி சர்ச்சை எழுந்ததும், அவர் நான் சமாதி நிலையில் இருக்கிறேன், விரைவில் மீண்டும் சத்சங்க உரையாற்றுவேன் என தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
அதன்பிறகு, சமாதி நிலையில் இருந்து நேரடியாக பேசுவதாக கூறி தொடர்ந்து பல்வேறு பதிவுகளை வெளிட்டு வருகிறார். அந்தவகையில் அவர் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
அன்பான பக்தர்களே, சீடர்களே மற்றும் கைலாச வாசிகளே,
உங்களது அனைவரின் நலனுக்காகவும், உலக நன்மைக்காகவும் மட்டுமே நான் நிர்விகல்ப சமாதியில் நிலைகொண்டுள்ளேன்.
ஏனென்றால் நான் அடைய வேண்டிய அனைத்தையும் வெகுகாலத்திற்கு முன்பே அடைந்துவிட்டேன், இனியும் எனக்காக என்று அடைய வேண்டியது எதுவுமே இல்லை.
நிர்விகல்ப சமாதியில் இருப்பதனால் எனது உடல், பரமசிவனின் சக்திகள் இந்தப் பூவுலகில் இறங்குவற்கான ஒரு பிரபஞ்ச விமான நிலையமாக இயங்கிக் கொண்டிருக்கிறது, நீங்கள் அனைவரும் அதை அனுபவமாகப் பெற்றுக் கொண்டாட வேண்டும் என்பதற்காக.
பிரம்மா கூட சமாதியில் இருந்தபடியே தான் படைப்புத் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.
மேன்மை மிக்க அனைத்து வெளிப்பாடுகளும் சமாதியில் நிலைகொள்ளுவதன் மூலம் மட்டுமே நிகழும்.
நீண்டகால சமாதியில் இருப்பதன் மூலம் இந்த முறை வெளிப்பட்ட பரமசிவனின் சில மேன்மைமிக்க சக்திகளைப் பற்றி பின்னர் விளக்குகிறேன்.
சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கையில், சாதி, இனம், பாலினம், நிறம் மற்றும் புவி சார்ந்த வாழ்விடம் என்று எந்தவித வித்தியாசமும் இல்லாமல், மின்சார சக்தியானது வெளிப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுவது போன்றே ஆத்ம (உயிர்) சக்தியும் வெளிப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
ஆத்மாவையும் (உயிர்) ஒரு சக்தியாக மின்காந்த ஆற்றல்கள் போன்று உபயோகிக்கும் ஒரு செயல் நுட்ப இயலை நான் வெற்றிகரமாக பரிணமிக்க செய்து இருக்கிறேன்.
மேலும் நிர்விகல்ப சமாதியில் நிலைகொள்வதனால் சக்திகளை வெளிப்படுத்துவதற்கான எனது உடலின் திறன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
எந்தவித முன் நிபந்தனையும் இன்றி இயங்கும் மின்சக்தி போன்ற ஒரு அமைப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் இப்போது வெற்றிகரமாக பரிணமிக்க செய்திருக்கும் இந்த அமைப்பு முறையானது இந்த முழு உலகிற்கும் பயன்மிக்கதாக இருக்கப் போகிறது. அது சக்தி, சக்தி நுகர்வு மற்றும் சக்தி வினியோகம் ஆகிய தளங்களில் புதிய புரட்சியை கொண்டு வரப்போகிறது.
பொறுமை என்பது செயலற்ற தன்மை அல்ல, ஆனால் இறுதிக்கட்ட ரசவாதம் நிகழ்வதற்கு தேவையான அனைத்து மூலப் பொருட்களையும் சேர்த்துவிட்டு, அது நிகழ்வதற்கு காத்திருக்கும் உற்சாக காத்திருப்பே பொறுமை.
நான் நிர்விகல்ப சமாதியில் இருக்கும்பொழுது, அந்த உச்ச அமைதியிலேயே சத்சங்கங்கள், நித்திய சத்சங்கங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
நான் உங்களுள் இருந்து உங்களுடன் இதை பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை எனது அனைத்து சீடர்களும் தெளிவாக காண்பீர்கள்.
நான் நிர்விகல்ப சமாதியில் செலவிடும் இந்த காலத்தை உங்கள் வாழ்க்கைக்காக நான் செலவழிக்கும் பயனுள்ள நேரமாக நான் கருதுகிறேன்.
ஏனென்றால் நான் நிர்விகல்ப சமாதியில் இருக்கும்போது, உங்கள் கேள்விகளுக்கு என்னால் நேரடியாக பதில் சொல்ல முடிகிறது, நீங்கள் கேட்கும் வரங்களை அருள முடிகிறது.
வளப்படுத்துங்கள், அனுபவித்துக் கொண்டாடுங்கள். பகிருங்கள், ஆனந்தத்துடன் கொண்டாடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொறுமை என்பது விரோதமான சூழ்நிலைகளையும், எதிர்மறையான நபர்களையும் நம் வாழ்வில் பொருத்தமற்றதாக ஆக்குகிறது.
- நீங்கள் பொறுமையாக இருக்கும்போது காலபைரவர், எதிர்வினையாற்ற தேவையில்லாத பெரும்பாலான சிக்கல்களை நீக்கி விடுவார்.
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தா உடல்நிலை பாதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவியது.
இதைத்தொடர்ந்து அவர், நான் இறக்கவில்லை, சமாதி நிலையில் இருக்கிறேன் என தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதன்பிறகும் அவரது உடல்நிலை குறித்து சர்ச்சைகள் ஓயவில்லை.
இந்நிலையில் அவர் வெளியிட்ட புதிய பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் சவிகல்ப சமாதியில் இருக்கும்போது இந்த கிரகத்தில் கைலாசத்தை மனப்பூர்வமாக வெளிப்படுத்துவது பற்றிய பெரிய உண்மைகள் எனக்குள் நடக்கிறது.
பல சமயங்களில் வாழ்க்கை என்று அழைக்கப்படும் தர்ம யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு பொறுமையே மிகவும் சக்தி வாய்ந்த உத்தி.
பொறுமையாக இருக்க உங்களுக்கு சக்தி இருந்தால் நீங்கள் உள்நோக்கி பார்த்தால் நீங்கள் இப்போது போராடிக் கொண்டிருக்கும் பல பிரச்சினைகளை தவிர்த்திருப்பீர்கள்.
நிர்வகல்ப சமாதி மற்றும் கட்டுக்கடங்காத பயிற்சியின் மூலம் உண்மையான மேலோட்டமான பிறழ்வு மற்றும் அதீத உணர்வு உலகம் முழுவதும் நிகழ்கிறது.
நிர்வகல்ப சமாதி உங்கள் பார்வையை மற்றும் விரிவுபடுத்துவதற்கான அளப்பரிய ஆற்றலைக்கொண்டு வருகிறது. பொறுமையாக இருப்பதே பரமசிவாவிடம் இருந்து நான் பெற்ற மிகப்பெரிய ஆசீர்வாதம்.
பல நேரங்களில் மக்கள் அமைதியின்மை, கோபம் மற்றும் வன்முறையால் முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள். மேலும் மற்றவர்களின் முட்டாள்தனத்திற்கு எதிர் வினையாற்றுகிறார்கள்.
எனது சொந்த அனுபவத்தில் நான் பலமுறை பார்த்திருக்கிறேன், பொறுமை என்பது விரோதமான சூழ்நிலைகளையும், எதிர்மறையான நபர்களையும் நம் வாழ்வில் பொருத்தமற்றதாக ஆக்குகிறது.
எனது பொறுமையின் சக்தி எப்படி என்பதை நீங்கள் மிக விரைவில் உணர்ந்து கொள்வீர்கள். எனது பொறுமையால் கைலாசாவில் சிறந்த ஆன்மிக வளர்ச்சிக்கான ஒரு தெளிவான ஆற்றல்மிக்க உத்தியை உருவாக்கி வருகிறேன்.
நீங்கள் பொறுமையாக இருக்கும்போது காலபைரவர், எதிர்வினையாற்ற தேவையில்லாத பெரும்பாலான சிக்கல்களை நீக்கி விடுவார்.
நான் எனது சீடர்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம் பொறுமை உங்களுக்குள் வெளிப்படும் சக்திவாய்ந்த உத்திகளில் ஒன்றாகும். இந்த தர்ம யுத்தமான வாழ்க்கையில் வெற்றி பெற நான் பல முறை பொறுமையை பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தினேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அன்பான சீடர்கள் மற்றும் கைலாசாவாசிகள் அனைவரையும் நான் விரும்புகிறேன்.
- பரமசிவா தன் குழந்தையை பாதுகாக்கும் தாய் கங்காருவை போன்றவர்.
நித்யானந்தா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் இன்னும் சமாதியில் இருந்தாலும் சீடர்கள் மூலம் உடல் மனமும், ஆன்மாவும் ஒரே நிலையில் செயல்படுகின்றன. எனது சீடர்களின் பதிவுகளை நான் மிகவும் அரிதாகவே பகிர்கிறேன்.
எனது அன்பான பக்தர்கள், அன்பான சீடர்கள் மற்றும் கைலாசாவாசிகள் அனைவரையும் நான் விரும்புகிறேன். அதிர்ஷ்டவசமாக பரமசிவனின் கருணையுடனும், உங்கள் எல்லா ஆதரவுடனும் நான் இந்த கைலாசாவை உருவாக்கினேன்.
எனது உடல்நிலை குறித்த வதந்திகள் மற்றும் அவதூறுகள், தாக்குதல்கள் அனைத்தையும் என் உடல்நிலையில் கொண்டு செல்ல அனுமதிக்காமல் நான் சமாதியில் இருக்க முடியும். எனது நீண்ட ஆயுளும், சுறுசுறுப்பான வாழ்க்கையும், எனது குரு அருணகிரியை மட்டுமே சார்ந்துள்ளது.
பரமசிவா நீண்ட மகிழ்ச்சியான, சுறுசுறுப்பான வாழ்க்கைக்காக திட்டமிடுவதாக தெரிகிறது. இன்னும் 200 வருடங்கள் இந்த உடலை நான் சுமப்பேன்.
அவர் என் உடலில் நிலைபெற்று உள் உறுப்புகளை சுறுசுறுப்பாக, ஆராக்கியமாகவும், நிர்வகல்ப சமாதி முதல், சகஜ சமாதி வரை செயல்படுவதையும் என்னால் பார்க்க முடிகிறது.
நான் 200 ஆண்டுகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழப்போகிறேன் என்று உறுதியாக நம்புகிறேன்.
பரமசிவா தன் குழந்தையை பாதுகாக்கும் தாய் கங்காருவை போன்றவர். அவர் என்னை சமாதியில் வைத்து, தன் உள்ளத்திலே வைத்து பாதுகாக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நித்யானந்தாவின் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? என்று கேட்டு அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.
- நித்யானந்தா தொடர்பாக கைலாசா உரிய விளக்கம் தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுடெல்லி:
சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவரது உடலில் என்ன பாதிப்பு என்று இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
சமீபத்தில் அவர் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து விரைவில் உடலில் குடியேறி சத்சங்க உரையாற்றுவேன் என கூறி இருந்தார்.
இந்நிலையில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைலாசாவில் நடந்த இந்த பூஜைகள் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரை இல்லாத நிலையில், நித்யானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது அவர் ஜீவசமாதி ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை அவரது தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நித்யானந்தா தரப்பினர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது.
சித்ரா நட்சத்திரம் என்பது பூமியில் ஸ்ரீபரம்ம சமாரின் செயல்பாடுகளை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் பூஜை. இது இந்து மதத்தின் உச்ச கடவுளின் நட்சத்திரம் ஆகும். அவர் தான் எல்லோருக்கும் கடவுள் என்பதால் அவரை வணங்க வேண்டும்.
அதன்படியே கைலாசாவில் அவரின் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறு பூஜை செய்யப்பட்டது. அவருக்கு இந்த நல்ல நாளில் எங்களின் மரியாதை வழங்கப்பட்டது என பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையே நித்யானந்தாவின் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? என்று கேட்டு அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக கைலாசா உரிய விளக்கம் தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- வருகிற பவுர்ணமிக்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
- நித்யானந்தா மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா திரும்ப உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
புதுடெல்லி:
வழக்குகளுக்கு பயந்து வெளிநாடு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அவர் மரணமடைந்ததாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. உடனே நித்யானந்தா அதற்கு மறுப்பு தெரிவித்தார். நான் சாகவில்லை, சமாதி நிலையில் இருக்கிறேன் என கூறினார்.
அதன்பிறகு அவர் வெளியிட்ட புதிய பதிவுகளில் உடல்நிலை தொடர்பான பல்வேறு தகவல்களை கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
பரமசிவனின் ஆசிகள், அன்புள்ள பக்தர்கள் மற்றும் அன்பான சீடர்கள், கைலாசாவாசிகள் நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன். மேலும் உங்கள் அனைவரையும் உள் இடத்தில் இணைக்கிறேன்.
மிக விரைவில் உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்கங்களை மேற்கொள்வேன். மேலும், உயர்ந்த கொள்கைகள் மற்றும் மகா கைலாசாவின் அசாதரணமான ஆற்றலை பகிர்ந்து கொள்வேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நித்யானந்தா மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா திரும்ப உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
வருகிற 14-ந் தேதி பவுர்ணமி வருகிறது. அதற்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேருவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்