search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எனது பொறுமையின் சக்தியை மிக விரைவில் உணர்வீர்கள்- நித்யானந்தா புதிய பதிவு
    X

    எனது பொறுமையின் சக்தியை மிக விரைவில் உணர்வீர்கள்- நித்யானந்தா புதிய பதிவு

    • பொறுமை என்பது விரோதமான சூழ்நிலைகளையும், எதிர்மறையான நபர்களையும் நம் வாழ்வில் பொருத்தமற்றதாக ஆக்குகிறது.
    • நீங்கள் பொறுமையாக இருக்கும்போது காலபைரவர், எதிர்வினையாற்ற தேவையில்லாத பெரும்பாலான சிக்கல்களை நீக்கி விடுவார்.

    புதுடெல்லி:

    சாமியார் நித்யானந்தா உடல்நிலை பாதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவியது.

    இதைத்தொடர்ந்து அவர், நான் இறக்கவில்லை, சமாதி நிலையில் இருக்கிறேன் என தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதன்பிறகும் அவரது உடல்நிலை குறித்து சர்ச்சைகள் ஓயவில்லை.

    இந்நிலையில் அவர் வெளியிட்ட புதிய பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் சவிகல்ப சமாதியில் இருக்கும்போது இந்த கிரகத்தில் கைலாசத்தை மனப்பூர்வமாக வெளிப்படுத்துவது பற்றிய பெரிய உண்மைகள் எனக்குள் நடக்கிறது.

    பல சமயங்களில் வாழ்க்கை என்று அழைக்கப்படும் தர்ம யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு பொறுமையே மிகவும் சக்தி வாய்ந்த உத்தி.

    பொறுமையாக இருக்க உங்களுக்கு சக்தி இருந்தால் நீங்கள் உள்நோக்கி பார்த்தால் நீங்கள் இப்போது போராடிக் கொண்டிருக்கும் பல பிரச்சினைகளை தவிர்த்திருப்பீர்கள்.

    நிர்வகல்ப சமாதி மற்றும் கட்டுக்கடங்காத பயிற்சியின் மூலம் உண்மையான மேலோட்டமான பிறழ்வு மற்றும் அதீத உணர்வு உலகம் முழுவதும் நிகழ்கிறது.

    நிர்வகல்ப சமாதி உங்கள் பார்வையை மற்றும் விரிவுபடுத்துவதற்கான அளப்பரிய ஆற்றலைக்கொண்டு வருகிறது. பொறுமையாக இருப்பதே பரமசிவாவிடம் இருந்து நான் பெற்ற மிகப்பெரிய ஆசீர்வாதம்.

    பல நேரங்களில் மக்கள் அமைதியின்மை, கோபம் மற்றும் வன்முறையால் முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள். மேலும் மற்றவர்களின் முட்டாள்தனத்திற்கு எதிர் வினையாற்றுகிறார்கள்.

    எனது சொந்த அனுபவத்தில் நான் பலமுறை பார்த்திருக்கிறேன், பொறுமை என்பது விரோதமான சூழ்நிலைகளையும், எதிர்மறையான நபர்களையும் நம் வாழ்வில் பொருத்தமற்றதாக ஆக்குகிறது.

    எனது பொறுமையின் சக்தி எப்படி என்பதை நீங்கள் மிக விரைவில் உணர்ந்து கொள்வீர்கள். எனது பொறுமையால் கைலாசாவில் சிறந்த ஆன்மிக வளர்ச்சிக்கான ஒரு தெளிவான ஆற்றல்மிக்க உத்தியை உருவாக்கி வருகிறேன்.

    நீங்கள் பொறுமையாக இருக்கும்போது காலபைரவர், எதிர்வினையாற்ற தேவையில்லாத பெரும்பாலான சிக்கல்களை நீக்கி விடுவார்.

    நான் எனது சீடர்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம் பொறுமை உங்களுக்குள் வெளிப்படும் சக்திவாய்ந்த உத்திகளில் ஒன்றாகும். இந்த தர்ம யுத்தமான வாழ்க்கையில் வெற்றி பெற நான் பல முறை பொறுமையை பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தினேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×