search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nehru MLA"

    • உருளையன்பேட்டை தொகுதிட்பட்ட பகுதிகளில் மின்துறை மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் புதிய மின் மாற்றிகள் அமைத்தல், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிட்பட்ட பகுதிகளில் மின்துறை மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், ஸ்ரீதர், ராஜேஷ் சென்னிஹியால், செயற்பொறியாளர்கள் கனியமுது, செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் கண்ணன், திலகராஜ், ஜானகிதேவி, இளநிலை பொறியாளர்கள் கார்த்தி கேயன், அச்சிதானந்தம், சுரேஷ், சந்திரசேகர் மற்றும் மின்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனையின் போது தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளான புதைவிட மின் கேபிள்கள் அமைப்பது, அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் புதிய மின் மாற்றிகள் அமைத்தல், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    • பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான ரத்ததான முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

    முகாமிற்கு டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியை நேரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், டாக்டர் ரத்னவேல் காமராஜன், ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பாளர் மற்றும் டாக்டர்கள் வடிவேல், ரோஷினி, மதன் மற்றும் உதவும் பேரியக்கம் நிறுவனர் புதுவை குமார் கலந்து கொண்டனர் முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்கள் சமூக சேவகர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தும் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாண வர்கள் செய்திருந்தனர்.

    • ரூ. 50 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு மூலம் கல்வி மையம் மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டப்பட உள்ளது.
    • நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை கோவிந்தசாலை பிரியதர்ஷினி நகர் கண்டாக்டர் தோட்டம் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு மூலம் கல்வி மையம் மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டப்பட உள்ளது.

    இதற்கான பூமி பூஜை விழா கண்டக்டர் தோட்டம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் நடந்தது.நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் சிறப்பு பிரிவு செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் உதயகுமார் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிககள் பங்கேற்றனர்.

    • புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ. நேரு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • புதுவை நகராட்சி வாய்க்கால்களை தூர்வாருதல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதி–களில் நகராட்சி மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ. நேரு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    உருளையன்பேட்டை தொகுதியில் நடைபெற வேண்டிய வேலைகள், பகத்சிங் வீதி மேம்படுத்துதல், சவரி ராயலு வீதியில் புதிய சிமெண்ட் சாலை அமைத்தல், போத்தீஸ் பக்கத்து வீதி மேம்படுத்தும் பணிகள், மழைக்காலத்திற்குள் புதுவை நகராட்சி வாய்க்கால்களை தூர்வா–ருதல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், நகராட்சி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் ஞானசேகர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை நகர பகுதியில் ஏற்படும் மின்தடை பற்றி நான் பலமுறை தங்கள் துறைக்கு கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை தெரிவித்தும் இதற்கு தீர்வு இல்லாத நிலை நீடித்து வருகிறது.
    • குறிப்பாக ஒரு மணி நேரம் மழை பெய்தால் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு கொசு கடிக்கு ஆளாகி பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் நேரு எம்.எல்.ஏ. அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை நகர பகுதியில் ஏற்படும் மின்தடை பற்றி நான் பலமுறை தங்கள் துறைக்கு கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை தெரிவித்தும் இதற்கு தீர்வு இல்லாத நிலை நீடித்து வருகிறது. ஆனால் மின்சார கட்டணம் மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    நகரின் மத்தியில் அமைந்திருக்கும் உருளை யன்பேட்டை தொகுதியில் போதுமான மின்கட்ட மைப்பை ஏற்படுத்தாததால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    குறிப்பாக ஒரு மணி நேரம் மழை பெய்தால் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு கொசு கடிக்கு ஆளாகி பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.

    அதுவும் இரவு நேரத்தில் மின்தடை அதிகளவில் ஏற்படுவதால் மின்விசிறி பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இதனால் கொசு கடிக்கு ஆளாகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது தங்கள் துறையில் வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிகிறது. இது நீடித்தால் பொதுமக்கள் கொந்த ளிக்கும் நிலை ஏற்படும். ஆகையால் மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு நுகர்வோர்க்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும்.

    அப்படியில்லை யென்றால் பாதிப்புக்கு ள்ளாகி வரும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    • நகராட்சி அதிகாரிகளுடன் தொகுதி எம்.எல்.ஏ. நேரு, தனது அலுவலகத்தில் ஆலோ சனை மேற்கொண்டார்.
    • தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் மற்றும் தொடங்கப்பட்ட பணிகள் எப்போது

    புதுச்சேரி:

    புதுவை உருளையன் பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் தொகுதி எம்.எல்.ஏ. நேரு, தனது அலுவலகத்தில் ஆலோ சனை மேற்கொண்டார்.

    ஆலோசனையில் தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் மற்றும் தொடங்கப்பட்ட பணிகள் எப்போது முடிக்கப்படும் எனவும் ஆலோசனை மேற்கொண்டனர்.

    ஆலோசனையில் புதுவை நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் ஞானசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • புதுவை சுப்பராய பிள்ளை சத்திரம் நகர் அம்மன் கோவில் வீதியுள்ள உள்ள அரசடி புற்றுமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது.
    • உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சுப்பராய பிள்ளை சத்திரம் நகர் அம்மன் கோவில் வீதியுள்ள உள்ள அரசடி புற்றுமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது.

    மலர் மாலை, மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஆலய நிர்வாகிகளான ஜெயக்குமார், வித்யாபதி, கதிர் பாலசுப்பிரமணியம், அன்பழகன், ராஜசேகரன், ஆனந்த், மணி, மனோகரன், பன்னீர்செல்வம், குமரவேல்,பரமேஸ்வரி, கங்காதரன், அப்பகுதியை சேர்ந்த பாலு, அன்பழகன், ராஜா, சேவியர், ஜோதிகுமார், இஸ்மாயில், லிகோரின், அலெக்ஸ், அசோக், மகேஷ், சூர்யா, ரஞ்சித், மோகன், ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×