search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தடையில்லா மின்சாரம் கிடைக்க செய்ய வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. மனு
    X

    மின்துறை பொறியாளரிடம் நேரு எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

    தடையில்லா மின்சாரம் கிடைக்க செய்ய வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. மனு

    • புதுவை நகர பகுதியில் ஏற்படும் மின்தடை பற்றி நான் பலமுறை தங்கள் துறைக்கு கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை தெரிவித்தும் இதற்கு தீர்வு இல்லாத நிலை நீடித்து வருகிறது.
    • குறிப்பாக ஒரு மணி நேரம் மழை பெய்தால் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு கொசு கடிக்கு ஆளாகி பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் நேரு எம்.எல்.ஏ. அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை நகர பகுதியில் ஏற்படும் மின்தடை பற்றி நான் பலமுறை தங்கள் துறைக்கு கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை தெரிவித்தும் இதற்கு தீர்வு இல்லாத நிலை நீடித்து வருகிறது. ஆனால் மின்சார கட்டணம் மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    நகரின் மத்தியில் அமைந்திருக்கும் உருளை யன்பேட்டை தொகுதியில் போதுமான மின்கட்ட மைப்பை ஏற்படுத்தாததால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    குறிப்பாக ஒரு மணி நேரம் மழை பெய்தால் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு கொசு கடிக்கு ஆளாகி பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.

    அதுவும் இரவு நேரத்தில் மின்தடை அதிகளவில் ஏற்படுவதால் மின்விசிறி பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இதனால் கொசு கடிக்கு ஆளாகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது தங்கள் துறையில் வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிகிறது. இது நீடித்தால் பொதுமக்கள் கொந்த ளிக்கும் நிலை ஏற்படும். ஆகையால் மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு நுகர்வோர்க்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும்.

    அப்படியில்லை யென்றால் பாதிப்புக்கு ள்ளாகி வரும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×