search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narayanasamy"

    • மத்திய அரசு மாநில அரசுக்கு நிதியை வாரிவழங்கியது. எவ்வித சிரமும் இல்லாமல் ஆட்சி நடந்தது.
    • விதி முறைகளுக்கு உட்பட்டுதான் காங்கிரஸ் அரசு செயல்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம்  கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரடியாக என்னை விமர்சனம் செய்துள்ளார். அவர் முதல்-அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளார்.

     மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் வளர்ச்சி திட்டங்கள் விரைவாக நடந்தன. கவர்னர்கள் ஆளும் அரசுக்கு ஒத்துழைப்பு தந்தனர். மத்திய அரசு மாநில அரசுக்கு நிதியை வாரிவழங்கியது. எவ்வித சிரமும் இல்லாமல் ஆட்சி நடந்தது.

    கடந்த 2016-ல் காங்கிரஸ் அரசு பதவியேற்கும் முன்பு கவர்னர் கிரண்பேடி பொறுப்பேற்று விதிமுறைகளை மீறி செயல்பட ஆரம்பித்தார். அதனால் நீதிமன்றத்தை நாடினோம். சென்னை உயர்நீதி மன்றத்தில் தற்போதைய அமைச்சர் லட்சுமி நாராயணன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை வக்கீலான முதல்-அமைச்சர் ரங்கசாமி படித்து பார்க்கவேண்டும். துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரமில்லை என்பது புரியும்.

    நிர்வாகம் திரைமறைவில் நடத்த வேண்டுமா? முதல்-அமைச்சருக்கு நிர்வாகமே தெரியாது. நிர்வாக சீர்கேடு பற்றி அவர் எங்களை குற்றம்சாட்டுகிறார். விதி முறைகளுக்கு உட்பட்டுதான் காங்கிரஸ் அரசு செயல்பட்டது. தற்போது நிர்வாக முறைகேடுகள் நடக்கிறது.

     ரங்கசாமி நிர்வாகத்தில் புலி அல்ல. அதிகாரிகள் தயாரிக்கும் கோப்புகளுக்கு கையெழுத்து போடு–பவர்தான். தனது அதி காரத்தை செலுத்தாமல் என்னை குறைகூறுவதை ரங்கசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். கிரண்பேடி தொல்லையையும் மீறி திட்டங்களை நிறைவேற்றி னோம். தற்போது அண்ணன்- தங்கை என்று கூறிய நிலையில் திட்டங்கள் தடைப்படுவது ஏன்.?மாநிலஅந்தஸ்து, மத்திய நிதி கமிஷனில் புதுவையை சேர்ப்பது உள்ளிட்ட ரங்கசாமி யின் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகி யும் செயல்படுத்தவில்லை. ஒன்று கூட நடக்காததை சுட்டிக்காட்டி கேட்கிறோம். ரங்கசாமி கோபப்படுவதில் அர்த்தமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு திட்டத்தின் அறிவிப்பு செயல் வடிவம் பெற குறைந்தது 3 மாத காலமாவது ஆகும். அதுவரை தாக்குப் பிடிக்க முடியாமல் நாராயணசாமி இந்த திட்டத்துக்கு ஏது பணம், எங்கிருந்து வரும்?
    • முதல்-அமைச்சரை பார்த்து சின்ன மோடி என்று சொல்வது பெருமைக்குரிய விஷயம் தான்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    மக்களுக்கு நன்மை பயக்கும் கியாஸ் மானியம், குடும்ப தலைவிக்கு மானியம், மாதாந்திர நிதி உதவி போன்ற திட்டங்களின் பயன் மக்களை சென்றடைய கூடாது என்கின்ற தனிமனித விரக்தியில் தவறான கருத்துக்களை நாராயணசாமி பரப்புகிறார்.

    ஒரு திட்டத்தின் அறிவிப்பு செயல் வடிவம் பெற குறைந்தது 3 மாத காலமாவது ஆகும். அதுவரை தாக்குப் பிடிக்க முடியாமல் நாராயணசாமி இந்த திட்டத்துக்கு ஏது பணம், எங்கிருந்து வரும்? எப்படி வரும்? என ஒன்றும் புரியாதவர் கேள்வி எழுப்புகிறார்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த நிதி செயலர், தலைமைச் செயலாளர், கவர்னர் ஆகியோருடைய அனுமதி பெற்று தான் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்பதை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமிக்கு புரியாமல் இருப்பது நகைப்பாக உள்ளது.

    முதல்-அமைச்சரை பார்த்து சின்ன மோடி என்று சொல்வது பெருமைக்குரிய விஷயம் தான். கடந்த ஆட்சியின் போது கவர்னருக்கு எதிராக ஒரு வாரத்துக்கு மேலாக வீதியில் அமர்ந்து பகோடாவும், மீன், எறா பஜ்ஜியும் சுட்டவருக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது போல் உள்ளது.

    முதல்-அமைச்சராக இருந்த போது அப்போதைய பெண் கவர்னருக்கு எதிராக வீதியில் அமர்ந்து கொண்டு பஜ்ஜி சுட்டவருக்கு வேறு எதைப்பற்றி உதாரணமாக சொல்ல முடியும். அரசியல் விமர்சனங்கள் என்பது உயரிய பண்புள்ளதாக இருக்க வேண்டும். அதை புரிந்து நடப்பது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமிக்கு அழகாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாகூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து கன்னியக் கோவில், பச்சைவாழியம்மன் கோவில் அருகே சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் பஞ்சாயத்து தராஜ் அமைப்பு தலைவர் கோவிந்தராஜ், எஸ்.சி. பிரிவு இணை செயலர் அன்பழகன், விவசாய அணி தலைவர் அரிகிருஷ்ணன், மீனவரணி போத்திராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து கன்னியக் கோவில், பச்சைவாழியம்மன் கோவில் அருகே சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

    பொதுச்செயலாளர் மணவாளன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் கோபு முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், விஜயவேணி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் பஞ்சாயத்து தராஜ் அமைப்பு தலைவர் கோவிந்தராஜ், எஸ்.சி. பிரிவு இணை செயலர் அன்பழகன், விவசாய அணி தலைவர் அரிகிருஷ்ணன், மீனவரணி போத்திராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    சிலிண்டருக்கு ரூ.300 மானியம் அறிவித்துள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி, பட்ஜெட்டில் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. புதுவையில் மதுக்கடைகளை திறக்க வேண்டாம். குடித்துவிட்டு பலர் இறப்பதால் பெண்கள் அதிகமாகி, ஆண்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சொன்னால், வேலைவாய்ப்பு இல்லை.

    நடன பார் திறந்தால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என ரங்கசாமி கூறுகிறார். பிரதமர் பெரிய மோடி என்றால், ரங்கசாமி சின்ன மோடி. வேலை இல்லாத இளைஞர்கள் பக்கோடா சுடுங்கள் என்றார் மோடி. ரங்கசாமி படித்த இளைஞர்களை மதுக்கடையில் எச்சில் கிளாசை கழுவுங்கள் என்கிறார். ரங்கசாமி ஆட்சியில் சட்ட-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    போதைப் பொருட்களான கஞ்சா, அபின் தாராளமாக கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிந்து, மதுபோதையில் நள்ளிரவில் ஆட்டம் போடுகின்றனர். மக்களின் நிம்மதியை கெடுத்துவிட்டு சுற்றுலாவை வளர்க்கப்போவதாக ரங்கசாமி கூறுகிறார்.

    இரவில் போடும் ஆட்டத்தால் மக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை.ரங்கசாமி ஆட்சியில் வளர்ச்சி இல்லை. எல்லாவற்றையும் அறிவிப்பார், ஒன்றையும் செய்ய மாட்டார். மக்களை ஏமாற்றி முதல அமைச்சர் ஆகியுள்ளார்.

    அவர் போலி சித்தர். மக்களை ஏமாற்றும் சித்தர். ரங்கசாமி ஆட்சியில் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. புதுவையில் உள்ள இடங்களை எம்.எல்.ஏ.க்கள் பட்டா போட்டுக்கொள்கின்றனர்.

    இப்படி ஊழல் நிறைந்த மக்களை மதிக்காத ஆட்சி நடக்கிறது. இதற்கு முடிவு கட்ட காங்கிரசார் ஒன்றிணைந்து செயல்பட ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவையில் மது ஆறு ஓடுவதற்கு போலி சித்தர் ரங்கசாமிதான் காரணம். ஆன்மிக பூமியை தனது சுயநலத்திற்காக போதை பூமியாக மாற்றியுள்ளார்.
    • தற்போது ஒஸ்ட் புதுவையாக மாறியுள்ளது. அதிகாலை வரை மதுபார்களில் குத்தாட்டம் போடுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுவையில் மது ஆறு ஓடுவதற்கு போலி சித்தர் ரங்கசாமிதான் காரணம். ஆன்மிக பூமியை தனது சுயநலத்திற்காக போதை பூமியாக மாற்றியுள்ளார். சாலைகளில் பொதுமக்கள் நடக்கவே பயப்படும் சூழல் உருவாகியுள்ளது.

    பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் மது பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்- அமைச்சரை வந்து சந்திக்கின்றனர்.

    அப்போது, இன்னும் 100 மதுபார் வரும் என ஆணவத்தோடு ரங்கசாமி கூறுகிறார். வருமானம் வேண்டும் என்பதற்காக மதுபார்களுக்கு அனுமதி தருவதாகவும் அவர் கூறுகிறார்.

    மது வருவாயில் ஒரு ஆட்சி நடக்க வேண்டுமா? ஏற்கனவே 400 மதுபார்கள் புதுவையில் இருந்தது. தற்போது 900 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 40 பார்களுக்கு அனுமதி வழங்கும் கோப்பு முதல்- அமைச்சர் அலுவலகத்தில் உள்ளது.

    ரூ.20 லட்சம் கொடுத்தால் நள்ளிரவு நடன பாருக்கு அனுமதி, ரூ.15 லட்சம் கொடுத்தால் விடுதிகளில் பார் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என பிரதமர் கூறினார். தற்போது ஒஸ்ட் புதுவையாக மாறியுள்ளது. அதிகாலை வரை மதுபார்களில் குத்தாட்டம் போடுகின்றனர். அதற்கு பிறகும் சாலைகளில் வந்து நடனமாடுகின்றனர்.

    சுற்றுலா பயணிகளை கவர பீர் பஸ் விடுகிறார். அதில் குடித்துக்கொண்டே புதுவைக்கு வந்து குடித்தபடியே திரும்பி செல்வார்களாம். காவல்துறையை பொறுத்தவரை மாமூல் கொடுத்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. முதல்-அமைச்சருக்கு அவரின் நாற்காலி இருந்தால் போதும். போதை கும்பலால் இறந்த என்ஜினியர் என்ன கனவு கண்டிருப்பார்?

    அவர் ஒரே பிள்ளை. அவரது தாயார் இழப்புக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமிதான் பொறுப்பேற்க வேண்டும். மதுபார் மட்டுமின்றி, 6 மதுபான தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்போகிறார்களாம். 2 ஆண்டு ஆட்சியில் 500 மதுபார் கூடியுள்ளது.

    இன்னும் இந்த ஆட்சி நீடித்தால் இன்னும் 500 பார் புதிதாக வரும். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? இளைய சமுதாயத்தை அழிக்க ரங்கசாமி முற்பட்டுள்ளார்.ரெஸ்டோ பார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை செல்லவும் தயங்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அதானிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றால் விசாரணை வைக்க ஏன் மோடி தயங்குகிறார்.
    • புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசில் ஜிப்மருக்கு 50 ஏக்கர் நிலத்தை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்துக்காக ஒதுக்கி தந்தோம்.

    புதுச்சேரி:

    முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறிய தாவது:-

    அதானிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றால் விசாரணை வைக்க ஏன் மோடி தயங்குகிறார். இந்திய நாடாளுமன்றம் ஒரு நாள் கூட நடக்கவில்லை. இது ஜனநாயக படுகொலை. மோடி அதானி விவகாரத்தில் பதில் தர வேண்டும். விசாரணை வைக்கும் வரை காங்கிரஸ் ஓயாது. போராட்டம் தொடரும்.

    புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசில் ஜிப்மருக்கு 50 ஏக்கர் நிலத்தை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்துக்காக ஒதுக்கி தந்தோம். இந்த பிரத்யேக மருத்துவமனை ரூ. 900 கோடியில் அமைய இருந்தது. இதற்காக நிலத்தை சேதராப்பட்டில் ஒதுக்கி தந்தோம். தற்போது அத்திட்டத்தை மத்திய அரசு வேறு மருத்துவமனைக்கு மாற்றி உள்ளது.

    தென்மாநிலங்களிலேயே முக்கியமாக அமைய இருந்த இந்த மையத்தை மாற்றி இருப்பது மூலம் புதுவையை மத்திய அரசு புறக்கணிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஜிப்மரில் அனைவருக்கும் இலவச சிகிச்சை தரப்பட்டது, மருந்து தட்டுப்பாடு இல்லை. சிறப்பாக செயல்பட்ட ஜிப்மர் தற்போது சீரழிந்து விட்டது. நோயாளிகள் அலைக்கழிக்கப் படுகின்றனர்.

    தற்போது உயர்சிகிச்சைக்கும் கட்டணம் விதித்துள்ளனர். இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

    புதுவை சட்டப்பேரவையில் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு என பல அறிவிப்புகளை முதல்- அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். அது வரவேற்க்கத்தக்கது. ஆனால் அதற்கான நிதி எங்கே உள்ளது. ஆண்டுக்கு ரூ. 700 கோடி தேவை. ஆனால் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

    இதை செய்யாமல் கோப்புகளை தயாரித்து அனுப்பும்போது தலைமை செயலாளர், செயலாளர்கள் விதிமீறி ஒப்புதல் தர மறுத்தால் அவர்கள் மீது பழிபோடுவது ரங்கசாமியின் வழக்கம். பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு சங்க ஊழியர்கள் போல் இவர்களையும் நடுத்தெருவில் ரங்கசாமி நிறுத்தப்போகிறார்.

    அவர் விளம்பர அரசியல் செய்வது எடுபடாது. ரேஷன் கடைகளை திறந்து மானிய விலையில் பொருட்களை தருவதாகக்கூறி விட்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தராதது ஏன்.? நான் எழுப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் ரங்கசாமி பேரவையில் வாயே திறக்கவில்லை.

    அதேபோல் புதுவையில் எத்திட்டத்திலும் பயன் அடையாத சிவப்பு ரேஷன் அட்டை வைத்துள்ள மகளிருக்கு ரூ. 1000 திட்ட விதிமுறைகளால் எந்த மகளிருக்கும் பயன் தராத வகையில் தவறான திட்டமாக உள்ளது.புதுவையில் பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    • மத்திய பா.ஜனதா அரசு பொதுத்துறை நிறுவனங்களை அதானி குடும்பத்துக்கு தாரை வார்ப்பதை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடந்தது.
    • பிரதமர் மோடி, அதானி உருவ படங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு நிலவியது.

    புதுச்சேரி:

    மத்திய பா.ஜனதா அரசு பொதுத்துறை நிறுவனங்களை அதானி குடும்பத்துக்கு தாரை வார்ப்பதை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடந்தது.

    வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை சதுக்கத்தில் தொடங்கிய ஊர்வலத்துக்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பி ரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ. வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கட்சியின் மூத்த துணைத்தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலன், கார்த்திகேயன், அனந்தராமன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, வக்கீல் அணி மருதுபாண்டியன், பொதுச்செயலாளர்கள் தனுசு, இளையராஜா, திருமுருகன், சங்கர், வேல்முருகன், மாவட்ட தலைவர்கள் வேல்முருகன், கோபி, முத்துராமன், பிசிசி உறுப்பினர்கள் ராஜாகுமார், செல்வநாதன், வட்டார தலைவர்கள் ஆறுமுகம், கிருஷ்ணராஜ், ஜெரால்ட், ராஜ்மோகன், ஏம்பலம் தொகுதி மோகன்தாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஊர்வலம் அண்ணாசாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக மாதா கோவில் வீதியை அடைந்தது. ஆம்பூர் சாலை அருகே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடுப்பை மீறி செல்ல முயன்றதால் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் காங்கிரசார் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரதமர் மோடி, அதானி உருவ படங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு நிலவியது.

    இதைத்தொடர்ந்து மகளிர் காங்கிரசார் எல்லைபிள்ளை சாவடியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ரெட்டியார்பாளையம் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    போராட்டத்தின் முடிவில் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு புதுவை பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. சம்பளம், ஓய்வூதியம், மின்சாரம் வாங்குவது உட்பட செலவுகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடி வருகிறது. மீதம் உள்ளது ரூ.2 ஆயிரத்து 600 கோடிதான். 3 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிலிண்டருக்கு ரூ.300 மானியம், இத்திட்டத்துக்கு மட்டும் ரூ.120 கோடி செலவாகும். பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கும் திட்டத்துக்கு எங்கிருந்து நிதி வரும்? இதற்கு ரூ.100 கோடி தேவைப்படும். ஏற்கனவே நிதி பற்றாக்குறை உள்ளது. இந்நேரத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த நிதி எங்கிருந்து வரும். இது ஏமாற்று பட்ஜெட், மாயாஜால பட்ஜெட்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் புரோக்கர்கள் மூலம் ஊழல் நடக்கிறது.
    • கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்கள் முடக்கப்ப ட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் மவுன ஆட்சி நடக்கிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் காங்கிரஸ் சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு நடைபயணத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் புரோக்கர்கள் மூலம் ஊழல் நடக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. பணியில் உள்ள பலர் வேலையிழக்கும் நிலையில் உள்ளனர். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் சுற்றுலா வளர்ச்சியடையும் என அரசு கூறியது.

    ஆனால் மாநிலத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி நடக்கிறது. புதுவையில் ரங்கசாமி கட்சி மக்களுக்கு விபூதி கொடுத்து ஏமாற்றும் கட்சியாக உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை. காரைக்காலிலும் எந்த வளர்ச்சியும் இல்லை.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்கள் முடக்கப்ப ட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் மவுன ஆட்சி நடக்கிறது. புதுவை மக்களை வஞ்சிக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
    • மத்திய பட்ஜெட் லோக்சபா தேர்தலை முன்வைத்து தயாரித்ததாக தெரிகிறது. பிரதமர் அறிவித்த விவசாய விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராய ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய பட்ஜெட் லோக்சபா தேர்தலை முன்வைத்து தயாரித்ததாக தெரிகிறது. பிரதமர் அறிவித்த விவசாய விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கு விதை, உர மானியம், இலவச மின் திட்டம் இல்லை. நெல், வாழை, கரும்பு விலையில் எந்த மாற்றமும் இல்லாத விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட். இதில் ரூ.13 லட்சம் கோடி வெளிசந்தையில் கடன் வாங்குவதாக உள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும்.

    நிதி பற்றாக்குறை 5.9 சவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இது பணவீக்கத்தை உருவாக்கி விலைவாசியை உயர்த்தும். நெடுஞ்சாலை துறைக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர். ரூ.4 லட்சம் கோடியில் நெடுஞ்சாலை துறை பணிகள் தொடங்கி கிடப்பில் உள்ளது.

    பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான எந்த முகாந்தரமும் இல்லை. பல எதிர் பார்ப்புகளோடு இருந்த அரசு ஊழியர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த பட்ஜெட் பணம் படைத்தோருக்கும், நாட்டில் உள்ள ஒரு சதவீத மிகப்பெரிய முதலாளிக்கும் தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நாட்டு மக்களை மத்திய அமைச்சர் ஏமாற்றியுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

    • நாடு முழுவதும் மாநில காங்கிரசார் பாதயாத்திரை நடத்த ராகுல்காந்தி எம்.பி. அறிவுறுத்தியுள்ளார். இதன்படி பாதயாத்திரை நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சார்பில் நடந்தது.
    • பாதயாத்திரை வாயிலாக மக்கள் குறைகளை ராகுல்காந்தி கேட்டு வருகிறார். வடமாநில ங்களில் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு இடையே கலவரத்தை உருவாக்கி நாட்டை பிரிக்கும் வேலை நடந்து வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் மாநில காங்கிரசார் பாதயாத்திரை நடத்த ராகுல்காந்தி எம்.பி. அறிவுறுத்தியுள்ளார்.

    இதன்படி பாதயாத்திரை நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சார்பில் நடந்தது.கூட்டத்திற்கு வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், நிர்வாகிகள் அய்யப்பன், நந்தா கலைவாணன், ராஜா, கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    பாதயாத்திரை வாயிலாக மக்கள் குறைகளை ராகுல்காந்தி கேட்டு வருகிறார். வடமாநில ங்களில் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு இடையே கலவரத்தை உருவாக்கி நாட்டை பிரிக்கும் வேலை நடந்து வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கும்போது சகோதரத்துவம், தனிமனித சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தினார். இவை தவிடுபொடியாகி வருகிறது.

    மத்திய பா.ஜனதா அரசு தங்களுக்கென தனி சட்டத்தை வகுத்துள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு அரசியல்தலைவர்களை பழிவாங்குகிறது. நாமும் பாதயாத்திரை சென்று மக்களை சந்திக்க வேண்டும். மாநில அந்தஸ்து வேண்டும் என முதல்-அமைச்சர் கூறுகிறார், பா.ஜனதா மாநில தலைவர் வேண்டாம் என்கிறார்.

    மத்திய அமைச்சர் நிர்மலாசீத்தாராமன், சிறப்பு மாநில அந்தஸ்து போதும் என்கிறார்.

    ஆளும் கூட்டணி கட்சிகளிடையே முரண்பாடு உள்ளது. ஊழல் நிறைந்த ரங்கசாமி ஆட்சியை இப்போதுதான் பார்க்கிறோம். அனைத்து முக்கிய சாலைகளிலும் மதுக்கடைகளை திறக்கின்றனர். புதுவை கலாச்சாரத்தையே ரங்கசாமி அழித்து வருகிறார்.

    காவல்துறை வேலைவாய்ப்பில் லஞ்சம், பத்திரப்பதிவில் லஞ்சம் என எல்லா இடத்திலும் லஞ்சம் தாண்ட வமாடுகிறது.

    ரேஷன்கடைகளை திறக்கவில்லை. பஞ்சாலைகள், கூட்டுறவு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. மக்களை பற்றி கவலைப்படாத முதல்-அமைச்சராக ரங்கசாமி உள்ளார். லாஸ்பேட்டை தொகுதியில் 2 நாட்கள் பாதயாத்திரையை சிறப்பாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக கவர்னர் ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். தற்போது சட்டப்பேரவையில் அரசை அவமதித்துள்ளார்.
    • அப்போது மாநில அரசுகள் சுதந்திரமாக செயல்படுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மதசார்பற்ற அணிகள் ஒருங்கிணைக்கும் பணியை ராகுல் செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாரா யணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னர் ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். தற்போது சட்டப்பேரவையில் அரசை அவமதித்துள்ளார். சொந்த கருத்தை திணிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை. அத்துடன் தேசியகீதம் இசைக்கும் முன் வெளியேறி அவமதிப்பு செய்துள்ளார். அரசியலமைப்பை அவமதிப்பு செய்துள்ளதால் பதவியிலிருந்து ரவி விலகவேண்டும்.

    இல்லாவிட்டால் குடியரசுத்தலைவர் இதில் தலையிட்டு அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும். ஒரு நிமிடம் கூட கவர்னர் பதவியில் இருக்க ரவி தகுதியற்றவர். மோடி அரசு தூக்கி எறியப்படும். அப்போது மாநில அரசுகள் சுதந்திரமாக செயல்படுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மதசார்பற்ற அணிகள் ஒருங்கிணைக்கும் பணியை ராகுல் செய்து வருகிறார். அதுபோல் நிதிஷ்குமார், சரத்பவார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    கவர்னர் ரவியின் சட்டப்பேரவை செயல்பாடு தமிழகத்தின் கறுப்பு நாள். புதுவையில் சாராய ஆறு ஓடுகிறது. ரெஸ்டோபார், நடனநிகழ்வு போன்றவற்றால் கலாச்சாரம் சீரழிந்து மக்கள் அவதியறுகின்றனர். தொடர்ந்து போராடுவோம். நீதிமன்றமும் செல்வோம்.

    கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் சரளமாக கிடைக்கிறது. தடை செய்யப்பட்ட போதைப் பொருள், பள்ளி, பஸ்நிலையம், கல்லூரி அருகே கிடைக்கிறது. இதில் ஒன்றை சாப்பிட்டால் 2 மணி நேரம் போதையாக இருக்கும் சூழலால் இளம் சிறார்கள் அடிமையாகின்றனர்.

    போதைப்பொருளை ஒழிப்போம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மாநாடு நடத்துகிறார். புதுவையில் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸில் போதைப்பொருள் கலாச்சாரத்தை அமித்ஷாவால் தடுக்க முடியவில்லை. செயல்படாத ஊழல் அரசாக புதுவை அரசு உள்ளது.

    பா.ஜனதாவுக்கு சென்றவர்கள் நடுரோட்டில் நிற்கின்றனர். அதில் ஓர் உதாரணம் ஏனாம் எம்.எல்.ஏ. அசோக். ஆளுங்கட்சிக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போராட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் நடத்துகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி உள்ளது. முதல்-அமைச்சரை விமர்சித்திருந்தால், போலீஸ் துறையை வைத்திருக்கும் பா.ஜனதா அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்காமல் போலியாக வேஷம் போடுகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுவை மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மக்கள் சந்திப்பு நடைபயணத்தை காங்கிரசார் நடத்த உள்ளனர்.
    • ரங்கசாமி பா.ஜனதா வுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் மாநில அந்தஸ்து பெறுவதுதான் என, தேர்தல் சமயத்தில் கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மக்கள் சந்திப்பு நடைபயணத்தை காங்கிரசார் நடத்த உள்ளனர்.

    இதற்கான ஆலோச னைக்கூட்டம் வள்ளலார் சாலையில் உள்ள தனியார் மகாலில் நடந்தது. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம்

    எம்.பி. முன்னிலை வகித்த னர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் அனுமந்த்ராவ் சிறப்புரையாற்றினார்.

    வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கள் கமலகண்ணன், கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், எம்.என்.ஆர். பாலன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    ரங்கசாமி பா.ஜனதா வுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் மாநில அந்தஸ்து பெறுவதுதான் என, தேர்தல் சமயத்தில் கூறினார். உண்மையில் மாநில அந்தஸ்து பெற ரங்கசாமி நினைத்திருந்தால் ஆட்சியில் அமர்ந்த 6 மாதங்களில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கட்சியினரை சந்தித்து பேசியிருக்க வேண்டும். டெல்லிக்கு சென்று புதுவைக்கு மாநில

    அந்தஸ்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி யிருக்க வேண்டும்.

    இதில் எதையாவது செய்தாரா? இல்லை. ஆனால் அவருக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ, கவர்னர் எப்போது கோப்புகளில் கையெழுத்து போடவில்லையோ, அப்போது மாநில அந்தஸ்து பற்றி பேசுகிறார். உண்மையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் பா.ஜனதாவை எதிர்த்து தெருவில் இறங்கி போராட ரங்கசாமிக்கு தைரியம் இருக்கிறதா?

    பள்ளிகள், கோவில்கள், குடியிருப்புகள் மத்தியில் ரெஸ்டோ பப், மதுபார்க ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளனர். அரசு சொத்துக்கள் தனியார் மயமாக்கும் வேலைகள் நடக்கிறது. இந்த அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் புதுவையில் போட்டி யிடவேண்டும். அவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றிபெற செய்ய வேண்டும். புதுவை மாநிலத்தில் அனைத்து கிராமங்களிலும் இந்த பாதையாத்திரையை 2 மாதம் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் மக்கள் சந்திப்பு யாத்திரை வருகிற 26-ந் தேதி முதல் மார்ச் 25-ந் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுவையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யாத்திரைக்கான புதுவை பொறுப்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான அனுமந்தராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    நம்முடைய கூட்டணிக்கு வர தயக்கம் காட்டியவர்கள் எல்லாம் ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தால் எங்களுடைய கட்சி ஆதரவு கொடுக்கும் என்று இன்று தானாக வருகின்ற சூழ்நிலையை அவரது பாதயாத்திரை உருவாக்கியுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. புதுவை முதலமைச்சர் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் என்று தேர்தல் நேரத்தில் சொன்னார்.

    வாக்குறுதி கொடுத்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.

    கோப்புகள் தூங்குகின்றன. அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ரங்கசாமி புலம்புகிறார். சூப்பர் முதலமைச்சர் கவர்னர் தமிழிசை. டம்மி முதலமைச்சர் ரங்கசாமி. இதுதான் புதுவையின் நிலை சபாநாயகர், உள்துறை அமைச்சர், குடிமைபொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.ஜனதா தலைவர்கள் உள்பட பல முதலமைச்சர்கள் இந்த ஆட்சியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அலங்கோலமான ஆட்சி புதுவையில் நடக்கிறது. இந்த ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

    புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.

    இந்த அவலத்தையும் மோடி அரசின் அவலங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் புதுவையில் போட்டியிட வேண்டும் அவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×