என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "nagar rain"
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நீடித்தது. இதனால் குடிநீருக்கு கூட மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் அணைகளின் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்துள்ளது. அதன்பின்னர் மழை பெய்ய வில்லை. எனவே தென்மேற்கு பருவமழை பெய்து விவசாயம் செழிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தென்மேற்கு பருவமழையும் கைகொடுக்க வில்லை. கடந்த 16-ந் தேதி கஜாபுயல் வீசிய தினத்தன்று கடுமையான மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. அதன்பின்னர் மழை பெய்ய வில்லை. தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
கொடைக்கானலில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தபடி காணப்பட்டது. இதேபோல பழனி, நத்தம், வத்தலக்குண்டு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்தது. #Rain
திண்டுக்கல்:
திண்டுக்கல் பகுதியில் பொதுவாகவே வறட்சி அதிக அளவில் நிலவி வருகிறது. விவசாயத்திற்கு மட்டுமல்லாது குடிநீருக்காக பொதுமக்கள் காலி குடங்களுடன் அலைந்து திரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. கஜா புயலின் தாக்கத்தினால் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
தற்போது வங்க கடலில் ஏற்பட்டுள்ள புதிய புயல் சின்னத்தால் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் தொடங்கிய மழை திண்டுக்கல் நகரில் விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளான கொடைக்கானல், பழனி, நத்தம், செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் திண்டுக்கல் நகரில் 14.10 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. கொடைக்கானல் 2.8, பழனி 2, நத்தம் 21.5, சத்திரப்பட்டி 10, காமாட்சிபுரம் 0.7, கொடைக்கானல் போட் கிளப் 7.5.மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 58.80 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. சராசரியாக 5.88 மி.மீ. மழை பெய்துள்ளது.
இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்பவர்கள், மாணவ- மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். மழையுடன் குளிர்ந்த காற்று வீசுவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிரமத்திற் குள்ளானார்கள். பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்