search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "naganathar"

    • நாகநாதர் கோவில் குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும்.
    • இக்கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.

    நாகேஸ்வரர் கோவில் அல்லது நாகநாதர் கோவில் என்று அழைக்கப்படும் கோவில், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும். சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.

    புராணக் கதை

    சிவபுராணத்தில் இத்தலம் பற்றிய கதை ஒன்று உண்டு. இதன்படி, சுப்பிரியா என்னும் சிவபக்தை ஒருத்தியைத் தாருகா என்னும் அசுரன் ஒருவன் பிடித்து தாருகாவனம் என்னும் இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தானாம். பாம்புகளின் நகரமான இதற்கு தாருகாவே மன்னன். சுப்பிரியாவின் வேண்டுகோளின்படி கைதிகள் எல்லோரும் சிவனைக் குறித்த மந்திரங்களைச் சொல்லி வணங்கினர். அங்கே தோன்றிய சிவன் தாருகாவைக் கொன்று கைதிகளை விடுவித்தாராம். அன்று தொட்டுச் சிவன் ஜோதிர்லிங்க வடிவில் இத்தலத்தில் இருக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தாருகா இறக்கும் முன் இவ்விடம் தன்னுடைய பெயரில் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அமைய இவ்விடத்துக்கு நாகநாத் என்னும் பெயர் வழங்கி வருவதாக நம்பப்படுகிறது.

    நாகநாதர், காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மலைக்கோட்டை அருகே நந்திகோவில் தெருவில் நாகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் கற்பக விருட்ச வாகனம், காமதேனு, பூத, கமல வாகனம், கைலாச பர்வதம், அன்ன வாகனம், இடப வாகனம், யானை, பூப்பல்லக்கு ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கடந்த 15-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது. 16-ந் தேதி நந்தி வாகனம், சிம்ம வாகனத்திலும், 17-ந்தேதி குதிரை வாகனத்திலும் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்தனர். நேற்று காலை 9.55 மணிக்கு மேஷ லக்னத்தில் பலவகையான பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி, அம்பாள் பிரியாவிடையுடன் சாமி தேரிலும், அம்பாள் அம்மன் தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பின்னர் பஞ்ச மூர்த்திகள் முன்னே செல்ல தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வடக்கு ஆண்டாள் வீதி, கீழ ஆண்டாள் வீதி, சின்னகடை வீதி, என்.எஸ்.பி. ரோடு, தெப்பக்குளம் நந்தி கோவில் தெரு வழியாக வலம் வந்த தேர், மீண்டும் மதியம் 1 மணியளவில் நிலையை அடைந்தது.



    இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, செயல் அலுவலர் ஜெயலதா மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    இன்று(செவ்வாய்க்கிழமை) காலை மாசி மகம், நடராஜர் தரிசனம், சிவகங்கை தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், 11 மணிக்கு மேல் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு இடப வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருள்கின்றனர்.

    நாளை(புதன்கிழமை) சுவாமி, அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கின்றனர். அன்று காலை நாக கன்னிகள், சாரமா முனிவர், நாகநாதரை முட்செவ்வந்தி மலர்களால் அர்ச்சித்தல் நிகழ்ச்சியும், இரவு விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

    இதேபோல, திருவெறும்பூர் அருகே சர்க்கார்பாளையத்தில் உள்ள காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி காசிவிசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், சர்க்கார்பாளையம், திருவெறும்பூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை தீர்த்தவாரியும், இரவு முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
    ×