search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mudra"

    • உயிர் காக்க உதவும் முத்திரை இது.
    • வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும்.

    இந்த முத்திரை படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனைகள் சரியாகின்றன. ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும். இதயத்தைப் பாதுகாக்க, ஒப்பில்லாத மருந்து முத்திரை வடிவில் நம் கைவிரல்களிலேயே உள்ளது. இந்த முத்திரைக்கு 'ம்ருத்யூ சஞ்சீவி' எனப் பெயர். 'ம்ருத்யூ' என்றால் மரணம். 'சஞ்சீவி' என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, 'மரணமில்லாதப் பெருவாழ்வு' என்பது இந்த முத்திரையின் பெயர்.

    செய்முறை :

    வலது கை: ஆள்காட்டி விரலை மடக்கி, கட்டை விரல் அடிரேகையைத் தொட வேண்டும்.

    இடது கை: கட்டைவிரல் நுனியுடன் மோதிரவிரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்கவும். சுண்டு விரல் நேராக நீட்டி இருக்க வேண்டும்.

    பலன்கள் : படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனைகள் சரியாகின்றன. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது. ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும்.

    உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். அதிகமாக வியர்த்தல், தலை சுற்றுதல் போன்ற பிரச்சனை இருக்கும்போது, இந்த முத்திரையைச் செய்தால் உடனடி பலன் தெரியும். வாயு அதிகமாவதால் ஏற்படும் வயிற்று உப்புசம், வயிற்றைப் பிரட்டுதல், மலச்சிக்கல், மலம் மற்றும் வாயு தங்கியிருந்து வலி ஏற்படுதல் ஆகியவை குணமாகும்.

    நெஞ்சு வலி, வாயுப்பிடிப்பு, நெஞ்சு எரிச்சல், குத்துதல் போன்றவை குணமாகும். ஹார்ட் பிளாக் பிரச்சனை இருப்பவர்கள், தொடர்ந்து செய்துவர அறுவைசிகிச்சையைத் தடுக்க வாய்ப்புகள் அதிகமாகும். 40 வயதைக் கடந்தவர்கள், மன அழுத்தச் சூழலில் இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் தினமும் இந்த முத்திரையைச் செய்துவர, இதய நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக்கொள்ள முடியும்.

    கட்டளைகள் : தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து செய்யலாம்; நாற்காலியில் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, பாதங்களைத் தரையில் பதித்துச் செய்யலாம். காலை, மாலை என வெறும் வயிற்றில் 10-30 நிமிடங்கள் வரை செய்யலாம். இதய அறுவைசிகிச்சை செய்தவர்கள், முத்திரை பயிற்சியாளரின் ஆலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும்.

    முத்திரையைச் செய்யத் தொடங்கும்போது, மிதமாக வலி வருவதுபோலத் தெரியும். ஏனெனில், முதன்முறையாக சீரான ரத்த ஓட்டம் செல்வதால் ஏற்படும் அறிகுறி இது. பின் வலி மறையும். தொடர்ந்து செய்துவர, நல்ல பலன்களை உணரலாம். அவசர காலத்தில், அதாவது நெஞ்சுவலி ஏற்பட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் செய்யலாம்.

    உயிர் காக்க உதவும் முத்திரை இது. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கவும். வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும். மருத்துவரை அணுகி சிகிச்சை தொடங்கும் வரை முத்திரையை விடாமல் செய்வது நல்லது.

    • உடலிலுள்ள அசுத்தம் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேறும்.
    • எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

    செய்முறை :

    இரு கைகளின் விரல்களை முதலில் மடக்கவும். ஆள்காட்டி விரல்களை மட்டும் வளைத்து ஒன்றோடொன்று இணைக்க வேண்டும். பின் இரு கட்டைவிரல்களையும் ஆள்காட்டி விரலுடன் நிமிர்ந்த நிலையில் இணைக்கவும். மணிக்கட்டுக்கு மேல் உள்ள கைகளின் கீழ்பகுதிகள் ஒன்றோடொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் மடக்கியபடி இருந்தால் போதும். இந்த மூன்று விரல்களும், வலது கை, இடதுகை, விரல்கள் இணையாமல் இடைவெளியுடன் இருக்க வேண்டும். இம்முத்திரையை நெஞ்சுக்கு அருகில் வைத்துக் கொள்ளவும்.

    பலன்கள் :

    உடலிலுள்ள அசுத்தம் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேறும். இறைசிந்தனை அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து உயர்வான எண்ணங்கள் உருவாகும். பற்று பாசம் குறையும்.

    • மனத்தெளிவு உண்டாகும்.
    • உடலின் எல்லா பாகங்களும் முறையாக இயங்கும்.

    செய்முறை :

    முதலில் சுண்டுவிரலை மடக்கி அதன்மீது கட்டைவிரலை வைத்து சிறிதளவு அழுத்தம் கொடுக்கவும். மோதிரவிரல், நடுவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவை நேராக இருக்க வேண்டும் ஒன்றைஒன்று தொடாமல் சிறிது இடைவெளி விட்டு ஒரு சூலத்தை போல் நேராக நிற்க செய்யவும்.

    பலன்கள் :

    உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பகைவர்கள் விலகுவர். மனத்தெளிவு உண்டாகும். தடைகள் விலகும். ஆன்மீக வளர்ச்சி ஏற்படும். உடலின் எல்லா பாகங்களும் முறையாக இயங்கும். தேஜஸ் கைகூடும். சூட்சுமமான பொருள்களை உணரும் ஆற்றல் கிட்டும்.

    • முதுகுத்தண்டைப் பலப்படுத்துவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றது.
    • கடுமையான வாதநோய்கள், முடக்குவாதம், பேச்சு தடுமாற்றம் குறையும்.

    குறிப்பிட்ட முத்திரைகள் கழுத்து இறுக்கத்தைப் போக்குவதன் மூலமும், கழுத்து, தோள் மற்றும் மேல் முதுகுத் தசைகளைப் பலப்படுதுவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றன. மேலும் மேல் முதுகுத்தண்டைப் பலப்படுத்துவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றது.

    செய்முறை

    பதுமாசனம், சுகாசனம் அல்லது வஜ்ஜிராசனத்தில் அமரவும். சுட்டும் விரல் மற்றும் நடு விரலை மடித்து உள்ளங்கையில், பெருவிரலின் கீழ் வைக்கவும். பெருவிரலை மடித்த விரல்கள் மீது மடித்து வைக்கவும்.

    மோதிர விரல் மற்றும் சிறுவிரலை நீட்டியவாறு வைக்கவும். பொதுவாக சூன்ய வாயு முத்திரையில் 15 நிமிடங்கள் இருந்தால் போதுமானது. உடல் நல உபாதைகளுக்காக செய்வதாக இருந்தால் 45 நிமிடங்கள் வரை சூன்ய வாயு முத்திரையைப் பழகவும்.

    பலன்கள்

    தெளிவின்மை, பொறுமையின்மை, காரணமற்ற பயம், கூச்சம், தள்ளாடுவது போன்ற உணர்வு, கைநடுக்கம், தலைசுற்றல், நரம்பு தளர்ச்சியை போக்கும். ஆழ்ந்த தூக்கம் தரும். கடுமையான வாதநோய்கள், முடக்குவாதம், பேச்சு தடுமாற்றம் குறையும். தைராய்டு, சுரப்பி குறைபாட்டால் ஏற்படும் சீரற்ற மாதவிடாய், குரல் கரகரப்பு, தோல் மற்றும் கூந்தல் வறட்சி ஆகியவை சரியாகும். வயோதிகத்தில் எலும்புகள் வலுவின்மை, தேய்மானம், பலவீனம் ஆகியவற்றுக்கு வலுசேர்க்கும்.

    • உடலில் தேங்கியுள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி நாள்பட்ட நோய்கள் அகலும்.
    • இந்த முத்திரையை தினமும் 15 முதல் 45 நிமிடங்களுக்கு பழகி வர வேண்டும்.

    முத்திரைப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் செய்ய வேண்டிய முதல் முத்திரை தூய்மைப்படுத்தும் முத்திரையாகும். இம்முத்திரையை ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் வரை தினமும் 15 முதல் 45 நிமிடங்களுக்கு பழகி வர வேண்டும். ஒரு வேளைக்கு 15 நிமிடமாக ஒரு நாளில் மூன்று வேளையாகவும் தூய்மைப்படுத்தும் முத்திரையைப் பழகலாம். உடலிலிருக்கும் நச்சுகளை இம்முத்திரையின் மூலம் அகற்றிய பின் பிற முத்திரைகளைத் தேவைக்கேற்பப் பழகலாம்.

    செய்முறை

    முதுகும் கழுத்தும் நேராக இருக்குமாறு அமரவும். கை விரல்களை விரிக்கவும். கையின் பெருவிரல் நுனியை மோதிர விரலின் அடிப்பகுதியில் இருக்கும் கோட்டின் மீது வைக்கவும். மிக லேசான அழுத்தம் தரவும். கண்களை மூடிக் கொள்ளவும். மனதை முத்திரை மீது வைக்கவும். சீரான சுவாசத்தில் இருக்கவும்.

    தூய்மைப்படுத்தும் முத்திரையைச் செய்யும் பொழுது உடலில் உள்ள நச்சுகள் சிறுநீர், மலம் அல்லது வியர்வை மூலமாக வெளியேறும். இதற்கான அறிகுறிகளாக அதிக சிறுநீர் போதல், சிறுநீரின் நிறம் மாறுதல், அதிக மலம் போதல், மலத்தின் தன்மை மற்றும் நிறம் மாறுதல், அதிக வியர்வை வெளியேறுதல் போன்றவை ஏற்படும். சில நாட்களில் இவ்வறிகுறிகள் மறைந்து உடல் நலம் மேம்படுவதை உணர்வீர்கள்.

    பலன்கள்

    உடலில் தேங்கியுள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி நாள்பட்ட நோய்கள் அகலும். மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை போக்கி நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்.

    தூய்மைப்படுத்தும் முத்திரையை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை செய்து சேரக் கூடிய கழிவுகளை வெளியேற்றவும்.

    • முதுகுத்தண்டைப் பலப்படுத்துவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றது.
    • இந்த முத்திரையை பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிரயோக படுத்துவதே நல்லது.

    குறிப்பிட்ட முத்திரைகள் கழுத்து இறுக்கத்தைப் போக்குவதன் மூலமும், கழுத்து, தோள் மற்றும் மேல் முதுகுத் தசைகளைப் பலப்படுதுவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றன. மேலும் மேல் முதுகுத்தண்டைப் பலப்படுத்துவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றது. பிரம்ம முத்திரையையும் நீங்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிரயோக படுத்துவதே நல்லது. மற்ற நேரத்திலும் பிரம்ம முத்திரையை பிடிக்கலாம். அதில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் அதிகப்படியான பலன்களை விரைவாக அடைய பிரம்ம முகூர்த்த நேரம் சரியானது.

    செய்முறை

    பதுமாசனம், சுகாசனம் அல்லது வஜ்ஜிராசனத்தில் அமரவும். இரண்டு உள்ளங்கைகளையும் தொடையின் மீது வைக்கவும். இரண்டு கைகளின் பெரு விரல்களையும் மடித்து, பெருவிரலின் நுனி சிறுவிரலின் அடியில் இருக்குமாறு வைக்கவும்.

    மீதமுள்ள நான்கு விரல்களையும் பெருவிரலின் மேல் வைத்து மூடவும். இப்பொழுது இரண்டு கைகளின் மடிக்கப்பட்ட விரல்களும் ஒன்றோடு ஒன்று சேருமாறு வைக்கவும். சற்றே அழுத்தம் கொடுக்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரம்ம முத்திரையில் இருக்கவும்.

    • பிணிகளுக்கான சிறந்த தீர்வாக குறிப்பிட்ட முத்திரைகள் திகழ்கின்றன.
    • 30 நிமிடங்கள் வரை இம்முத்திரையில் இருக்கவும்.

    நம் விரல் நுனி ஒவ்வொன்றிலும் மூவாயிரத்திற்கும் அதிகமான தொடு உணர்வு ஏற்பிகள் (touch receptors) உள்ளன. இவை மெல்லிய அழுத்தத்தின் மூலம் தூண்டப் பெறுகின்றன. கை மூளையின் பல பகுதிகளோடு தொடர்பு கொண்டது. தொடு உணர்வு ஏற்பிகள் மெல்லிய அழுத்தத்தால் தூண்டப்படும் போது மூளையின் குறிப்பிட்ட பகுதிகளின் செயல்பாடுகளைத் தூண்டி உடல், மன நலத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஆகையினால் பிணிகளுக்கான சிறந்த தீர்வாக குறிப்பிட்ட முத்திரைகள் திகழ்கின்றன.

    ஆஸ்துமா முத்திரை சுவாசத்தைச் சீராக்குகிறது. நுரையீரலை பலப்படுத்துகிறது. மூச்சுத் திணறலைப் போக்கவும் தவிர்க்கவும் இம்முத்திரை உதவுகிறது.

    செய்முறை

    இரண்டு கைகளின் நடுவிரல்களின் நகங்களை ஒன்றாக வைக்கவும். உள்ளங்கைகளின் அடிப்பகுதிகளை ஒன்றாக வைத்து மற்றைய விரல்களை ஒன்றோடு ஒன்று சேர்க்காமல் வைக்கவும். 30 நிமிடங்கள் வரை இம்முத்திரையில் இருக்கவும்.

    • உடலின் மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமன்படுத்துகிறது.
    • ஒவ்வொரு முத்திரைக்கும் குறிப்பிட்ட சில பலன்கள் உண்டு.

    கை விரல்களினால் செய்யப்படும் முத்திரைகள் குறித்து பல்வேறு புராதனமான நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. பிரபஞ்சத்தில் இருக்கும் அய்ந்து மூலகங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே மனித உடலிலும் உள்ளன; மனித உடல், மனம் ஆகியவற்றை இயக்கவும் செய்கின்றன. உடல், மன நலத்திற்கு இந்த அய்ந்து மூலகங்களும் சீரான அளவில் இருத்தல் இன்றியமையாததாகும்.

    மனித உடலின் ஒவ்வொரு விரலோடும் ஒவ்வொரு மூலகம் தொடர்புடையது.

    பெருவிரல் – நெருப்பு

    சுட்டு விரல் – காற்று

    நடு விரல் – ஆகாயம்

    மோதிர விரல் – நிலம்

    நீர் – சிறு விரல்

    குறிப்பிட்ட விரல்களை குறிப்பிட்ட முறைகளில் சேர்க்கும் பொழுது அவ்விரல்களோடு தொடர்புடைய மூலகத்தின் இயக்கம் சீராகிறது. ஒவ்வொரு முத்திரைக்கும் குறிப்பிட்ட சில பலன்கள் உண்டு. அவ்வாறான முத்திரைகளைப் பயிலும்போது ஏற்படும் நன்மைகளில் சில:

    நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது.

    உடலின் மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமன்படுத்துகிறது.

    நுரையீரல் நலனைப் பாதுகாக்கிறது.

    இருதயத்தின் செயல்பாடுகளைச் சீராக்குகிறது.

    மூளையில் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.

    பிராண ஆற்றலை வளர்க்கிறது.

    சருமத்தைப் பாதுகாக்கிறது.

    சீரண இயக்கத்தை சரி செய்கிறது.

    தூக்கமின்மையைப் போக்குகிறது.

    அமைதியின்மையைப் போக்குகிறது

    • தொடர்ந்து 48 நாட்கள் இடைவிடாமல் காலை / மதியம் / மாலை பயிற்சி செய்யவும்.
    • இது ஒரு சங்கல்ப முத்திரையாகும். நாம் நினைத்ததை நிச்சயம் அடையலாம்.

    இன்று நிறைய நபர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுடைய திறமை வெளிப்படவும், அதனை பயன்படுத்தி முன்னேற வாய்ப்பு கிடைக்க குபேர முத்திரையை பயில வேண்டும். இதன் மூலம் நமது திறமை வெளிப்படும். திறமைக்கேற்ற வேலையிலும் நாம் அமரலாம். தன்னம்பிக்கை கிடைக்கும். இம் முத்திரையை காலை, மதியம், மாலை மூன்று வேளையும் ஐந்து நிமிடங்கள் செய்ய வேண்டும். சாப்பிடுமுன் செய்யவும்.

    குபேர முத்திரை செய்முறை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமரவும். மோதிரவிரல், சுண்டு விரலை மடித்து உள்ளங்கையில் வைக்கவும். ஆள்காட்டி விரல், நடு விரலை மடித்து அதன் மையத்தில் கட்டை விரலை தொடவும். இரு கைகளிலும் செய்யவும். கைகளை முட்டியின் மேல் வைக்கவும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் ஐந்து முறை. பின் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும்.

    ஆள் மனதில், எனது திறமை நிச்சயம் வெளிப்படும். என் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். அதில் நான் சிறப்பாக பணி செய்வேன், நல்ல பொருளாதார மேன்மை கிட்டும். அதனை நல்வழிக்கு பயன்படுத்துவேன் என்று மூன்று முறை கூறி விட்டு சாதாரண மூச்சில் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

    தொடர்ந்து 48 நாட்கள் இடைவிடாமல் காலை / மதியம் / மாலை பயிற்சி செய்யவும். அளவிடற்கரிய பலன்கள் கிட்டும். பண்புகள் மாறும், திறமை வெளிப்படும். திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இது ஒரு சங்கல்ப முத்திரையாகும். நாம் நினைத்ததை நிச்சயம் அடையலாம்.

    தினமும் காலை எழுந்தவுடன் நிமிர்ந்து அமர்ந்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடுங்கள். பத்து முறைகள், இதே போல் மதியம், மாலை பயிற்சி செய்யுங்கள் நல்ல பிராண சக்தி உடல் முழுவதும் பாயும். தெளிந்த சிந்தனை பிறக்கும். அறிவில் மலர்ச்சி உண்டாகும். அத்துடன் காலை எழுந்து குளித்துவிட்டு கிழக்கு முகமாக ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து சிறிய நாடிசுத்தி என்ற பயிற்சியை செய்யவும்.

    இடது கை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.

    வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடவும். இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். பின் இடது நாசியை மோதிரவிரலால் அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசியிலேயே மூச்சை மெதுவாக வெளிவிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும்.

    பின் வலது நாசியை அடைத்து இடது நாசியில் மூச்சை இழுத்து இடதை அடைத்து வலது நாசியில் மூச்சை விடவும். இடதில் இழுத்து வலதில் மூச்சை விடவும். பத்து முறைகள் செய்யவும்.

    பின் இடது நாசியை அடைத்து வலதில் இழுத்து இடது நாசியில் வெளிவிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும். இதனை காலை / மாலை இரு வேளை செய்யவும்.

    இந்த பயிற்சியின் மூலமாக மூளை செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாயும். சுறுசுறுப்பாகவும். உற்சாகமாகும் இருக்கலாம். சிந்தனை தெளிவு பிறக்கும். அறிவில் மலர்ச்சி உண்டாகும். நமது திறமை நன்கு வெளிப்படும்.

    திறமை வெளிப்பட அன்றாட வாழ்க்கைமுறை

    அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிட வேண்டும். காலை கடன்களை முடித்துவிட்டு எளிய குபேர முத்திரை, மூச்சு பயிற்சி செய்துவிட்டு கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடங்கள் இருக்கவும். இது ஒரு தியானமாகும். நமது மூச்சில் கவனம் செலுத்தும் பொழுது மனம் ஒருமுகப்படும். மன அமைதி கிடைக்கும். நமக்குள் உள்ள திறமை வெளிப்படும்.

    காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் காலை உணவு அருந்தவும். மதியம் 1 மணி முதல் 1.30 மணிக்குள் மதியம் உணவு அருந்தவும்.

    இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு உணவு அரைவயிறு சாப்பிடவும். இரவு 10 மணிக்கு படுத்துவிட வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஆழ்ந்த உறக்கம் வேண்டும்.

    எண்ணெய் பண்டம், மைதாவினால் ஆன உணவு, அதிக காரம், அதிக புளிப்பு, தவிர்த்து காய்கறிகள், கீரைகள், பழங்கள், உணவில் அதிகம் சேர்க்கவும். இப்படி வாழ்வை அமைத்தால்தான் உடல் ஆரோக்கியம் கிட்டும். உடல் உள் உறுப்புக்கள் நன்கு இயங்கினால்தான் திறமை வெளிப்படும். அதனை பயன்படுத்தி வளமாக வாழலாம்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    • மனித உடலில் ஜீரண மண்டலம் மிக முக்கியமானது.
    • நாம் உண்ணும் உணவின் சத்து ரத்தத்துடன் சேர வேண்டும்.

    இன்று நம் நாட்டில் வயிற்றில் கட்டிகள், குடல் புண், குடலில் புற்றுக்கட்டிகள் என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதிகமாக வருகின்றது. இதற்குரிய காரணங்களை நாம் முதலில் தெரிந்து கொள்வோம். பின்பு இதற்குரிய யோகப்பயிற்சிகளையும் காண்போம்.

    மனித உடலில் ஜீரண மண்டலம் மிக முக்கியமானது. நாம் உண்ணும் உணவு அதன் தரம், தன்மையை பொறுத்துதான் ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கி, சத்து, அசத்தை பிரிக்கும். அதற்கு நுரையீரல், சிறுகுடல், பெருங்குடல் சரியாக இயங்க வேண்டும். ஒரு மனிதனுடைய உடலில் காலை - மாலை இருவேளையும் கழிவுகள் (மலம்) சரியாக வெளியேற வேண்டும். நாம் உண்ணும் உணவின் சத்து ரத்தத்துடன் சேர வேண்டும். அசத்து தனியாக வெளியேற வேண்டும். அதற்கு நாம் எடுக்கும் உணவு சாத்வீகமாக இருக்க வேண்டும்.

    மைதாவினால் ஆன உணவுகள்,அசைவம் போன்ற உணவுகளை அடிக்கடி உட்கொண்டால் ஜீரண மண்டலம் பாதிக்கும். குடலில் புண்கள் ஏற்படும், குடலில் கழிவுகள் தங்கி அது கட்டிகளாக மாறும். பசிக்கும் பொழுது சாப்பிட வேண்டும். பசியறிந்து சாப்பிடவேண்டும். பசிக்கும் பொழுது சாப்பிடாததும், பசியில்லாத பொழுது சாப்பிடுவதும் ஜீரண மண்டலத்தை பாதிக்கும்.

    முடிந்த அளவு பழவகைகள், காய்கறிகள் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள், பசிக்கும் பொழுது பசியறிந்து சாப்பிடுங்கள். பொதுவாக நிறைய நபர்கள் எனக்கு அதிக காரமாக சமைத்தால்தான் பிடிக்கும் என்பார்கள். தொடர்ந்து அதிக காரமான உணவினை உண்பதால் நாளாக நாளாக சிறுகுடல், பெருங்குடல் இயக்கம் பாதிக்கும். புண்கள் வரும். பின்பு கழிவுகள் சரியாக வெளியேறாமல் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும். கட்டிகளாக வயிற்றில் குடல் பகுதி வால்வு பகுதியில் உருவாகும். அதனால் பசி இருக்காது. அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். சாப்பிட்டவுடன் வயிறு வலிக்கும். இதற்கெல்லாம் காரணம் அதிக காரம் சாப்பிடுவது. அதிக உப்பு, அதிக புளிப்பு உணவில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    சூரிய முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    மாதங்கி முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இரு கைவிரல்களை கோர்த்து நடுவிரல் மட்டும் படத்தில் உள்ளது போல் நேராக சேர்த்து வைக்கவும். கையை வயிற்றுக்கு நேராக சேர்த்து வைக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

    மாதுளம் பழம், கொய்யா பழம் ,உணவில் அடிக்கடி எடுக்கவும். வேப்ப இலை கொழுந்து 15 நாட்களுக்கு ஒரு முறை காலை வெறும் வயிற்றில் ஒரு பிடி சாப்பிடவும். வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரை உணவில் எடுக்கவும்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    • நிதானமாகவும், பதட்டம் இல்லாமலும் நாம் வாழ யோகா முத்திரைகள் நமக்கு முழுமையாக பயன்படுகின்றன.
    • இரவு தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக, மிக அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    ஒரு மனிதனுடைய உடலில் ஜீரண மண்டலம் நன்றாக இயங்க வேண்டுமெனில் உடலுக்குறிய ஓய்வு வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை உடல் ஓய்வில் தூக்கத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் நன்றாக இயங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கினால்தான் சிறுகுடல் நன்கு இயங்கும். இதற்கு இரவு தூக்கம் மிக முக்கியமாகும்.

    இன்று நிறைய நபர்கள் இரவு வேலை பார்ப்பதால் இரவு தூக்கமில்லை, இதனால் அஜீரணக் கோளாறு, அல்சர், வயிற்றில் கட்டிகள் வருகின்றது. அது கேன்சர் ஆக கூட மாறிவிடுகின்றது. எனவே இரவு தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக, மிக அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    இன்றைய பரபரப்பான உலகில் மனிதர்கள் மத்தியில் நிதானமாக செயல்படும் நிலை குறைந்து கொண்டே வருகின்றது. காலை முதல் இரவு படுக்கும் வரை ஒரு பதட்டமான மன நிலையில் வேகமாக ஓடுகின்றனர். நிதானம், பொறுமை இழந்து விடுகின்றனர். இதனால் இதயத்துடிப்பு சீராக இருப்பதில்லை. இதன் காரணமாகவும் ஜீரண மண்டலம் பாதிப்படைகின்றது. குடல் இயக்கம் பாதிப்பு அடைகின்றது. எனவே நிதானமாகவும், பதட்டம் இல்லாமலும் நாம் வாழ வேண்டும். அதற்கு யோகா முத்திரைகள் நமக்கு முழுமையாக பயன்படுகின்றன.

    மேற்குறிப்பிட்ட பண்புகளை சரி செய்துவிட்டு மாதங்கி முத்திரையும், சூரிய முத்திரையும் காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    சூரிய முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    மாதங்கி முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இரு கைவிரல்களை கோர்த்து நடுவிரல் மட்டும் படத்தில் உள்ளது போல் நேராக சேர்த்து வைக்கவும். கையை வயிற்றுக்கு நேராக சேர்த்து வைக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

    மாதுளம் பழம், கொய்யா பழம் ,உணவில் அடிக்கடி எடுக்கவும். வேப்ப இலை கொழுந்து 15 நாட்களுக்கு ஒரு முறை காலை வெறும் வயிற்றில் ஒரு பிடி சாப்பிடவும். வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரை உணவில் எடுக்கவும்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    • பிரிதிவி முத்திரை ஒரு நாளில் இரண்டு நிமிடம் ஐந்து முறைகள் செய்யவும்.
    • காலை / மதியம் / மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.

    மனித உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானதுதான். அதில் பற்கள் மிக முக்கியமானது. பற்களுக்கும் தலை நரம்பு மண்டல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பற்கள் வலி வருவதற்கும், ஈறுகளில் ரத்தம் வருவதற்கும் காரணம், நமது உணவு முறை, பழக்க வழக்கம். முடிந்த வரை பழம், கீரை, காய்கறிகள் மட்டும் உணவில் உண்ணுங்கள். மாமிசம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காலை / இரவு வேப்பங்குச்சி வைத்து பல் துலக்குங்கள்.

    பல் கூச்சம், ஈறு வீக்கம், பற்களில் ரத்தம் வருவது, பல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு யோகா முத்திரையில் தீர்வு உள்ளது.

    பிரிதிவி முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமருங்கள். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும் பத்து வினாடிகள். பின் மோதிர விரலால் பெருவிரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.

    இரண்டு நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.

    பின் எல்லா கைவிரல் நுனிகளில் ஒரு அழுத்தம் கொடுக்கவும். ஒவ்வொரு கைவிரல் நுனியிலும் ஐந்து முறை (பெருவிரல் ஆள்காட்டி விரலை குவித்து அதன் மையத்தில் கைவிரலை வைத்து அழுத்தம் கொடுக்கவும்)

    பிரிதிவி முத்திரை ஒரு நாளில் இரண்டு நிமிடம் ஐந்து முறைகள் செய்யவும்.

    15 நாட்களுக்கு ஒரு முறை வேப்ப இலை கொழுந்து காலையில் சாப்பிடவும். வெந்நீர் அதில் உப்பு போட்டு சுடவைத்து ஆறியவுடன், இளஞ் சூட்டில் வாயில் ஊற்றி கொப்பளிக்கவும். இரவு படுக்குமுன் இதனை செய்யவும்.

    கிராம்பு ஒன்று வாயில் ஒதுக்கி அதன் சாறு பற்களில் படும்படி செய்யவும்.

    கரும்பு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு அரை துண்டு பற்களில் மென்று சாப்பிடவும்.

    சுத்தமான நல்ல எண்ணெய் வாரம் ஒருமுறை வாயில் ஒரு கரண்டி ஊற்றி நன்கு கொப்பளிக்கவும். இதனை கடைபிடியுங்கள் பற்கள் ஈறுகள் சிறப்பாக இயங்கும்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    ×