search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money recovery"

    • ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
    • பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மோசடி மற்றும் செல்போன் திருட்டு தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்தன.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அந்த செல்போன்களை யார் பயன்படுத்தி வருகிறார்கள்? என கண்டுபிடித்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அதன்படி புதுவையை சேர்ந்த 70 பேரின் செல்போன்களை போலீசார் மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.

    இந்த செல்போன்களை காவல்துறை தலைமையகத்தில் அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி.பிரிஜேந்திரகுமார் யாதவ் வழங்கினார்.

    மேலும் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து போலீஸ் டி.ஐ.ஜி. பிரிஜேந்திர குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடப்பாண்டில் மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தது தொடர்பாக 24 வழக்குகளில் 13 வழக்கில் ரூ.94 லட்சம் மீட்கப்பட்டது.

    பெண்களுக்கு எதிரான 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைதாகி உள்ளனர்.

    பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    • வட மாநிலத்தவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்
    • ரெயில் மாறி ஏறிவிட்ட பதட்டத்தில் தவறவிட்டார்

    ஜோலார்பேட்டை:

    மேற்கு வங்காள மாநிலம் பரணகல் பகுதியைச் சேர்ந்தவர் பிமல் (வயது 52). இவர் ஒசூரில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக, சொந்த ஊரில் இருந்து ரெயில் மூலம் நேற்று காலை கர்நாடக மாநிலம் கே.ஆர். புரம் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

    அங்கிருந்து மாற்று ரெயில் மூலம் ஓசூர் செல்வதற்கு அவர் தவறுதலாக பெங்களூரில் இருந்து திருப்பதி செல்லும் ரெயிலில் ஏறிவிட்டார்.

    தவறுதலாக ஏறியதை அறிந்த அவர் உடனடியாக ரெயிலில் இருந்து இறங்கி விட்டார். அவ சரமாக இறங்கியதால் தனது சூட்கேஸ், பையில் வைத்தி ருந்த ரூ.40 ஆயிரம் ஆகிய வற்றை தவற விட்டுவிட்டார்.

    இது குறித்து அவர் கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனடியாக ரெயில்வே போலீசார் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தயாராக இருந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி மற்றும் போலீசார். அந்த ரெயில் ஜோலார்பேட்டை வந்த டைந்ததும் ரெயில் பெட்டி யில் இருந்து சூட்கேஸ், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டனர்.

    பின்னர் உரியவருக்கு தக வல் தெரிவித்து, அவரை வரவழைத்து சூட்கேஸ் மற் றும் பணத்தை ஆகியவற்றை ஒப்படைத்தனர். இதனை பெற்று கொண்ட அவர் பணத்தை மீட்டு கொடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

    ×