search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் தவற விட்ட ரூ.40 ஆயிரம் மீட்பு
    X

    ரெயிலில் தவற விட்ட ரூ.40 ஆயிரம் மீட்பு

    • வட மாநிலத்தவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்
    • ரெயில் மாறி ஏறிவிட்ட பதட்டத்தில் தவறவிட்டார்

    ஜோலார்பேட்டை:

    மேற்கு வங்காள மாநிலம் பரணகல் பகுதியைச் சேர்ந்தவர் பிமல் (வயது 52). இவர் ஒசூரில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக, சொந்த ஊரில் இருந்து ரெயில் மூலம் நேற்று காலை கர்நாடக மாநிலம் கே.ஆர். புரம் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

    அங்கிருந்து மாற்று ரெயில் மூலம் ஓசூர் செல்வதற்கு அவர் தவறுதலாக பெங்களூரில் இருந்து திருப்பதி செல்லும் ரெயிலில் ஏறிவிட்டார்.

    தவறுதலாக ஏறியதை அறிந்த அவர் உடனடியாக ரெயிலில் இருந்து இறங்கி விட்டார். அவ சரமாக இறங்கியதால் தனது சூட்கேஸ், பையில் வைத்தி ருந்த ரூ.40 ஆயிரம் ஆகிய வற்றை தவற விட்டுவிட்டார்.

    இது குறித்து அவர் கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனடியாக ரெயில்வே போலீசார் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தயாராக இருந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி மற்றும் போலீசார். அந்த ரெயில் ஜோலார்பேட்டை வந்த டைந்ததும் ரெயில் பெட்டி யில் இருந்து சூட்கேஸ், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டனர்.

    பின்னர் உரியவருக்கு தக வல் தெரிவித்து, அவரை வரவழைத்து சூட்கேஸ் மற் றும் பணத்தை ஆகியவற்றை ஒப்படைத்தனர். இதனை பெற்று கொண்ட அவர் பணத்தை மீட்டு கொடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×