search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mechanic kidnapping"

    திருப்பூரை சேர்ந்த மெக்கானிக் கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் முகேஷ் குமார் (35). மெக்கானிக். இவர் தென்னம்பாளையத்தில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் முகேஷ் குமார் மாயமானார். அவர் தனது மனைவி உஷா ராணிக்கு போன் செய்து தன்னை கடத்தி சென்று விட்டதாகவும், தாராபுரம் அருகே உள்ள காட்டு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நடைபெறும் இடத்தில் விட்டு சென்றதாகவும் கூறி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உஷாராணி தனது தம்பியுடன் தாராபுரம் வந்தார். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தனது கணவரை கடத்தி சென்றது குறித்து புகார் அளித்தார்.

    இது தொடர்பாக திருப்பூரில் தான் புகார் அளிக்க வேண்டும் என முதலில் கூறிய தாராபுரம் போலீசார் பின்னர் தாங்கள் விசாரிப்பதாக கூறினார்கள்.

    அதன்படி மாயமான முகேஷ் குமாரை தேடி வருகிறார்கள்.

    ×