search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maratha Quota Demand"

    மராத்தா போராட்டத்திற்கு ஆதரவாக அந்த சமுதாயத்தை சேர்ந்த 3 பேர் உயிர் தியாகம் செய்த நிலையில் மேலும் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Maharashtra #MarathaQuota #Suicide
    மும்பை:

    மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வரும் மராத்தா சமுதாயத்தினரின் தீவிர போராட்டம் வன்முறை களமாக மாறியுள்ளது. மராத்தா சமுதாயத்தினரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் மாநில அரசு திணறிக்கொண்டு இருக்கிறது.

    இந்தநிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் அந்த சமுதாயத்தை சேர்ந்த 3 பேர் கோரிக்கைக்காக உயிர் தியாகம் செய்தனர். இந்தநிலையில், மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினைக்கு ஆதரவாக நாந்தெட்டை சேர்ந்த கச்ரு கல்யானே(வயது38) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    மேலும் பீட் மாவட்டம் கெத் தாலுகாவில் உள்ள வீடா கிராமத்தை சேர்ந்த அபிஜித் தேஷ்முக் (35) நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதன் மூலம் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.  #Maharashtra #MarathaQuota #Suicide
    ×