என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Lamp"
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் பால்குடம் அபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாலை மகா மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
குத்துவிளக்கு பூஜையை முன்னிட்டு மகாமாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா மாரியம்மனை தரிசனம் செய்துஅருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- காரைக்குடி பிரபு பல் மருத்துவமனையில் இலவச வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
- காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்.
காரைக்குடி
காரைக்குடி முடியரசன் சாலையில் உள்ள பிரபு பல் மருத்துவமனையில் இலவச வாய் மற்றும் வாய்வழி புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார். இதில் வாய்வழி மற்றும் மாக்சில்லோ பேஷியல் நோயியல் நிபுணர் டாக்டர் அருணா சிவதாஸ் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பரிசோதனைகளை செய்து கொண்டனர். 20 பேருக்கு ஆய்வகத்தில் பயாப்ஸி சோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பிரபு டெண்டல் நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் பிரபு, டாக்டர் பாஸ்கர சேதுபதி, மருத்துவர்கள் அம்ரிதா, பிரியங்கா, நகர்மன்ற உறுப்பினர்கள் ஹரிதாஸ், கண்ணன், தெய்வானை, கலா காசிநாதன், முன்னாள் நகர இளைஞரணி செயலாளர் காரை சுரேஷ், அப்துல் கலாம் கிட்ஸ் பள்ளி தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காரைக்குடி பகுதியில் இதுபோன்ற வாய் புற்றுநோய் இலவச கண்டறியும் முகாம் நடந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்