search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kosathalai river"

    செம்பேடு கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் டிராக்டர் மூலம் மணல் எடுத்தவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் செம்பேடு கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் டிராக்டர் மூலம் மணல் எடுத்த சுதாகர்(40) என்பரை வெங்கல் போலீசார் கடந்த மாதம் 4-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரிக்கு ரவிக்குமாருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து சுதாகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓரு வருடம் சிறையில் அடைக்க கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். #tamilnews
    ×