search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jambukeshwara temple"

    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் வருகிற டிசம்பர் மாதம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.
    நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் ஆகிய பஞ்சபூத தலங்களில் நீர் தலமானது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். சைவ கோவில்களில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக உப சன்னதிகளான 45 பரிவார தெய்வங்களுக்கு பாலாலய பூஜை நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகள், ஹோமம் நடந்தது. பாலாலய பூஜையையொட்டி உப சன்னதிகள் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் வழிபாட்டிற்காக சுவாமி படங்கள் வெளியில் வைக்கப்பட்டுள்ளன. மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, விநாயகர் சன்னதிகளில் பாலாலய பூஜை வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி மாலை நடைபெற உள்ளது. இதனால் இந்த சன்னதிகளில் வழக்கம் போல பக்தர்கள் வழிபாடு நடத்தலாம்.

    இந்த நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் தேதியை கோவில் நிர்வாகம் நேற்று முறைப்படி அறிவித்துள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 9, 12-ந்தேதிகளில் 2 கட்டமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 45 பரிவார தெய்வங்கள், விமானங்களுக்கு டிசம்பர் மாதம் 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் காலை 8.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.

    இதற்காக யாகசாலை பூஜைகள் டிசம்பர் மாதம் 6-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் தொடங்கும். 2-ம் கட்டமாக மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உள்ளிட்ட பிரதான சன்னதிகளுக்கும், ராஜகோபுரம், மல்லப்பன் கோபுரம், கார்த்திகை கோபுரம், சங்கேமிஸ்வரர் கோபுரம், சுந்தரபாண்டியன் கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கும் டிசம்பர் மாதம் 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேல் பிரதான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்பின் அன்றைய தினம் மாலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

    கும்பாபிஷேக விழாவுக்கான பணிகள் நன்கொடையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோவில் வட்டாரத்தில் தெரிவித்தனர். ரூ.3½ கோடியில் புனரமைப்பு பணிகளும், ரூ.72 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் மின்விளக்குகள் உள்பட மின்சார தொடர்பான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் யாகசாலை பூஜைக்காக நேற்று முகூர்த்தகால் நடப்பட்டது. கோவில் அலுவலகம் அருகே யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. மொத்தம் 18 குண்டங்கள் அமைக்கப்பட உள்ளது.

    2-ம் கட்ட கும்பாபிஷேகத்திற்கு சுந்தரபாண்டியன் கோபுரம் அருகே 23 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்படும் என அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மற்றும் அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். நன்கொடையாளர்களும் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். 
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் 12-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக வருகிற 28-ந்தேதி பாலாலயம் நடக்கிறது.
    நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற ஐம்பூதங் களில் இறைவன் நீர் தலமாக வீற்றிருந்து அருள்பாலிப்பது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். இக்கோவிலின் பரிவார சன்னதிகள் மற்றும் கோபுரங்கள், விமானங்கள் சீரமைப்பு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. திருப்பணி வேலைகள் இறுதி கட்டத்தை எட்டி இருப்பதையொட்டி வருகிற 28-ந்தேதி பாலாலயம் நடைபெற உள்ளது.

    பாலாலயத்திற்கான யாகசாலை பூஜைகள் அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும். காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளில் பாலாலயம் நடைபெற இருப்பதால் பக்தர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் வருகை தந்து இறைவனின் அருள் பெறும்படி கோவில் வளாகத்தில் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.

    இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை வருகிற டிசம்பர் மாதம் 12-ந்தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளில் கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்து சமய அறநிலைய துறையின் அனுமதி கிடைத்ததும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    பஞ்சபூத தலங்களில் நீர்த் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி, அதன்படி, கடந்த 2012-ம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் தள்ளிப்போனது.

    பின்னர், கோவில் நிர்வாகம் மற்றும் பக்த பிரமுகர் களின் முயற்சியால் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை வருகிற டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடித்து 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் நவராத்திரி மண்டபத்தில் ஒரு யாகசாலையும், கீழவாசல் சவுந்தரபாண்டியன் கோபுரம் அருகில் மற்றொரு யாகசாலையும் அமைக்கப்பட உள்ளது. நவராத்திரி மண்டபத்தில் அமைக்கப்படும் யாகசாலையில் டிசம்பர் 7-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி 9-ந் தேதி காலை ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்கள் மற்றும் பரிவார தேவதைகள் சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    சவுந்தரபாண்டியன் கோபுரம் அருகில் அமையும் யாகசாலையில் 10-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி 12-ந் தேதி காலை பிரதான சன்னதிகளான பிரசன்ன விநாயகர், ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி விமானங் களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து டிசம்பர் மாதம் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறையின் அனுமதிபெற கோவில் நிர்வாகம் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவல்களை கோவில் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. 
    ×