என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » investigate idol theft cases
நீங்கள் தேடியது "Investigate Idol Theft Cases"
சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #IdolTheftCases #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC
சென்னை:
தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தனர். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க முடியாது என சிபிஐ தெரிவித்ததாக தமிழக அரசு கூறியது.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அரசாணை பிறப்பித்தது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும், சிபிஐ மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே, ஆள் பற்றாக்குறையால் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க முடியாது என்று சிபிஐ கூறியுள்ளது. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. #IdolTheftCases #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC
தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தனர். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க முடியாது என சிபிஐ தெரிவித்ததாக தமிழக அரசு கூறியது.
‘உயர்நீதிமன்ற தடையால் மேல் நடவடிக்கையை தொடர முடியவில்லை என்று கூறியுள்ள மத்திய அரசு, சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான விவரங்களை அனுப்பும்படி கேட்டுள்ளது’ என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அரசாணை பிறப்பித்தது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும், சிபிஐ மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே, ஆள் பற்றாக்குறையால் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க முடியாது என்று சிபிஐ கூறியுள்ளது. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. #IdolTheftCases #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X